Wednesday, 31 October 2018

சங்காவைப்பிடித்தவர்கள் மட்டும் லைக் , share பண்ணுங்கள்


சங்காவைப்பிடித்தவர்கள் மட்டும் லைக் பண்ணுங்கள் ஹேட்டர்ஸ் இல்லாத கிரிக்கெட் வீரரொருவரின் பெயரைச் சொல்லுமாறு கேட்டால் பலர் "சங்கா" என்பார்கள். "சங்கா" என்று சொல்லும்போதே மனதில் கொண்டாட்டம். சங்கா பற்றி எழுதும்போது ஏற்படும் உள்ளக் கிளர்ச்சி வார்த்தைகளால் விபரிக்க முடியாதது. 1996ம் ஆண்டு உலகக்கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை அணியிலிருந்த சிரேஷ்ட வீரர்கள் ரணதுங்க, குறுசிங்க ஓய்வின் பின்னர், கிரிக்கெட் வரலாற்றில் அழியாப் புகழ் பெறப்போகும் இரு இளைஞர்கள் இலங்கையணிக்கு உள்வாங்கப்படுகிறார்கள். மஹேல, சங்கா. சச்சினை கிரிக்கெட் கடவுளென்று கருதியவர்களெல்லாம், பிற்காலத்தில் சச்சினுக்கு போட்டியாக; சச்சினை விஞ்சும் வகையில் ஒருவன் வருவானென்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 2000ம் ஆண்டு ஜூலை மாதம் அவன் அறிமுகமாகிறான். புன்னகை முகம், நிதானமான துடுப்பாட்டம், நேர்த்தியான ஷாட்ஸ், ஏராளமான சாதனைகள் என்று கிரிக்கெட்டின் தலை சிறந்த வீரரானார். களத்திலும், களத்திற்கு வெளியிலும் கடைப்பிடிக்கும் கண்ணியம்தான் சங்கா இவ்வளவு தூரம் உயரக் காரணமாய் அமைந்தது. இலங்கை அணியை பிடிக்காதவர்களைக் கூட இலங்கை அணி விளையாடும் போட்டிகளை பார்க்கச் செய்தார். பலருக்கு கிரிக்கெட் மேல் அடங்காக் காதலை உண்டாக்கிய 'கிரிக்கெட்டின் கியூபிட்' சங்கா. சங்காவின் காலத்தில் கிரிக்கெட் பார்த்தேன் என்று மார்தட்டிக் கொள்வோர் ஏராளமானோர்! 2015 உலகக்கிண்ணப் போட்டியில் தொடர்ச்சியாகக் குவித்த நான்கு சதங்கள், சங்கா மஹேல பெற்ற 624 ரன்கள் இணைப்பாட்டம், டெஸ்ட் போட்டிகளில் குவித்த இரட்டைச் சதங்கள் என்று நீளும் சங்காவின் எல்லா சாதனைகளும் ஒவ்வொரு ரசிகனுக்கும் மனப்பாடம். 2011 உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் தோனி, யுவ்ராஜ் வெற்றியை கட்டியணைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கும்போது, பின்னால் புன்னகையுடன் நடந்துவரும் சங்காவின் முகத்தை எந்தவொரு கிரிக்கெட் ரசிகனும் மறந்துபோக மாட்டான். சங்காவின் இறுதி ஒருநாள் போட்டியில் வருண பகவான் கண்ணீர் விட்டது தற்செயல் நிகழ்வென்று கடந்து போகமுடியாத நிலை. சங்காவின் ஓய்வுக்கு யார்தான் கவலையுற மாட்டார்கள்! கிரிக்கெட் வீரனொருவன் பெறக் கூடிய உச்சக்கட்ட மரியாதை என்னவென்றால் ஓய்வு பெற்ற பின்னர், "கடவுளே! இவர் மீண்டும் களமிறங்க வேண்டும்" என்று ரசிகர்கள் அங்கலாய்ப்பது. அது சங்காவுக்கு மாத்திரம் கிடைத்த வரம்! தனது கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சக்கட்ட போர்மில் இருக்கும்போது ஓய்வு பெறும் பாக்கியம் எல்லோருக்கும் கிடைத்துவிடாது. சங்காவின் கவர் ட்ரைவை மீண்டும் பார்க்க மாட்டோமா? என்று ஏங்கித்தவிக்கும் ரசிகர்கள் ஏராளம். சங்காவின் கையில் தவழ்வதற்காக துடுப்பும் ஏங்கித்தவிக்கக் கூடும்! இரண்டு வருடங்கள் மேலதிகமாக விளையாடியிருந்தால் பல சாதனைகளின் பட்டியலில் சங்காவின் பெயரே முதலிடத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கும். சச்சின், பிரட்மனின் பல சாதனைகளை 'எங்கே காணவில்லை?' என்று தேடும் நிலை தோன்றியிருக்கும். பிரட்மன், சச்சினை விட சங்கா ஒருபடி மேல்!

பாராளுமன்றம் அவசரமாகக் கூட்டப்பட்டு ஜனநாயகம் உறுதிசெய்யப்பட வேண்டும்.


