Tuesday, 28 November 2017
G.C.E O/L mathematics exam paper
மாணவர்கள் ஆசிரியர்களின் நலன் கருதி
கணித பாடத்தில் சித்தி வீதத்தை அதிகரிப்பதற்காக என்னால் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியாக பரீட்சையில் வரும் 15 பாடங்களுக்குமான வினாக்களின் தொகுப்பை கா.பொ.த (சா/த) மாணவர்களுக்காக வெளியிடுகிறேன். (ஆசிரியர்களின் வியாபார நோக்கத்திற்கு அல்ல).
இதனை இலவசமாக எங்கள் (www.jobstimess.com) இணையத்தில் பெற்றுக்கொள்ள கீழே உள்ள Link ஐ Click செய்யவும். நன்றி ஆசிரியர் - Mr. N. Pirasanna 👇
1)பின்னங்கள் i
https://goo.gl/xW4Eb9
2)பரப்பளவு i
https://goo.gl/Q77oNz
3)விகிதம் & சதவீதம் i
https://goo.gl/1Sxk9L
4)தொடை நிகழ்தகவு i
https://goo.gl/2XDKfh
5)தரவுகளை வகைகுறித்தல் i
https://goo.gl/23D1oy
6)பங்குகள் & சதவீதம் ii
https://goo.gl/Q4vkzD
7)வரைபுகள் ii
https://goo.gl/y1xgmf
8)அட்சரகணிதம் ii
https://goo.gl/8F5Qdc
9)கூட்டல் & பெருக்கல் விருத்தி ii
https://goo.gl/NW65JF
10)திரிகோணகணிதம் ii
https://goo.gl/Y1cnWd
11)கனவளவு & மடக்கை ii
https://goo.gl/r8uwMz
12)அமைப்பு ii
https://goo.gl/1c3SQY
13)தரவுகளை வகைகுறித்தல் ii
https://goo.gl/BLVAzV
14)தொடை & நிகழ்தகவு ii
https://goo.gl/6pdht4
15)தேற்றங்கள் ii
https://goo.gl/awVHwa
கேத்திர கணித தொகுப்பு
https://goo.gl/JCeEDh
முயற்சி செய் முடியாவிட்டால் பயிற்சி செய்
How to download this file?
DOWNLOAD செய்யும் முறை கீழ் உள்ள link லிங்கை கிளிக் Click செய்து எமது இணையத்தில் உள்ள “DOWNLOAD NOW” என்ற பட்டானை கிளிக் செய்து DOWNLOAD செய்யுங்கள்.
இதனை மறவாமல் குறைந்து 10 குறூப்களுக்காவது ஷேர் செய்யுங்கள் அதகமான மாணவர்களுக்கு உதவும் என்பதை மறவாதீர்கள்..
தினமும் பயனுள்ள தகவல்களை அறிய கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்து எமது facebook லைக் பக்கத்தை லைக் செய்ய மறவாதீர்கள்
FB Link >> https://goo.gl/D5uZ1q
Shared by: www.facebook.com/Al.muhmin.9
Sunday, 19 November 2017
Lagoon facing Coconut Land for sale.
PROPERTY DESCRIPTION
210 perches , Free Hold (Sinnakkara), Beautiful Lagoon facing, Coconut Land





















for Sale in Kalpitiya tourist area. A rare investment opportunity. This land is ideal for tourist hotels, cabanas and other tourist activities.......
Water and power suply available, From the main road 150 meeters
,Kalpitiya town and hospital 1km, Urgent sale....
One perches > 100000 Rs
ADDITIONAL INFORMATION
Fully grown Coconut Trees and wide road access available. Kalptiya is one of the best tourist areas popular among both locals and foreigners. After end of war land value of Kalpitiya tourist area ever increasing 35% yearly.
The Ministry of Tourism Sri Lanka hopes to convert the area to an up market destination with golf courses, cable cars, amusement parks and night entertainment facilities.
Deeds are very clear no any encumbrances.
More detail :-
Waseeim Muhammad Thahir
0775990507 whatsapp/
0772787797 mobile






















Thursday, 2 November 2017
Real religion islam
இஸ்லாத்தை ஏற்றதால் மனைவி, மகள்கள், தாய், தந்தை, பெரிய பண்ணை வீடு, இரண்டு கார்கள், நண்பர்கள், 20 வருடங்களாகப் பார்த்து வந்த அமெரிக்க விமானப்படை கண் டாக்டர் வேலை, அனைத்தையும் இழந்து நடுத்தெருவில் நின்றார்
டாக்டர் லாரன்ஸ் B பிரவுன் ( பிறப்பு: 1959).
