Monday, 1 October 2018
விபச்சாரம் சம்பந்தமாக எழுத கூடாது என நினைத்து மறைத்து வந்த எனக்கு சில வாரங்களாகவும் சில நாட்களாகவும் எனது கண்கூடாகக் காணும் சில அருவருக்கத்தக்க விடயங்களையும் ஒரு சிங்கள பெண்ணின் பதிவேற்றத்தின் பின்னரும் மறைமுகமாக சில விஷயங்களை மக்களுக்கு எடுத்துக் கூறி தான் ஆக வேண்டும் என நினைக்கின்றேன்....!!
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் முஸ்லிம் வாலிப பெண்களும், முஸ்லிம் வாலிபர்களும் ரயில் பயணம் லீலைகளும் என்ற தலைப்பில் முஸ்லிம் சமூகத்திற்கு ஆதாரபூர்வமாக கீழ்காணும் படங்களுடன் விமர்சித்திருந்தார்.
இதற்கான காரணம் என்ன என நான் ஒரு சம்பவத்தை இங்கு குறிப்பிடலாம் என நினைக்கின்றேன் மறைமுகமாக.
காரணம் மார்க்க அறிவு நமது சந்ததிகளுக்கு கொடுக்கப்படாமல் அறிவை பல கோணங்களில் பெறுவதால் எமது பெண்களால் பல கோணங்களில் தற்போது மிகப்பெரும் அவமானங்கள் ஏற்பட்டு வருவதை பல ரூபங்களில் நாம் அவதானிக்கலாம் அதில் ஒரு உண்மைச்சம்பவம் இதோ...!!
கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக ஒரு இஸ்லாம் அல்லாத ஒரு வாலிபர் என்னை சந்தித்தார்.
அவர் ஆரம்ப காலங்களில் என்னுடன் வியாபாரத் தொடர்பு வைத்திருந்தார்.
சில காலங்களாக அவர் என்னை சந்திப்பதை என்னோடு வியாபாரம் செய்வதை முற்று முழுதாக நிறுத்திக்கொண்டார் தற்போதும் அது ஏற்பட்டுள்ளது.
திடீரென எனக்கு தொலைபேசி ஊடாக ஒரு அழைப்பை விடுத்தார் உங்களை சந்தித்து பேச வேண்டுமென.
நானும் அவரும் ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து சந்திப்பை ஏற்படுத்தினோம் அந்த சந்திப்பில் அந்த வாலிபர் எனக்கு முன் வைத்த முதல் கட்டளை உங்களுடைய தொலைபேசியை முற்று முழுதாக நிறுத்துமாறும் வீடியோ ரெக்கார்ட் எடுப்பதை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டார்.
சரி என நானும் சென்று விடயத்தை கூறுமாறு கேட்டுக் கொண்டேன் தொடர்ந்து உரையாற்றுகையில் நான் ஒரு முஸ்லிம் மாணவியை காதல் செய்வதாகவும் அப்பெண் என்னை காதல் செய்வது ஆகும் பேஸ்புக் மூலமாக பேசிக்கொண்டோம் என்றார்.
சரி அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என வினவியபோது நீங்கள் தான் எங்கள் திருமணத்திற்கு உதவ வேண்டும் எனக் கூறினார்.
இதற்கு எப்படி நான் உதவ முடியும் அவர் தாய் தந்தையை அல்லவா இதற்கு முடிவு எடுக்க வேண்டும் என்றேன்.
தொடர்ந்து உரையாற்றுகையில் அந்த மாணவியை உங்களுக்கு எப்படி தெரியும் என வினவினேன்..?
அவர் கூறிய பதில் முஸ்லிம் பிரதேசத்திலிருந்து அம்மாணவி எங்களது பிரதேசத்திற்கு வகுப்புக்கு வருவதாகவும் அந்த வகுப்புக்கு வந்து செல்லும் போது தான் தொலைபேசி இலக்கத்தை கொடுத்து தொடர்பு கொண்டதாகவும் பின்னர் நாங்கள் பேஸ்புக் வாட்ஸ்அப் ஊடாக எங்களது காதலை பரிமாறிக் கொண்டோம் என கூறினார்.