பாராளுமன்றம் அவசரமாகக் கூட்டப்பட்டு ஜனநாயகம் உறுதிசெய்யப்பட வேண்டும். தேசிய சூரா சபையின் அறிக்கை கட்சி அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் தேசிய ஒற்றுமை மற்றும் தேசிய ஜனநாயக மேம்பாட்டை கருத்திற் கொண்டு செயற்பட்டுவரும் தேசிய ஷுரா சபையானது தற்போது நாட்டில் உருவகியுள்ள அசாதாரண அரசியல் நிலைபற்றி கரிசனை கொண்டிருக்கின்றது. இந்நிலை தொடருமாயின் வேண்டத்தகாத பல சூழ்நிலைகள் மென்மேலும் உருவாகலாம்.கடந்த 29ஆம் திகதி கூடிய தேசிய சூரா சபையின் நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தில் தற்போதைய சூழ்நிலை பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது. 1977 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல், 1994ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் மற்றும் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் உள்ளிட்ட, நாட்டில் பொதுவாக மாற்றம் வேண்டப்படும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் முஸ்லிம்கள் கட்சி பேதங்களை மறந்து தேசத்தின் நலன்கருதி தமது வாக்குப் பலத்தைப் பிரயோகித்துள்ளனர் என்பதை தேசிய ஷுரா நினைவுகூருகிறது. எனவே தற்போதைய பாராளுமன்றத்தில் உள்ள 21 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது தனிப்பட்ட அபிலாசைகளுக்கு அப்பால் தமக்கு வழங்கப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதித்துவத்தை ஒர் அமானிதமாகக் கருதி, தனிநபர் கட்சித் தாவல்களைத் தவிர்த்து தேசத்தின் ஜனநாயகப் பண்புகளை உறுதிசெய்வதில் தமது கட்சி வரம்புகளுக்குள் தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டும் என ஷுரா சபை வேண்டிக்கொள்கிறது. 2015 ஆம் ஆண்டு மக்கள் ஆணையுடன் தெரிவுசெய்யப்பட்ட பிரதமரை நாட்டின் அரசியலமைப்புக்கும் பொதுவான ஒழுங்கு விதிமுறைகளுக்கும் புறம்பான வகையில் திடீரென பதிவியில் இருந்து நீக்கியதையும் மக்கள் இறைமைக்குப் புறம்பான வகையில் பாராளுமன்ற அமர்வை ஒத்திவைத்ததையும் ஜனநாயக விழுமியங்களை மீறும் செயற்பாடுகளாகவே தேசிய ஷுரா சபை கருதுகிறது. 72 வருட பாராளுமன்ற முறைமையுடனான அதி உயர் ஜனநாயக கலாசாரத்தைக் கொண்ட நாம், சர்வதேச அழுத்தங்களுக்கு உட்படாத வகையில், எமது உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு பாராளுமன்றத்தின் ஊடாகவே உடனடியாக தீர்வுகாண வேண்டும் என்றும், இந்த நெருக்கடிமிக்க சூழ்நிலையில் பொது மக்களின் உயிர்களையும், சொத்துக்களையும் பாதுகாப்பதற்கான விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அவர்களை தேசிய ஷுரா சபை வேண்டுகிறது. நாட்டில் ஏற்பட்டுள்ள அவசரகால நிலைமையை கவனத்திற்கொண்டு அனைவரது பாதுகாப்பு விடயத்தில் விஷேட கவனம் செலுத்துவதுடன், நாட்டில் அமைதியும் நல்லாட்சியும் வேண்டி விஷேட துஆ பிரார்த்தனைகளை மேற்கொள்ளுமாறும் அனைவரையும் தேசிய ஷுரா சபை கேட்டுக்கொள்கிறது. நமது தாயகமாம் இலங்கையை அல்லாஹ் சகலவிதமான தீங்குகளிலிருந்தும் பாதுகாப்பானாக! ஆமீன். ஜே. தாரிக் மஹ்மூத் தலைவர் தேசிய சூரா சபை 2018.10.31, புதன்கிழமை - கொழும்பு

மைத்திரி ஐயா ஒருமுறை இங்கிலாந்து மகாராணியை...............


'Copy and paste மைத்திரி ஐயா ஒருமுறை இங்கிலாந்து மகாராணியை அவரது அரண்மனையில் சந்தித்தபோது .... "உங்கள் குடும்பம் எப்போதும் அதிகாரத்தில் தொடர்ந்து இருப்பது போல, நானும் தொடர்ந்து ஆட்சியில் இருக்க எனக்கு ஏதாவது யோசனை சொல்ல முடியுமா?" என்றார். "சரி" என்ற ராணி, "அதற்கு புத்திசாலிகளை எப்போதும் உங்கள் பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்" என்றார். மைத்திரி குழப்பமாகி, "ஆனால் என்னை சுற்றி இருப்பவர்கள் புத்திசாலி என்று நான் எப்படி தெரிந்து கொள்வது?" என்றார். ராணி, "மிக எளிது, நீங்கள் ஒரு புதிர் சொல்லி பதில் கேளுங்கள்" என்று சொல்லிக்கொண்டே .... இண்டர்காம் பொத்தானை அழுத்தி, "டேவிட் கேமரூன், தயவு செய்து, என் அறைக்கு ஒரு நிமிஷம் வர முடியுமா?" என்றார். டேவிட் கேமரூன் அறைக்குள் வந்து, "சொல்லுங்கள் அம்மா" என்றார். ராணி சிரித்துக் கொண்டே கேட்டார், "டேவிட், உங்கள் அம்மா, அப்பாவுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. அது உங்கள் சகோதரன் அல்ல, உங்கள் சகோதரி அல்ல. அப்போ அது யார்?" ஒரு கணமும் யோசிக்காமல், டேவிட் கேமரூன், "அது நான்தான் மேடம்" என்றார். "நன்றி டேவிட் !" என்று கூறி ராணி அவரை அனுப்பி விட்டு, புன்னகையுடன் மைத்திரி பக்கம் திரும்பி ......"பார்த்தீர்களா?" என்றார். மைத்திரி தன்னுடைய சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு மீண்டும் இலங்கை வந்தவுடன் .... சம்பிக்கவை அழைத்து, "சம்பிக உங்கள் அம்மா, அப்பாவுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. அது உங்கள் சகோதரன் அல்ல, உங்கள் சகோதரி அல்ல. யார் அது?" "உறுதியா தெரியல, நாளைக்கு சொல்றேன்" என்ற சம்பிக அனைவரிடமும் கேட்டும் பதில் தெரியாததால் அனுர குமாரவிடம் ஓடிச்சென்று...... "நீங்கள் ஒரு புதிருக்கு பதில் சொல்ல வேண்டும். உங்கள் அம்மா, அப்பாவுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. அது உங்கள் சகோதரன் அல்ல, உங்கள் சகோதரி அல்ல. யார் அது?" என்று கேட்டார். அனுர குமார, "அது நான்தான்!" என்றார். விஷயத்தை கேள்விப்பட்ட சம்பிக மைத்திரியிடம் உடனே ஓடிச்சென்று "எனக்கு விடை தெரியும்" என்றார்.... "சொல்லு". #அனரகுமாரதான் அது". மைத்திரி அவரைக் கன்னத்தில் அறைந்து விட்டு சொன்னார்,..... முட்டாள்! அது #டேவிட்_கேமரூன்டா!"😁😁😁😁 முட்டாப்பயலுக கிட்ட நாட்ட கொடுத்துட்டு நாம படுற பாடிருக்கே.......... யாருக்கிட்ட சொல்லி அழுறது.....