ஏக இறைவன் அல்லாஹ் அவரைக் கைவிட்டு விட்டானா?
“என்ன நடந்தது அவர் வாழ்க்கையில்?” என்பதை அவரே கூறக் கேட்போம் இன் ஷா அல்லாஹ்.
_______________
“ 1990 ம் ஆண்டு எனது இரண்டாவது மகள் ஹன்னா பிறந்தாள். மற்ற குழந்தைகளைப் போன்று அவளின் நிலைமை இல்லை. பிறந்தவுடனேயே அவள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தாள். இருதயத்தில் இருந்து இரத்தம் வெளியேறும் குழாயில் அவளுக்கு பிரச்சினை ஏற்பட்டிருந்தது. இது மருத்துவ உலகில் மிகவும் அரிதான ஓன்று.
இதனைக் கேள்விப்பட்ட நான் அதிர்ந்தே போனேன். எவ்வளவு செலவானாலும் மகளைக் காப்பாற்றிவிட வேண்டும் என்று முடிவெடுத்தேன். வாஷிங்டனில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் இருந்து இருதய அறுவை சிகிச்சை நிபுணர் வரவழைக்கப்பட்டார். குழந்தையை பரிசோதித்த அந்நிபுணர் சொன்ன வார்த்தை எனக்கு பேரிடியாக விழுந்தது. “அறுவை சிகிச்சை செய்தாலும் குழந்தை பிழைப்பது கடினம். அவ்வாறு பிழைத்தாலும் நீண்ட நாட்கள் வாழ்வதற்கு சாத்தியமில்லை! ” என்றார்.
அதிர்ச்சியில் உறைந்து போனேன். எனது நிலைமையைப் பார்த்த அவர் கடைசியில் சொன்னார், “ இறைவனிடம் வேண்டுங்கள். சிகிச்சை பலனளிக்கலாம்.” வாழ்க்கையில் முதன் முதலாக அப்போது தான் இறைவனைப் பற்றி கேள்விப்பட்டதாக உணர்ந்தேன். என்னைப் பொருத்தவரை அமெரிக்க விமானப்படையில் கண் மருத்துவராக வேலை பார்த்து வந்தேன். நிறைவான சம்பளம். அழகிய மனைவி, குழந்தை, பெரிய பண்ணை வீடு, இது கடையா? வீடா? என்று கேட்குமளவுக்கு ஏராளமான வீட்டு உபயோகப் பொருள்கள், விளையாட்டுச் சாமான்கள் என நிறைவான வசதிகளுடன் வாழ்ந்தேன்.
தெளிவாக கூறுவதெனில் பொருளாதார மோகத்தில், உலக சுகபோகத்தில் மூழ்கிக் கிடந்தேன் எனலாம். ஆதலால், வாழ்க்கையில் எனக்கு இறைவனின் தேவை ஏற்பட்டதில்லை. வேலை பார்ப்பதால் பணம் வருகிறது. பணம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்றே கற்பனை செய்திருந்தேன். மொத்தத்தில் இறைவனை நம்பாத நாத்திகனாக வாழ்ந்திருந்தேன்.
இப்போது எனது மகளின் விஷயத்தில் பணம் தோற்றுப் போய்விட்டது.மருத்துவ உலகமும் கைவிரித்து விட்டது. மருத்துவரே, “இறைவன்தான் காப்பாற்ற வேண்டும்” என்கிறார்.வேறு வழியின்றி மருத்துவமனையில் இருந்த பிரார்த்தனை அறையினுள் நுழைந்தேன்.
எனது வேண்டுதலும் இறைவனின் உதவியும்
****************
வாழ்க்கையில் முதன் முதலாக இறைவனின் முன்பு முழங்காலிட்டு அமர்ந்தேன். கைகளை உயர்த்தி, மனதில் இறைவனை வேண்டினேன். “இறைவன் என்று ஒருவன் உண்மையில் இருந்தால், உண்மையான அந்த இறைவனே! எனது மகளைக் காப்பாற்றுவீராக!” உள்ளத்தை ஒருமைப்படுத்தி வேண்டிய அத்தருணத்தில் என்னையும் அறியாமல் அழுகை பீறிட்டது. கதறி அழுதேன்.கடைசியில் என் மனதில் சொன்னேன். என் மகளைக் காப்பாற்றினால், இறைவனே! உமக்காக என்னை அர்ப்பணிப்பேன்.