உங்கள் காதலை முதலில் கூறியது யார் என வினவினேன்..??
உங்கள் முஸ்லிம் மாணவி தான் முதலில் என்னை காதலிப்பதாக கூறினார்.
என பதிலளித்தார் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
சரி நீங்கள் இருவரும் என்ன திட்டம் தீட்டினீர்கள் நீங்கள் இருவரும் உடலுறவில் ஈடுபட்டு உள்ளீர்களா என வெட்கத்தைவிட்டு நான் வினவினேன்.
அதற்கு அந்த வாலிபர் சொன்ன பதில் நாங்கள் இருவரும் பலமுறை தனிமையில் சந்தித்து எங்களது பிரதேசத்துக்குள் காதலை பரிமாறியபோது நான் அழைத்துள்ளேன் அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்த போது ஏன் நீங்கள் மறுப்பு தெரிவிக்கும் என நான் வினவியதாகவும் கூறினார்.
தொடர்ந்து அப்பெண் கூறியதாகவும் நீங்கள் இஸ்லாத்துக்குள் வந்தால் நான் அனுமதிப்பேன் என கூறியதாக கூறினார்.
உடனே அவ்வானவர் சரி நான் இஸ்லாத்துக்குள் வருகின்றேன் என்ன செய்ய வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்..??
அதற்கு அந்த மாணவி சொன்ன பதில் இஸ்லாத்தைப் பற்றி நீங்கள் சுன்னத் வைத்துக்கொண்டாள் உடனே இஸ்லாத்தை தழுவி விடுவீர்கள் என்றுள்ளார்.
அது போன்று இன்னொரு விடயத்தையும் கூறியுள்ளார்.
அதாவது அந்த ஊரில் முஸ்லிம்,முஸ்லிமல்லாதவர்களை ஒரு பிரதான வீதி எல்லையை பிரிக்கின்றது.
நீங்கள் இஸ்லாத்துக்குல் வருவதென்றால் முஸ்லிம் எல்லையை ஒரு தடவை வந்தடைந்தால் போதுமெனவும் முஸ்லிம்மாணவி கூறியுள்ளார்.
நான் இஸ்லாத்தை வந்தடைய இது இரண்டும் செய்தால் போதுமா..??
என என்னிடம் கேள்வி எழுப்பினார்.
நண்பரே சுன்னத் வைப்பதென்று ஒன்று இஸ்லாத்தில் என்றால் அது சுத்தம் சம்பந்தப்பட்ட ஒரு விடயம் முஸ்லிம் முஸ்லிமல்லாத நபர்களை பிரிக்கும் எல்லை தாண்டுவது என்பது இஸ்லாத்தில் அப்படி ஒன்று இல்லை என்பது தான் என்னுடைய கருத்தாகும்.
ஆகவே இஸ்லாத்துக்குள் வருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை நபருக்கு தெளிவாக சுட்டிக் காட்டி விட்டு.
இந்தக் காதலினால் வரும் பின்விளைவுகளையும் அவரிடம் எடுத்துக்கூறி தற்போதைய சூழல்களையும் எடுத்துக்கூறி அந்த மாற்றுமத நபருக்கு இஸ்லாத்துக்குள் வருவது எப்படி என தூரநோக்குச் சிந்தனையோடும் எடுத்துரைத்தேன்.
பின்னர் அந்த மாணவியின் குடும்பத்தாரோடு கலந்துரையாட ஒரு சந்தர்ப்பத்தை தேடினேன்.
அந்த முஸ்லிம் மாணவியும் இருக்கும்போது ஒரு சில விடயங்களை அங்கு மறைமுகமாகவும் தெளிவாகவும் கலந்துரையாட கிடைத்தது.