#BREAKING_NEWS: ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராக வந்தால் ஒரு மணி நேரம் கூட பதவியில் இருக்க மாட்டேன்; ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பு..!

Mahinda Rajapaksa joins Parliament - Today, the embassies of powerful nations speak the key talk with the speaker Speaker Karu Jayasuriya met with President Maithripala Sirisena and met with the Speaker of the powerful Western countries to hold talks with them. UN Ambassador to Sri Lanka Hanna Sinkar, EU Ambassador to Sri Lanka Mariyu, Ambassador of Britain to Sri Lanka James Duvris, Canadian Ambassador David McKinhoth, Ambassador of Germany to Sri Lanka Joan Rodd. The ambassadors talked with the speaker about the political confusion in Sri Lanka. In contrast to the constitution, Mahinda Rajapaksa was appointed prime minister and their holders in parliament forcibly sabotaged the parliament. They expressed their displeasure to the speaker about the political turmoil in Sri Lanka. They also warned that international conflicts with the Sri Lankan economy would be confronted with political confusion. Speaker requested them not to take any diplomatic measures against Sri Lanka in a hurry. The Speaker told foreign delegates that he had met with the president to take steps to comply with the country's constitution and to bring the parliament to a resolution of the political confusion and to speak to the president.

Tuesday, 30 October 2018

இன்று நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் தலம்பல் நிலை


இன்று நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் தலம்பல் நிலை காரணமாக பலரும் பலவாறு பேசி வருகிறார்கள்.இந்த நாட்டு முஸ்லிம்களை பொறுத்த மட்டில் இந்த காலகட்டத்தில் மிகவும் நிதானமாக கருத்துக்களை வெளியிடவேண்டிய நிலையில் உள்ளோம்.நாங்கள் அல்லாஹுவை ஈமான் கொண்டவர்கள் இந்த உலகத்திலும் சரி மறுமையிலும் சரி அவன் நாடியதுதான் நடக்கும் . எங்களைப்பொறுத்தவரையில் ஒரு விடயத்தை நன்றாக கவனிக்க வேண்டும் . இங்கு யார் நல்லவன் யார்கெட்டவன் என்றதற்கப்பால் யாருக்கு பின்னால் அதிகமான இனவாதிகள் இருக்கிறார்கள் என்பதை கொஞ்சம் பார்க்க வேண்டும் . இந்த ஓரிரு நாளைக்குள் என்ன நடந்திருக்குது என்பதைப்பாருங்கள்.ஒரு விடயத்தை மாத்திரம் இதில் குறிப்பிடுகிறேன்.நேற்றைய தினம் திகன கலவர இனவாதி விடுதலை செய்யப்பட்டுள்ளார். இப்போது புற்று ஒன்று வெட்டப்பட்டுள்ளது அதிலிருந்து பல விச ஜந்துக்கள் வெளியே வருகின்றன இவைகள் யாரை தாக்குமென எம் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும் . தெரிந்திருந்தும் இன்று பட்டாசு போடுவதும் புகழாரம் சூடுவதும் எந்த வகையில் நியாயமாகும்.நபி ஸல் கூறினார்கள் "ஒரு மலை நகர்ந்தால் நம்புங்கள் ஒரு மனிதன் மாறிவிட்டான் என்றால் நம்பாதீர்கள்" என்றார்கள் .சுயநலன்களை மறந்து பொது நலமாக சிந்திப்போம். ' வருகிறார்கள்.இந்த நாட்டு முஸ்லிம்களை பொறுத்த மட்டில் இந்த காலகட்டத்தில் மிகவும் நிதானமாக கருத்துக்களை வெளியிடவேண்டிய நிலையில் உள்ளோம்.நாங்கள் அல்லாஹுவை ஈமான் கொண்டவர்கள் இந்த உலகத்திலும் சரி மறுமையிலும் சரி அவன் நாடியதுதான் நடக்கும் . எங்களைப்பொறுத்தவரையில் ஒரு விடயத்தை நன்றாக கவனிக்க வேண்டும் . இங்கு யார் நல்லவன் யார்கெட்டவன் என்றதற்கப்பால் யாருக்கு பின்னால் அதிகமான இனவாதிகள் இருக்கிறார்கள் என்பதை கொஞ்சம் பார்க்க வேண்டும் . இந்த ஓரிரு நாளைக்குள் என்ன நடந்திருக்குது என்பதைப்பாருங்கள்.ஒரு விடயத்தை மாத்திரம் இதில் குறிப்பிடுகிறேன்.நேற்றைய தினம் திகன கலவர இனவாதி விடுதலை செய்யப்பட்டுள்ளார். இப்போது புற்று ஒன்று வெட்டப்பட்டுள்ளது அதிலிருந்து பல விச ஜந்துக்கள் வெளியே வருகின்றன இவைகள் யாரை தாக்குமென எம் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும் . தெரிந்திருந்தும் இன்று பட்டாசு போடுவதும் புகழாரம் சூடுவதும் எந்த வகையில் நியாயமாகும்.நபி ஸல் கூறினார்கள் "ஒரு மலை நகர்ந்தால் நம்புங்கள் ஒரு மனிதன் மாறிவிட்டான் என்றால் நம்பாதீர்கள்" என்றார்கள் .சுயநலன்களை மறந்து பொது நலமாக சிந்திப்போம்.