இப்படியே பதினைந்து நிமிடங்கள் கழிந்திருந்தன. மீண்டும் நினைவுக்கு வந்தேன். பிரார்த்தனை அறையை விட்டு வெளியேறி எனது மகளின் சிகிச்சை அறைக்கு வந்தேன். அங்கு எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. என்னை எதிர்பார்த்திருந்த சிறப்பு மருத்துவ நிபுணர் என்னிடம் கேட்டார். எங்கே சென்றிருந்தீர்கள் லாரன்ஸ் ? உங்களைத்தான் தேடிக்கொண்டிருந்தோம். உங்கள் மகளின் இருதய அடைப்பு சரியாகி விட்டது.
மருத்துவர், மருத்துவ அடிப்படையில் அதற்கு சில விளக்கங்கள் தந்தார். எனினும் என்னைப் பொருத்தவரை எனது வேண்டுதலுக்கு இறைவன் பதிலளித்துள்ளார் என்றே நம்பினேன். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பின்பு, இரண்டு வருடத்திற்குள் அறுவை சிகிச்சையோ, மருந்து மாத்திரைகளோ இன்றி முழுமையாக குணமடைந்தாள் எனது மகள். மற்ற குழந்தைகளைப் போன்று நன்கு வளரவும் செய்தாள்.
உண்மையான இறைவனைத் தேடி எனது ஆராய்ச்சி .
***************
சரியாக நான்கு வருடங்கள் கழிந்திருந்தன. இறைவனுக்குத் தந்த வாக்குறுதியை நிறைவேற்ற தயாராகவே இருந்தேன். எனினும் அதில் நான் தோற்றுத்தான் போனேன். ஏனெனில், உண்மையான இறைவனைத் தேடி யூத மத நூலான தோரா ( பழைய ஏற்பாடு ) மற்றும் யூத மத நூல்களை படிக்கவே செய்தேன். என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.
சத்தியத்தைத் தேடி பல சர்ச்சுகளுக்கு சென்று போதனைகளைக் கேட்டேன்.அமெரிக்காவில் உள்ள ரோமன் கத்தோலிக்க ஆலயங்களில் பலமணி நேரங்களை செலவிட்டுள்ளேன்.எனினும் கிறிஸ்தவத்தை என்னால் தழுவ இயலவில்லை. ஏனெனில், கிறிஸ்தவத்தின் பல்வேறு பிரிவுகளின் போதனைகள் பைபிளில் நான் படித்தவற்றுடன் ஒத்துப்போகவில்லை.
மோசஸின் வழியில் மூன்று இறைத்தூதர்கள்
**************
யூத நூல்களில் நான் படித்திருக்கிறேன். இறைத்தூதர் மோசஸை ( அரபியில் மூஸா நபி ) மூன்று இறைத்தூதர்கள் பின்பற்றுவார்கள் என்று. இயேசு கிறிஸ்து ( ஈஸா நபி ) திருமுழுக்கு யோவான் ( John the Baptist - அரபியில் யஹ்யா நபி ) ஆகியோரே இரண்டு நபர்கள். மூன்றாவது நபர் யாரென்று தெரியாமல் இருந்தது. பைபிளைப் படித்த பொழுது தெரிந்து கொண்டேன். இயேசு கிறிஸ்துவே பைபிளில் இறுதி இறைத்தூதரை பின்பற்றுவது தொடர்பாக கூறியுள்ளார். இயேசுவுக்கு பின்பு இறைத்தூதர் ஒருவர் உள்ளார் என்பது மட்டும் எனக்குத் தெரிந்திருந்தது. அதற்கு மேல் எதுவும் தெரியவில்லை.
சத்தியத்தை அறிந்தேன் இஸ்லாத்தை ஏற்றேன் .
**********************
பிரபல இங்கிலாந்து அறிஞர் மார்டின் லிங்க்ஸ் (1909 – 2005). 1940 ஆம் ஆண்டு இஸ்லாத்தை ஏற்ற இவர், 1983 ஆம் ஆண்டு முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்தில் நூலாக எழுதினார்.
‘ MUHAMMAD HIS LIFE BASED ON THE EARLIEST SOURCES ‘ ( இந்நூல் தமிழில் வெளிவந்துள்ளது) என்ற பெயரில் வெளிவந்த அந்நூலே ஆங்கிலத்தில் முஹம்மத் (ஸல்) அவர்களின் முழுமையான வாழ்க்கை வரலாறு குறித்து வெளிவந்த முதல் நூலாகும்.
