Thursday, 24 October 2019

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள்.


மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள். பாருங்கள் பகிருங்கள்

Friday, 13 September 2019

ஒருவர் அலீ (ரழி) அவர்களிடம் கேட்டார்.....!!


ஒருவர் அலீ (ரழி) அவர்களிடம் கேட்டார்.....!! நாய் ஒரே நேரத்தில் 6, 7 குட்டிகளை ஈன்றெடுக்கின்றது ஆனால் ஆடுகளோ ஒரு நேரத்தில் 2 அல்லது 3 குட்டிகளையே ஈன்றெடுக்கின்றது. ஆயினும் எல்லா இடங்களிலும் ஆடுகளின் எண்ணிக்கை நாய்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கிறதே..? நாம் ஆடுகளை நாள்தோறும் பலியிடுகிறோம்,அறுக்கின்றோம். அப்படி இருந்தும் அவை எப்போதும் நாய்களை விட அதிகமாகவே இருக்கின்றன. ஏன்..? அலீ (ரழி) அவர்கள் பதில் கூறினார்கள்.....! இதுதான் பரக்கத் (அருள்) ஆகும். அதற்கு அவர் பரக்கத் ஆடுகளிடம் மட்டும் ஏன் இருக்கிறது..? நாய்களிடம் ஏன் இருப்பதில்லை..?? எனக் கேட்டார்...!! அலீ (ரழி) அவர்கள் கூறினார்கள்...! ஆடுகள் இரவின் முற்பகுதியிலேயே தூங்கி விடுகின்றன. மேலும் ரஹ்மத்தின் (அருளின்) வேளையாகிய ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுகின்றன. எனவே அருளைப் பெற்றுக் கொள்கின்றன. ஆனால் நாய்கள் இரவு முழுக்க குலைத்து விட்டு ஃபஜ்ர் நேரம் நெருங்கும்போது தூங்குகின்றன. எனவே அவற்றின் ரிஸ்கில் ரஹ்மத்தும் பரக்கத்தும் இருப்பதில்லை. எனவே நான் உமக்கு அறிவுரை கூறுகிறேன்...!! நீர் இரவில் சீக்கிரம் தூங்குவீராக. ஃபஜ்ரில் சீக்கிரம் எழுவீராக. இதுவே வாழ்வாதாரத்திலும் சந்ததிகளிலும் அபிவிருத்திக்கான வழிமுறையாகும்......!!

ஒரு நாட்டின் மாமன்னராக இருந்த போதிலும் கடைசிவரை குடிசையிலேயே வாழ்ந்த முஹம்மது (ﷺ) அவர்களை விடவா உங்களால் ஒரு கம்யூனிஸ்டை அடையாளம் காட்டிவிட முடியும்.


நிச்சயம் முடியாது ஒரு நாட்டின் மாமன்னராக இருந்த போதிலும் கடைசிவரை குடிசையிலேயே வாழ்ந்த முஹம்மது (ﷺ) அவர்களை விடவா உங்களால் ஒரு கம்யூனிஸ்டை அடையாளம் காட்டிவிட முடியும். அடிமையாக (கருதிய) வம்சத்திலிலிருந்து வந்த பிலால் அவர்களை முதன் முதலாக பள்ளிக்கு தொழுகைக்கு அழைப்பு கொடுக்க வைத்த உலகத்தின் வழிகாட்டி முஹம்மது (ﷺ) அவர்களை விடவா உங்களால் ஒரு சாதி மறுப்பாளரை அடையாளம் காட்டிவிட முடியும். உறவுகளிலேயே தாய்க்குதான் முதலிடம் என்பதை சுட்டிக்காட்டிய முஹம்மது (ﷺ) அவர்களை விடவா உங்களால் ஒரு பெண்ணியவாதியை அடையாளம் காட்டிவிட முடியும். வெறும் முன்னூறு பேருடன் போருக்கு சென்று யுத்தகளத்திலே வெற்றி வாகை சூடிய முஹம்மது (ﷺ) அவர்களை விடவா உங்களால் ஒரு போர்ப்படை தளபதியை அடையாளம் காட்டிவிட முடியும். உங்கள் மார்க்கம் உங்களுக்கு அவர்கள் மார்க்கம்அவர்களுக்கு என்று கூறிய முஹம்மது (ﷺ) அவர்களை விடவா உங்களால் ஒரு மதநல்லிணக்க தலைவரை அடையாளம் காட்டிவிட முடியும். என் மகளே திருடியிருந்தாளும் அவர் கையையும் வெட்டுவேன் என்று கூறிய முஹம்மது (ﷺ) அவர்களை விடவா உங்களால் ஒரு நீதியாளரை அடையாளம் காட்டிவிட முடியும். நீங்கள் எந்த விசயத்தை எடுத்தாலும் எங்களது முஹம்மது (ﷺ) அவர்களை மிஞ்சி ஒரு அடையாளம் காட்டிவிடவா முடியுமா? நிச்சயம் முடியாது. எங்கள் தலைவர் முஹம்மது நபி (ﷺ) எங்கள் வழிகாட்டி முஹம்மது நபி (ﷺ) அவர்களைத்தான் நான் நாங்கள் பின் பற்றுவோம். எங்கள் இறுதி மூச்சு இருக்கும்வரை இன் ஷா அல்லாஹ். நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. (அல்குர்ஆன்:

Sunday, 1 September 2019

இயற்கை பிரியர்களின் (Paradise) சுவர்க்கம்........! Reed & share


இயற்கை பிரியர்களின் (Paradise) சுவர்க்கம் என்று அழைக்கப்படும் கண்டி மாவட்டத்தின் வனப்பகுதியில் உள்ள ஒரு தனிமைப்படுத்தப்பட்ட குக்கிராமமான மீமுர கிராமம் மீமுர கிராமம் என அழைக்கப்படும் இக்கிராமம் இலங்கையின் மத்திய மாகாணத்தில் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட கிராமமாகும், இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 324 மீ உயரத்தில் அமைந்துள்ளது இது முற்றுமுழுதாக 3 மலைகளால் மறைக்கப்பட்டுள்ளது சுமார் 100 அல்லது 120 குடும்பங்களைக்கொண்ட இக்கிராமத்தின் அண்மைய சனத்தொகை கணெக்கெடுப்பின் படி சுமார் 400 பேர்களே வசித்து வருகின்றனர் இலங்கையின் பண்டைய பழக்கவழக்கங்கள், உணவு, வாழ்வாதாரங்கள், விவசாய முறைகள், விவசாய உபகரணங்கள், பல்வேறு நம்பிக்கைகள் கொண்ட இந்த கிராமத்து மக்கள் ஒரு அற்புதமான வாழ்க்கை முறையை வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள், இன்றைய நவீன உலகில் டெக்னாலஜி தவிர நம்மால் அடைய முடியாத பல சாதனைகளை இக்கிராம மக்களின் வாழ்வியலில் புரிந்து கொள்ள முடியும் இந்த கிராமம் பிரதான சாலையான நக்கல்ஸ் வனத்திலிருந்து 35 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கிராமத்திற்கு செல்லும் வழியில், இலங்கையின் கிட்டத்தட்ட அனைத்து முக்கிய காடுகளையும் காணலாம். ரம்மியமான பல காட்டு நீர்வீழ்ச்சிகளையும் பல சரிவுகள் சிகரங்களையும் கொண்ட இந்த கிராமத்திற்கு செல்லும் பாதை மிகவும் அழகாக இருக்கிறது. இயற்கையாகவே அமையப்பெற்ற குளங்கள், சாய்வான நீர்வீழ்ச்சிகள், ஏறும் மலைகள், மேடுகள் மற்றும் இயற்கையின் அழகு ஆகியவற்றால் உண்டாகும் திகில், ஆர்வம் மற்றும் மகிழ்ச்சியின் அதிசயங்களை அனுபவிக்க மிமுரா மிக பொருத்தமான இடமாகும் கிராமத்தின் கிழக்கே பிரமிட் வடிவிலான லேகலா மலை அமைந்துள்ளது; மேற்குப்பாகம் அழகிய நக்கல்ஸ் வரம்பினால் ஆதிக்கம் செலுத்துகிறது. இதன் வடக்கு எல்லையானது ‘பிடாவாலா பதானா’ என்ற புள்வெளிக்கு செல்லும் ஒரு காடுகளின் எல்லையாகும்; தெற்குப்பாகம் ஹீன் என்கின்ற நதியால் முற்றுமுழுதாக சூழப்பட்டுள்ளது. 2004 ம் ஆண்டு வரை மீமூர கிராமத்திற்கு சென்றடைய போக்குவரத்து முறையாக கால் நடைகள் மட்டுமே பயன்படுத்தப்படு வந்தன. கால்நடைகள், மந்தைகள் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் நிறைந்த சாக்குகளை கிராமத்திற்கு கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டன . தற்போது , முச்சக்கர வண்டிகள், ஜீப்புகள் மற்றும் சிறிய லாரிகளை அனுமதிக்க பாதைகள் சற்று அகலப்படுத்தப்படு புனரமைக்கப்பட்டுள்ளன. இந்தக்கிராமத்தின் உள்ளே Camping அல்லது Hiking செல்வதாயின் நன்கு அனுபவம் வாய்ந்த அந்த கிராமவாசிகளுடன் மட்டுமே செல்ல முடியும் இந்த கிராமத்தை சூழவுள்ள வீதிகள் மலைகள் மிகவும் பயங்கரம் வாய்ந்தவை ஆகவே உங்களது பாதுகாப்பை முன்கூட்டியே திட்டமிட்டு பயணம் செய்யுங்கள்.

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள்.

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள். பாருங்கள் பகிருங்கள்