UNITED NATIONAL PARTY 2018/10/30 - ஜனநாயகம் நிலைக்கவும், அரசியல் மாற்றம் வேண்டிய பாரிய ஆர்ப்பாட்டம் கொழும்பு மா நகரில்....

ஜனநாயகம் நிலைக்க, அரசியல் மாற்றம் வேண்டிய பாரிய ஆர்ப்பாட்டம் கொழும்பு மா நகரில்.... ஆயிரக் கணக்கான ஜனநாயக விரும்பிகள் பங்கேற்பு .....ஐக்கிய தேசிய கட்சிக்கு பாரிய ஆதரவு...... அச்சத்தில் மஹிந்த குழுவினர்...

We commend our tribute to the people of the United Front for the sake of democracy today இன்றைய ஜனநாயக முன்னணிக்கு ஐக்கிய முன்னணியின் மக்களுக்கு நாங்கள் எங்கள் பாராட்டுக்களை தெரிவிக்கிறோம்

சஜித் பிரேமதாச அவர்களை ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக.......


சஜித் பிரேமதாச அவர்களை ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக உத்தியோக பூர்வமாக அறிவிக்க ஏகமனதாக தீர்மானம்நிறைவேற்ற பட்டுள்ளது சஜித்தின் வருகை நாட்டில் அரசியல் மாற்றத்தையும் மக்களின் மனநிலையில் மாற்றத்தையும் ஏற்படுத்தும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து.......

Monday, 29 October 2018


மகிந்தவை போலி பிரதமராக்கிய மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாட்டினால் கடும் கோபமடைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, ரணிலுக்கு ஆதரவாக செயற்பட வலியுறுத்தியுள்ளார். கடந்த சில மாதங்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவை சந்திக்க தாம் முயன்றபோதும், அதற்கான அனுமதி தரப்படவில்லை என கவலை தெரிவித்துள்ள சந்திரிக்கா, சுதந்திரக் கட்சியிலுள்ள மகிந்த எதிர்ப்பு நாடளுமன்ற உறுப்பினர்கள் சிலரை ரணிலுக்கு ஆதரவதக செயல்படும்படி வலியுறுத்தியுள்ளார். චන්ද්‍රිකාගෙ මෙහෙයුම සාර්ථකයි , ශ්‍රී ලංකා නිදහස් පක්ෂයේ පිරිසක් ඇය වටා එකතුවෙමින් සිටී, මේ කුමන්ත්‍රණය පරාජය කරන්න සම්පූර්ණයෙන්ම කැපවෙන බව හිටපු ජනාධිපතිනිය පවසා සිටී

Friday, 26 October 2018

Thursday, 25 October 2018

Why was Kuzal Mendis given a chance? Explanation .. ஏன் குசல் மென்டிஸுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது?; விளக்கும் சந்திமால்..! ඇයි Kuzal Mendis අවස්ථාවක් ලබා දුන්නේ? පැහැදිලි කිරීම ..