தற்செயலாக இந்நூல் எனது கைகளில் கிடைத்தது. படித்தேன். பைபிளில் வாக்களிக்கப்பட்ட இறுதி இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களே என்பதைப் புரிந்து கொண்டேன். அந்நூலைப் படித்த பிறகு திருக்குர்ஆனைப் படித்தேன். இறைவன் தொடர்ந்து தனது தூதர்களை அனுப்பி இருப்பதை அறிந்தேன். மோசஸையும், இயேசுவையும் அனுப்பிய இறைவன்தான் முஹம்மத் நபி (ஸல்) அவர்களையும் இறைத்தூதராக அனுப்பியுள்ளான் என்பதைத் தெரிந்து கொண்டேன்.
மேலும், ‘ இறைவன் ஒருவன் ‘ என்பதில் இஸ்லாம் முந்தைய யூத – கிறிஸ்தவ மதங்களைக் காட்டிலும் தனித்துவத்துடன் திகழ்வதை அறிந்தேன். இறைவனின் ஏகத்துவம், முஹம்மத் (ஸல்) அவர்களின் தூதுத்துவம், இஸ்லாத்தின் கொள்கைகள் ஆகியவற்றினால் கவரப்பட்டேன். இஸ்லாம்தான் இறைவனின் உண்மையான மார்க்கம் என்பதை நம்பத் தொடங்கினேன். இஸ்லாத்தை ஏற்றேன்.
எனக்கு ஏற்பட்ட சோதனைகள்.
***************
இஸ்லாத்தை ஏற்ற பிறகு என் சொந்த வாழ்க்கையில் புயல் வீசியது. நான் இஸ்லாத்தை ஏற்றதை என் மனைவியால் தாங்க இயலவில்லை. என்னிடமிருந்து விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தாள். கோர்ட்டில் நான் அடித்து துன்புறுத்தினேன் என்று கூறி விவாகரத்து கேட்டாள். ஆனால், நான் உண்மையில் மனைவியை அடிப்பவன் அல்ல. நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.
எனது இரண்டு குழந்தைகளையும் தன்னுடன் அவள் எடுத்துக் கொண்டு போனாள். மேலும் நீதிமன்றத்தில் 100 வருடங்களுக்கு ஜீவனாம்சம் வேண்டுமென்று வாதிட்டாள். நீதிமன்றமும் இசைந்தது. ஜீவனாம்சமாக எனது வீடு மற்றும் இரண்டு கார்களை நீதிமன்றத்தின் மூலம் பெற்றுக் கொண்டாள்
. இதற்கெல்லாம் மேலாக இன்னொரு அநியாயமும் எனக்கு நடந்தது. அது, வாரத்தில் ஒரு நாள் எனது மகள்களை பார்க்கும் சமயத்தில் அவர்களை நான் அடித்து துன்புறுத்தி விடக்கூடாது என்பதற்காக பாதுகாப்பு அதிகாரி ஒருவரை நியமிக்கும்படி நீதிமன்றம் எனக்கு கூறியிருந்ததாகும். என்னமோ மனிதர்களை அடித்து துன்புறுத்தும் கொடுமைக்காரன் போன்று சித்தரிக்கப்பட்டேன்.
எந்த பிள்ளையைக் காப்பாற்ற இறைவனிடம் மன்றாடி உதவியைப் பெற்றதால், உண்மையான இறைவனை ஏற்றேனோ அந்தப் பிள்ளை இப்போது என்னுடன் இல்லை. எனது நெஞ்சம் கவலைகளால் கசங்கிப் போனது.
அத்துடன் எனக்கு இன்னொரு சோதனையும் வந்தது. அது என்னை ஈன்றெடுத்த தாய் – தந்தையர் என்னை வெறுத்ததாகும். இஸ்லாத்தை ஏற்றதால் அவர்கள் என்னை விலக்கி வைத்தனர். ஒரு முறை அவர்களிடமிருந்து எனக்கு கடிதம் வந்தது. இனி அவர்களை நான் பார்க்கக் கூடாது என்று. முழுமையாக குடும்ப உறவற்று அநாதையாகிப் போனேன்.
இஸ்லாத்தை ஏற்ற சமயத்தில் அமெரிக்க விமானப்படை மருத்துவராக 20 வருடங்களை பூர்த்தி செய்திருந்தேன்.
இஸ்லாத்தை ஏற்ற பிறகு அமெரிக்க ராணுவத்தில் ஒரு முஸ்லிமாக என்னால் பணியாற்ற இயலவில்லை. என் மனசாட்சி என்னைக் கொன்று போட்டது. பதவியை ராஜினாமா செய்தேன்.