அப்போது தான் எனக்கு தெரிந்தது இஸ்லாத்தின் அடிப்படை விடயங்கள் கூட குடும்பத்தாரும் அந்த இஸ்லாமிய மாணவியும் படிக்கவில்லை என்றும் மாஷா அல்லாஹ் உலக அறிவு அனைத்தையும் தேடிப் படித்து உள்ளார் என்பதும் தெளிவாகிறது.
நான் அந்த இடத்தில் வினயமாக வேண்டிக் கொண்டது காதல் என்ற பெயரில் ஓர் அந்நிய மதத்தவரை திருமணம் செய்து இஸ்லாத்தை விட்டு சென்று ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்துக்கும் கீழ்த்தரமாக பேச வைத்து விடாதீர்கள் இதற்கான வழிகளை இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் நான் அமைத்து தருவேன் என்றும்.
தற்போது நடக்கும் இஸ்லாமிய சம்பந்தமான பெண்களுடைய விடயத்தையும் இணையத்தில் நடக்கும் விடயங்களையும் கூறி பொறுமையாக இருக்குமாறு எடுத்து வைத்தேன்.
அந்த மாணவியின் இஸ்லாமிய சம்பந்தமான அலட்சிய கருத்துக்களும் காதல் என்ற விடயமும் மேலோங்கி நிற்பதை அவதானித்து இந்த மாணவியுடன் பேசுவதை விட அந்த மாற்றுமத சகோதரர்களுடன் பேசி இதற்கு தீர்வு காணலாம் என்று விட்டு வந்து விட்டேன்.
பின்னர் அந்த மாற்றுமத சகோதரர் உடன் ஒருநாள் சந்திப்பை ஏற்படுத்தி பொறுமையாக இருக்குமாறும் கூறி அவருடைய facebook லிங்கையும் எடுத்து வந்தேன்.
அவருடைய ஃபேஸ்புக் லிங்க் ஐ எடுத்து ஆராய்ச்சி செய்தது தான் தாமதம் சுபஹானல்லாஹ் 60க்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் அவருக்கு நண்பர்களாக இருப்பதை கண்டேன்.
இங்கு எடுத்துக்கூற வேண்டிய விஷயம் என்னவென்றால் பேஸ்புக் மூலமாக யாரிடமும் யாரும் பெண்கள் பெயரில் நண்பர் வட்டத்தில் இருந்தாலும்.
இந்த உண்மைச் சம்பவத்தை பார்வையிடும் ஒவ்வொருவருக்கும் முதல் சிந்திக்க வேண்டியது உலக அறிவை கொடுப்பதோடு நமது வீட்டுப் பெண்களுக்கும் ஆண்களுக்கும் மார்க்க அறிவை முதன்மையாக கொடுக்க வேண்டும் இஸ்லாம் இஸ்லாம் அல்லாத அவர்களின் செயல்பாடு என்ன இஸ்லாம் என்ன கூறுகின்றது இஸ்லாமிய திருமணம் எப்படி இருக்க வேண்டும் இஸ்லாம் அல்லாதவர்களை திருமணம் செய்ய முடியுமா ஹதீஸ்களை எடுத்து விடயங்களை எடுத்துக் கூறுங்கள்.
இஸ்லாத்தை ஏற்கும் நபர்கள் அதிகரித்தாலும் இஸ்லாத்தில் இருப்பவர்கள் இஸ்லாத்தை விட்டு போவது அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது இதற்கு முதன்மை காரணம் நாம் நமது வீட்டுப் பெண்களுக்கு இஸ்லாமிய வாழ்க்கை வரலாறுகளை வரையறைகளை ஹதீஸ்களைக் கொண்டு செல்லவில்லை என்பதுதான் இந்த விடயங்கள் சுட்டிக் காட்டுகின்றது.
இன்று இலங்கையில் மாத்திரம் அல்ல உலகம் பூராவும் இஸ்லாத்தையும் இஸ்லாமியப் பெண்களையும் கேவலப்படுத்தும் ஏமாற்றுவதிலும் அந்நிய மத வெறியர்கள் ஒரு சிலர் குறிக்கோளாக இருப்பதை இணையத்தளம் ஊடாக நாம் அவதானிக்கலாம்.