ஏன் குசல் மென்டிஸுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது?; விளக்கும் சந்திமால்..! இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் துடுப்பாட்ட வீரரான குசல் மென்டிஸ் துடுப்பாட்டத்தில் தொடர்ந்து பிரகாசிக்கத் தவறினாலும், களத்தடுப்பு பயிற்சியின் போது காட்டிய உத்வேகத்தை அடிப்படையாக வைத்தே இறுதிப் போட்டியில் அவருக்கு மற்றுமொரு வாய்ப்பு வழங்கப்பட்டதாக இலங்கை ஒருநாள் அணித் தலைவர் தினேஷ் சந்திமால் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அணித் தலைவர் தினேஷ் சந்திமால் கருத்து வெளியிடுகையில், இதேநேரம், கடந்த சில போட்டிகளில் மோசமாக விளையாடிய குசல் மென்டிஸ், 25 ஒருநாள் போட்டிகளுக்குப் பிறகு அதாவது, இங்கிலாந்து அணியுடான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் மிகச்சிறப்பாக விளையாடி 33 பந்துகளில் 56 ஓட்டங்களை பெற்றிருந்தார். இதில் ஆறு சிக்ஸர்களும், ஒரு பௌண்டரியும் உள்ளடங்கும். இந்த நிலையில், குசல் மெண்டிஸின் இந்த மீள்வருகை ஆட்டம் குறித்து போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட சந்திமால், களத்தடுப்பு பயிற்சிகளின் போது குசல் மென்டிஸ் வெளிப்படுத்திய திறமையை கருத்திற்கொண்டே நாங்கள் அவரிற்கு மற்றுமொரு வாய்ப்பை வழங்க முன்வந்தோம். குசல் மெண்டிஸ் தொடர்பில் நாம் மிகுந்த நம்பிக்கை வைத்தோம். அவர் களத்தடுப்பில் மிகச்சிறந்த மனோநிலையை வெளிப்படுத்தினார். குசல் மென்டிஸ் போன்ற வீரர் ஒருவரால் வெகு விரைவிலேயே பழைய சிறப்பான நிலைக்கு மீள திரும்ப முடியும் என்பதையும் அறிந்து வைத்திருந்தோம். அந்த நம்பிக்கையில் தான் அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பினை வழங்கினோம். இலங்கை கிரிக்கெட்டுக்காக எதிர்காலத்தில் சிறப்பாக விளையாடுகின்ற திறமை படைத்த குசல் மெண்டிஸ், இங்கிலாந்து அணியுடனான இறுதிப் போட்டியில் தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை ஏற்று மிகச்சிறப்பாக செய்து முடித்தார் எனவும் சந்திமால் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு முன் இன்னும் சில ஒருநாள் போட்டித் தொடர்களில் இலங்கை அணி விளையாட உள்ளதால், உலகக் கிண்ண போட்டிகளுக்கான இலங்கை அணியில் இடம்பெறுவதற்கு இளம் வீரர்களுக்கு இன்னும் கதவு திறந்து இருப்பதாகவும் சந்திமால் இதன்போது தெரிவித்தார். ඇයි Kuzal Mendis අවස්ථාවක් ලබා දුන්නේ? පැහැදිලි කිරීම .. ශී්ර ලංකා කි්රකට් කණ්ඩායමේ ක්රිකට් තරගයේ දී බැබළීමට නොහැකි වුවද, අවසන් තරගය සඳහා තවත් එක් අවස්ථාවක කුසල් මෙන්ඩිස් හට අවස්ථාව ලබාදී ඇති බව ශ්රී ලංකා එක්දින කණ්ඩායමේ නායක දිනේෂ් චන්දිමාල් පවසා තිබේ. මෙම තත්ත්වය තුළ, තරඟය එතකොට මාධ්යවේදියෙක් රැස්වීම සඳහා සහභාගී වන්න නායක දිනේෂ් චන්දිමාල් අදහස් දක්වමින් ඒ සමගම, අවසන් තරග කීපයේදී නරක ලෙස නරකයි මෙන්ඩිස් දින 25 ක් තරඟයෙන් පසුව එංගලන්ත කණ්ඩායමයි පස්වැනි එක්දින තරග බොහෝ සෙයින් ක්රීඩා 33 පන්දු 56 කින් ලකුණු 56 යි ලැබීය. මේ හයදෙනා සයස් සහ මායිම අරමුණ. මෙම තත්වය තුළ, Kuzal මෙන්ඩිස්ගේ පුනරුත්පත්තිය ක්රීඩාවට එරෙහිව තරගයෙන් පසු මාධ්යවේදියා රැස්වීම පිළිබඳව අදහස් දක්වමින් ඔබ හමුවන්නේ නැත්නම්, කැණීම් අභ්යාස තුළ පාඨමාලා මෙන්ඩිස් හෙළි කළේය චින්තන කුසලතා අපිට තවත් තියෙනවා අපට අවස්ථාව ලබා දීමට අපි ඉදිරිපත් විය. අපි කසල් මෙන්ඩිස් සමඟ සම්බන්ධව සිටිමු අපිට ලොකු විශ්වාසයක් තිබුණා. ඇය ක්ෂේත්රයේ විශිෂ්ඨයි මානසිකත්වය අනාවරණය වී ඇත. Kucal මෙන්ඩිස් වැනි එක් ක්රීඩකයෙක් ඉතා ඉක්මනින් ඔබට හොඳ තත්වයකට ආපසු යා හැකි බව දැන ගැනීම තබා. මෙම උන් වහන්සේ කෙරෙහි බලාපොරොත්තුව ඇත නැවත වරක් තවත් අවස්ථාවක් සපයන. ලංකා ක්රිකට් සඳහා අනාගතය හොඳයි දක්ෂ ක්රීඩක කුසෙල් මෙන්ඩිස් එංගලන්ත කණ්ඩායම සමග අවසාන තරගය වගකීම භාර ගන්න ගොඩක් කරලා විශ්වාස නෑ සඳහන්. මේ අතර, ලෝක කුසලානය තරග කිහිපයකට පෙර එක්දින තරගාවලිය ශ්රී ලංකා කණ්ඩායමට ක්රීඩා කරන්න ලෝක කුසලානය තරඟ සඳහා ශ්රී ලංකාව කණ්ඩායමට එයි ක්රීඩකයන් තවමත් දොරට තියනවා ඔබට විවෘතව හැඟෙන්නේ නැත්නම් ඔහු මේ බව පැවසීය. Why was Kuzal Mendis given a chance? Explanation .. Sri Lanka ODI squad Dinesh Chandimal has said that despite his failure to shine in the cricket match of the Sri Lankan cricket team, Kulal Mendis has been given another chance in the final match. In this situation, the competition Then the journalist Take part in the meeting Leader Dinesh Chandimal In commenting, At the same time, in the last few matches Worse played badly Mendis, 25 a day After the matches, England team Fifth ODI match Playing greatly 33 56 runs in the balls Received. Six of these Sixes and a boundary PURPOSE. In this situation, Kuzal This reincarnation of Mendis After the match against the game The journalist Commented on the meeting If you do not meet, digging Course during exercises Mendis revealed Thinking skills We have another We offered to offer the opportunity. We're in touch with Kuzal Mendis We had great confidence. She Excellent in the field Mentality Revealed. Kucal One player like Mendis Very early Knowing that you can return to a better position Kept. The He is in the hope of him One more chance again Provided. Lanka Future for cricket Playing better Talented Kusel Mendes, With the England team In the final match Accept the responsibility given Greatly done Not sure Mentioned. Meanwhile, the World Cup Some more before the matches One day tournament series Play Sri Lanka team Since the World Cup Sri Lanka for the matches Young to take on the team The players still have the door If you do not feel like opening up He said this.