மனைவி- பிள்ளைகளை இழந்தேன். வீடு வாசல்களை இழந்தேன். நண்பர்களை இழந்தேன்.கடைசியில் வேலையையும் இழந்து நின்றேன். பெரிய பண்ணை வீட்டில் வசித்த நான் குறுகலான ஏணிப்படி கொண்ட அறைகள் ஏதுமற்ற சின்ன வீட்டில் வசித்தேன். எல்லாவற்றையும் உண்மையான அந்த இறைவனுக்காகப் பொறுத்தேன்.
“ இஸ்லாத்தை ஏற்ற பிறகு அதுவரை என்னுடன் பழகி வந்த எனது நண்பர்கள் என்னை விட்டுப் பிரிந்தனர்.அதற்கு அவர்கள் சொன்ன காரணம், நான் நடன விடுதிகளுக்கு செல்வதில்லையாம். மது அருந்துவதில்லையாம் தோழிகளுடன் கைகுலுக்குவதில்லையாம். இதுதான் அவர்கள் என் மீது வைக்கும் குற்றச்சாட்டு.
நான் கேட்கிறேன், இயேசு எங்காவது நெருங்கிய குடும்ப உறுப்பினர் அல்லாத அந்நியப் பெண்களுடன் கைகுலுக்கியுள்ளாரா ? பைபிளில் எங்காவது அப்படி ஓன்று நடந்திருப்பதாக காட்ட முடியுமா ? நான் சவாலாக கேட்கிறேன்.
இன்றும் ஆர்த்தொடெக்ஸ் யூதர்கள் அன்னியப் பெண்களுடன் கைகுலுக்குவதில்லை. இயேசுவும் ஆர்த்தொடெக்ஸ் மதகுருவைப் போன்றே வாழ்ந்துள்ளார். இதுவே உண்மை, கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொண்டு இவர்கள் யாரைப் பின்பற்றுகிறார்கள்?
இறைவனின் உதவி.
**********
இஸ்லாத்தை ஏற்றதால் மனைவி பிள்ளைகளை இழந்தாலும் அல்லாஹ் என்னைக் கைவிடவில்லை. மிக நல்லதொரு குணவதியை அல்லாஹ் எனக்கு இரண்டாவது மனைவியாகத் தந்தான். அவள் மூலமாக அழகிய பெண் குழந்தையும் எனக்குப் பிறந்தாள். வீடு – வாசலை இழந்தேன்.எனினும் அல்லாஹ் என்னைக் கைவிடவில்லை.
உலக முஸ்லிம்களால் மிகவும் விரும்பப்படும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நகரமான மதீனா மாநகரில் எனக்கு அல்லாஹ் வீட்டைத் தந்தான். உலகின் மிக அழகிய நகரங்களான வியன்னா, சூரிச், வான்கூவர், ஜெனிவா, சிட்னி போன்ற நகரங்களை விட மிகச்சிறந்த நகரம் அது. ஏனெனில், அந்நகரில் தஜ்ஜால் ( அந்திக் கிறிஸ்து ) நுழைய இயலாது என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
என்னுடைய பழைய நண்பர்கள் என்னை விட்டுப் பிரிந்தாலும் அவர்களை விட எல்லா வகையிலும் சிறந்த நண்பர்களை அல்லாஹ் எனக்குத் தந்துள்ளான். உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் எனக்குத் தோழர்களாகவும் சகோதரர்களாகவும் ஆகிவிட்டனர். அல்லாஹ் போதுமானவன். “
_____________________
தற்பொழுது இஸ்லாமிய பிரச்சாரப் பணி செய்து வரும் இவர் மூன்று நூல்களை எழுதியுள்ளார். அவை,
1) The First and Final Commandment – By Laurance B Brown.
2) MisGod’ed: A Roadmap of Guidance and Misguidance in the Abrahmic Religions – By Laurance B Brown.
3) The Eighth Scroll – By Laurance B
Subscribe to:
Comments (Atom)
மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள்.
மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள். பாருங்கள் பகிருங்கள்
-
Mahinda Rajapaksa joins Parliament - Today, the embassies of powerful nations speak the key talk with the speaker Speaker Karu Jayasuriy...
-
ஜனநாயகம் நிலைக்க, அரசியல் மாற்றம் வேண்டிய பாரிய ஆர்ப்பாட்டம் கொழும்பு மா நகரில்.... ஆயிரக் கணக்கான ஜனநாயக விரும்பிகள் பங்கேற்பு .....ஐக்கி...
-
தென்கிழக்கு பல்கலைக்கழகம்: ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; இரண்டு வார சர்ச்சை முடிவுக்கு வந்தது! தென்கிழக்குப் பல்கலைக்கழக நிருவாக...