இது போன்ற பல விடயங்களை ஆதாரபூர்வமாக இங்கே பதிவிடலாம் இருந்த போதும் மறைமுகமாக இந்த சம்பவங்களை கூறுவதற்கான காரணம்.
எமது மார்க்கத்தை எமது பெண்கள் ஊடாகவோ எமது ஆண்கள் மார்க்கத்தில் சரியாக இருப்பவர்களை கேவலப்படுத்தக் கூடாது என்பதே இந்தப் பதிவுக்கான காரணம்.
எனது அருமை இஸ்லாமிய சகோதரர்களே இந்த பதிவை கண்டு நீங்கள் எனக்கு எதிராக என்ன விமர்சனம் செய்தாலும் எனக்கு கவலை அளிக்கப் போவதில்லை.
என்னால் முடிந்த வரை பல விடயங்களை தடுத்தாலும் எழுத்து மூலமாக அது உங்களுக்கு சில விடயங்களை மார்க்கத்தை விட்டு தூரமாக கூடாது என்பதற்கு எடுத்துரைக்கின்றது.
இலங்கையில் கல்வித் தகமை 90% அதிகரித்தாலும் மாவட்ட ரீதியாக மட்டக்களப்பு மாவட்டம் விபச்சாரத்தில் முன்னிலை வகிக்கின்றது என்பது ஒரு புள்ளிவிவரம் குறிக்கின்றது.
ஆகவே இஸ்லாமிய சகோதர சகோதரிகளே இந்த கியாமத் நாளின் அடையாளங்களில் ஒன்றான விபச்சாரம் அதிகரிக்கும் விடயத்தில் நீங்களும் சிக்கித் தவிக்காமல் அல்லாஹ்வுக்காக விலகிக் கொள்ளுங்கள் அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் அருள்புரிவானாக.
எங்கு விபச்சாரம் வட்டி அதிகரிக்குமோ அங்கு வாழும் அனைத்து சமூகங்களிலும் அனைத்து பரக்கத்துகளும் உயர்த்தப்பட்டு வறுமைகள் தலைவிரித்தாடும்.
இன்றைய சூழலில் பணக்காரன் கடன்காரனாகவும் நடுத்தர வாதி ஏழை ஆகும் ஏழை தற்கொலை செய்யும் அளவுக்கு வறுமை தலைவிரித்தாடுகிறது.
இதற்கு இஸ்லாம் கூறுகின்றது விபச்சாரங்கள் வட்டிகளை நிறுத்தி விடுங்கள் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என அல்லாஹ் கூறுகின்றான்.
மேல் கூறிய சம்பவம் ஒரு மஸ்ஜித் நிர்வாகியிடம் கூறி அதற்கான தீர்வை பெற்று வருகின்றோம்.
ஊர் தலைமைகளே விழித்துக்கொள்ளுங்கள் இந்த சமூகத்தில் அக்கறை செலுத்துங்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்.
Sehu Kabeer Kabeer Sons
valaichenai
m.t.m waseem.
Subscribe to:
Post Comments (Atom)
மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள்.
மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள். பாருங்கள் பகிருங்கள்
-
Mahinda Rajapaksa joins Parliament - Today, the embassies of powerful nations speak the key talk with the speaker Speaker Karu Jayasuriy...
-
ஜனநாயகம் நிலைக்க, அரசியல் மாற்றம் வேண்டிய பாரிய ஆர்ப்பாட்டம் கொழும்பு மா நகரில்.... ஆயிரக் கணக்கான ஜனநாயக விரும்பிகள் பங்கேற்பு .....ஐக்கி...
-
தென்கிழக்கு பல்கலைக்கழகம்: ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; இரண்டு வார சர்ச்சை முடிவுக்கு வந்தது! தென்கிழக்குப் பல்கலைக்கழக நிருவாக...

No comments:
Post a Comment