தென்கிழக்கு பல்கலைக்கழகம்: ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; இரண்டு வார சர்ச்சை முடிவுக்கு வந்தது! අග්නිදිග විශ්ව විද්යාලය: රැකියාවක නියැලී සිටි සිසුන් සති දෙකක මතභේදය අවසන් විය! South eastern University: Students arrested in occupation The two-week controversy ended!


தென்கிழக்கு பல்கலைக்கழகம்: ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; இரண்டு வார சர்ச்சை முடிவுக்கு வந்தது! தென்கிழக்குப் பல்கலைக்கழக நிருவாக கட்டடத்தை கடந்த இரு வாரங்களாக ஆக்கிரமித்திருந்த 15 மாணவர்களை, இன்று காலை பொலிஸார் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். அக்கரைப்பபற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் வருகை தந்த பொலிஸார், நிருவாகக் கட்டடத்தை ஆக்கிரமித்திருந்த மாணவர்களை கைது செய்தனர். தென்கிழக்கு பல்லைக்கழக நிருவாகக் கட்டடத்தை ஆக்கிரமித்திருந்த மாணவர்களை அங்கிருந்து அகன்று செல்லுமாறு ஏற்கனவே, அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனையும் மீறி, தொடர்ச்சியாக அந்த மாணவர்கள் நிருவாகக் கட்டடத்தை ஆக்கிரமித்திருந்தமையினால், அவர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் கட்டளை பிறப்பிருந்தது. இந்த நிலையில், குறித்த மாணவர்களை கைது செய்யாமல், பொலிஸார், அலட்சியமாக நடந்து கொண்டார்கள் எனக் குற்றம் சாட்டியிருந்த பல்கலைக்கழக சமூகத்தினர், பொலிஸாருக்கு எதிராக அண்மையில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில், நேற்று புதன்கிழமை இரவு, பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்த பொலிஸார், நிருவாகக் கட்டடத்தை ஆக்கிரமித்திருந்த மாணவர்களை அங்கிருந்து அகன்று செல்லுமாறு வலியுறுத்தியிருந்தனர். அம்பாறை பொலிஸ் பிரிவுக்கான பொலிஸ் அத்தியட்சகர், அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரின் தலைமையிலான பொலிஸ் குழு, இதன்போது வருகை தந்திருந்தது. ஆயினும், அம்பாறை மாவட்டத்துக்கான பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை ஒன்றில் ஈடுபட்ட பின்னரே, தாம் ஆக்கிரமித்துள்ள இடத்திலிருந்து விலகிச் செல்வது குறித்து தீர்மானிக்க முடியும் என்று, அங்கிருந்த மாணவர்கள் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து, குறித்த பேச்சுவார்த்தையை ஏற்பாடு செய்து தருவதாக, அந்த மாணவர்களிடம் கூறிச் சென்ற பொலிஸார், இன்று காலை, பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்து, ஆக்கிரமிப்பில் ஈடுபட்டிருந்த மாணவர்களை கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். இந்த நிலையில், குறித்த மாணவர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதாகத் தெரியவருகிறது. பகிடி வதையில் ஈபட்டார்கள் எனும் குற்றச்சாட்டில், தகவல் தொழில்நுட்ப பீட மாணவர்கள் சிலருக்கு வழங்கப்பட்டுள்ள வகுப்புத்தடையினை நீக்குமாறு கோரி, அதே பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள், இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.(புதிது) අග්නිදිග විශ්ව විද්යාලය: රැකියාවක නියැලී සිටි සිසුන් සති දෙකක මතභේදය අවසන් විය! පසුගිය සති දෙකක කාලයක් තිස්සේ අග්නිදිග විශ්ව විද්යාලයේ පරිපාලන ගොඩනැගිල්ල අල්ලාගෙන සිටි සිසුන් 15 දෙනෙකු අත්අඩංගුවට ගෙන තිබේ. අක්කරෙයිපත්තුවේ රථවාහන පොලිස් නිලධාරියාගේ ප්රධානියා වූ පොලිස් කොස්තාපල්වරයා, පරිපාලන ගොඩනැගිල්ල අල්ලාගත් සිසුන් අත්අඩංගුවට ගෙන තිබේ. දකුණු ආසියාවේ පරිපාලන ගොඩනැගිල්ල අල්ලාගෙන සිටින සිසුන් ඉවත් කිරීමට නියෝග කර ඇති බව අක්කරෙයිපත්තු විනිසුරු මඩුල්ල පවසයි. එසේ වුවද, පරිපාලන ගොඩනැගිල්ල නිරන්තරව වාඩිවූ නිසා සිසුන් අත්අඩංගුවට ගැනීම සඳහා උසාවි නියෝග කළාය. මෙම අවස්ථාවේ දී ශිෂ්යයන් අත්අඩංගුවට ගැනීම සම්බන්ධයෙන් නොසැලකිලිමත් බව චෝදනා කළ සරසවි ප්රජාව පොලිසිය වෙත එරෙහිව මෑත පැවැත්වූ උද්ඝෝෂණයක නිරත විය. මෙම රාත්රියේ ඊයේ රාත්රියේ පොලීසිය විසින් විශ්වවිද්යාලයට ඇතුළු වූ අතර පරිපාලන ගොඩනැගිල්ල අල්ලා ගැනීම සඳහා සිසුන්ගෙන් ඉල්ලා සිටියේ ය. අම්පාර පොලිස් කොට්ඨාසයේ පොලිස් අධිකාරීවරයා සහ අක්කරෙයිපත්තුව පොලිස් දෙපාර්තමේන්තුවේ භාරකාර පොලිස් අධිකාරී විසින් මෙහෙයවන ලද පොලිස් කණ්ඩායම එම ස්ථානයට ගොස් ඇත. කෙසේ වෙතත් සිසුන්ට ඔවුන් ප්රකාශයට පත් කළ හැකි වූයේ අම්පාර දිස්ත්රික්කය තුළ නියෝජ්ය පොලිස්පතිවරයෙකු හා විශ්ව විද්යාලයේ උපකුලපතිවරයා සමඟ සාකච්ඡා කිරීමෙන් පසු තීරණය කළ හැකිය. පසුව මෙම සාකච්ඡාව සංවිධානය කිරීම සඳහා සිසුන්ට උද්ඝෝෂණය කළ සිසුන් පොලීසිය විශ්වවිද්යාලයට ඇතුළු වූ අතර ඔවුන් අත්අඩංගුවට ගත් සිසුන් අත්අඩංගුවට ගෙන ඇත. මෙම නඩුවේදී සිසුන් අධිකරණයට පෙනී සිටියි. එම පීඨයේ සිසුන් කිහිපදෙනෙකු මෙම ආක්රමණයට සම්බන්ධ වූ අතර, තොරතුරු තාක්ෂණ පීඨ සිසුන් කිහිප දෙනෙකුට ලබා දුන් පන්තිකාමරය ඉවත් කිරීම, South eastern University: Students arrested in occupation The two-week controversy ended! Police detained 15 students who had been occupying the South East University administrative building for the past two weeks. Policar, who was headed by the Traffic Police Officer of Akkaraipattu, arrested the students who occupied the administrative building. The Akkaraipattu Judge Court has already ordered to leave the students who occupy the South West University administrative building. Despite this, the court ordered the arrest of the students because they had occupied the administrative building regularly. At this stage, the university community, who had accused the police of negligence in arresting the students, was involved in a recent demonstration against the police. On this night, yesterday night, the police entered the university and urged students from occupying the administrative building to leave. The police team led by the Police Superintendent of Police Ampara Police Division and the Undertaker of the Akkaraipattu Police Department visited the site. However, the students were told that they could decide on their departure from the occupied territories only after a negotiation with the Deputy Inspector General of Police in Ampara district and the Vice-Chancellor of the University. Following this, the police, who told the students to arrange the talks, entered the university and arrested the students who were involved in the occupation. In this case, the students will be appearing in court. The students of the same faculty were involved in this aggression, demanding the removal of the classroom provided to some of the IT faculty students,

Pakistan vs Australia to T20 Pakistan won by 66 runs


Pakistan vs Australia to T20 Pakistan won by 66 runs - 155/8 (20) | AUS - 89/10 (16.5) | Babur Assam - 68 * (55), Imad 3-20(4) பாகிஸ்தான் Vs ஆஸ்திரேலியா முதல் T20 பாகிஸ்தான் 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது - 155/8 (20) | AUS - 89/10 (16.5) | பாபர் ஆசாம் - 68 * (55), இமாத் வாசிம் - 3/20 (4)

Wednesday, 24 October 2018

INDvsWI


#மேற்கிந்தியதீவுகள் VS #இந்தியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் ஒருநாள் போட்டியில் #ஷெய்_ஹோப்பின் அதிரடி சதம்; போட்டி சமநிலையில் முடிந்தது #INDvsWI

மிகப்பெரிய ஆலிம் பெருந்தகை ஷைகுனா சித்தாரி ஹம்ஸா ஹழரத் கிப்லா அவர்கள் சற்று முன் வஃபாத்தானார்கள் انا لله وانا اليه راجعون اللهم اغفر له وارحمه وعافه واعف عنه ووسع مدخله واكرم نزله

Tuesday, 23 October 2018

🇱🇰🦁💪💪#கு #ஹூ... 2.0 #LANKAN #BIG #BIG #WON #BY 219RUNS!💪💪😁🦁🦁 #WELL #BOWLING #AKILA #DUSMANTHA #RAJITHA


நீண்ட காலத்திற்கு பின்னர் அருமையான ஒரு ஆட்டம்...🇱🇰🦁💪💪#கு #ஹூ... 2.0 #LANKAN #BIG #BIG #WON #BY 219RUNS!💪💪😁🦁🦁 #WELL #BOWLING #AKILA #DUSMANTHA #RAJITHA வாழ்த்துக்கள் சிங்கங்கள்.. இதே சினத்துடன் சீறி பாய்ந்து அடுத்து நடக்கும் போட்டிகளிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஆரம்ப வீரர்களின் அட்டகாசமான ஆட்டத்துடனும் மத்திய வரிசை வீரர்களின் சிறந்த ஆட்டமும் கை கொடுக்க இலங்கை அணி 50 ஓவர் நிறைவில் 6 விக்கட் இழப்புக்கு 366 ஓட்டங்களை பெற்றது ... துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக நிறோசன் டிக்வெல்ல 95 ஒட்டங்களையும் சதீர சமரவிக்ரம 54 ஓட்டங்களையும் அணித்தலைவர் சந்திமால் 6 பவுண்டரி 2 சிக்சர்கள் அடங்கலாக 80 ஓட்டங்களையும் அதிரடியாக ஆடிய குசல் மென்டிஸ் 1 பவுன்டரி 6 சிக்சர்கள் அடங்கலாக 56 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்... பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் ரொம் கரண் , மோயின் அலி ஆகியோர் தலா 2 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர் பதிலுக்கு துடுப்படுத்தாடிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பம் முதலே விக்கட்டுக்கள் சரிந்தன துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி சார்பில் பென்ஸ் ஸ்டொக்ஸ் அதிகபட்சமாக 67 ஓட்டங்களை பெற்றார் பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் டுஸ்மந்த சமீர 3விக்கட்டுக்களையும் அகில தனஞ்சய 4 விக்கட்டுக்களையும் கைப்பெற்றினார் இங்கிலாந்து அணி 26 ஓவர் நிறைவில் 139 ஓட்டங்களுக்கு 9 விக்கட்டுக்களை இழந்து தோல்வியை தழுவிக் கொண்டது. "..

மய்யித்தை அடக்கம் செய்த பின், உறவினர்கள், நன்பர்கள் உடனே அவ்விடத்தை விட்டு நகர வேண்டாம்!


மய்யித்தை அடக்கம் செய்த பின், உறவினர்கள், நன்பர்கள் உடனே அவ்விடத்தை விட்டு நகர வேண்டாம்! உஸ்மான் இப்னு அஃப்பான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மய்யித்தை அடக்கம் செய்தபின் அங்கு நின்று கூறுவார்கள், *''உங்கள் சகோதரருக்காக பாவமன்னிப்பு கோருங்கள். அவர் உறுதியுடன் இருப்பதற்கு அல்லாஹ்விடம் கேளுங்கள். நிச்சயமாக அவர் இப்போது விசாரிக்கப்பட இருக்கிறார்.''* (ஆதாரம்: அபூதாவூத்) நாம் மய்யித்தை அடக்கம் செய்தவுடன் , உடனே அங்கேயிருந்து புறப்படத்தான் பார்ப்போம். அல்லது ஹஜ்ரத் து'ஆச் செய்வார் . எல்லோரும் வாடிக்கையாக வழக்கமாக ஆமீன் கூறுவோம். அந்த மய்யித்துக்காக நாம் யாராவது ஒருவர் சிறிது நேரம் இருந்து உருக்கமாக அல்லாஹ்விடம் துஆச் செய்வோமா ... ? எப்பொழுதும் சடங்கும், சம்பிரதாயமும் தான் ! ஒரு ஹதீஸ், அம்ரு இப்னுல் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்; *''நீங்கள் என்னை அடக்கம் செய்தால் ஒரு ஆட்டை அறுத்து அதன் இறைச்சியை பங்கீடு செய்யும் நேரம்வரை எனது கப்ரைச் சுற்றி நில்லுங்கள். உங்களைக் கொண்டு நான் ஆறுதல் அடையவும், எனது இரட்சகனின் தூதுவருக்கு எதைக் கூறவேண்டும் என்பதை நான் அறிந்து கொள்வதற்காகவும் (கப்ரைச் சுற்றி நில்லுங்கள்) எனக் கூறினார்கள்.* ஒரு ஆட்டை அறுத்து என்பது பொருள்: ஒரு ஆட்டை அறுத்து அதன் இறைச்சியை பங்கீடு செய்யும் நேரம் வரை, எவ்வளவு நேரம் பிடிக்கும்? ஒரு மணி நேரம் அதிகம் தான் ஆகும். ஆனால் நாம் என்ன செய்கிறோம்; அடக்கம் செய்தபின் முஅத்தின் வழக்கமாக ஓதும் 'துஆ'வுடன் திரும்பி, மறுபடியும் பள்ளிவாசலுக்குள் நுழைந்து மறுபடியும் இமாம் சாகிப் இன்னொறு முறை து'ஆ செய்து வந்தவர்களுக்கு எல்லாம் முஸாபஹா செய்வதில் நேரத்தை செலவிடுகிறோம். இது மார்க்கத்தில் சொல்லப்படாத வழக்கமாகும். மேற்காணும் ஹதீஸிலிருந்து அடக்கம் செய்தபின் உறவினர்கள் அந்த மய்யித்துக்கு து'ஆ செய்வது முக்கியமானது மட்டுமின்றி, அந்த மய்யித்துக்கு மிகவும் அவசியமானது என்பதையும் விளங்கலாம். மறுபடியும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவுருத்தியதை எண்ணிப்பாருங்கள். "உங்கள் சகோதரருக்காக பாவமன்னிப்பு கோருங்கள். அவர் உறுதியுடன் இருப்பதற்கு அல்லாஹ்விடம் கேளுங்கள். நிச்சயமாக அவர் இப்போது விசாரிக்கப்பட இருக்கிறார்." ஆக அடக்கம் செய்யப்பட்டவுடன் அந்த மய்யித் விசாரணைக்கு உள்ளாக்கப்படும் என்பது மட்டுமல்ல அந்த நேரத்தில் நாம் கேட்கும் து'ஆ அந்த மய்யித் உறுதியுடன் இருப்பதற்கு உதவியாக இருக்கும் எனும்பொழுது அந்த மய்யித்துக்கு அந்த உதவி எவ்வளவு முக்கியம் என்பதையும் நாம் உணர வேண்டும். *மய்யித்தை விசாரணை செய்யப்படும் அந்த நேரத்தில் து'ஆ செய்யும் மகத்தான வாய்ப்பு மீண்டும் வரப்போவதில்லை!* எனவே அந்த து'ஆ எவ்வளவு முக்கியம் என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். நமக்கு இப்பொழுது எதுவும் புரியாது. நம்மை அடக்கம் செய்யும்போது எல்லாம் புரிய வரும். *அல்லாஹ் மிக்க அறிந்தவன்.* நன்றி

Sunday, 21 October 2018


1. பர்ஜ் கலீபா - துபைய் - 2016 ( World tallest ) 2. பர்ஜ் கலீபா மஹிந்த பின் நெலும் குல்லும் - கொழும்பு - 2018 எம் தேசமும் முன்னேறிக் கொண்டிருக்கிறது !

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள்.

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள். பாருங்கள் பகிருங்கள்