Friday, 31 August 2018

உங்கள் *மெளலவி நண்பர்களுக்கு* அதிகம் பகிருங்கள்


*மெளலவி சான்றிதழைப்* பெற்ற 35 வயதுக்குட்பட்ட நபரா? *நீங்கள்* *ஆம். எனில்,* ௧ல்வி அமைச்சின் கீழ் நீங்களும் ஓர் *இஸ்லாம் பாட ஆசிரியராகலாம்* *௧ல்வித் தகைமைகளாக* +O/L தமிழ் அல்லது சிங்களத்தில் *S* சித்தி +A/L பரீட்சையில் 03 பாடங்களில் *S* சித்தி முடிவுத்திகதி:- *2018-09-28* *வயது எல்லை* 21-35 *உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்* மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள *F Maclanka* (Send to) *40404* விண்ணப்பபடிவங்களை *மெக் லங்கா - கல்வி - தொழில் - வழிகாட்டல் மற்றும் ஆலோசனை சேவையினூடாக* தபாலில் பெற்றுக் கொள்ளலாம். அனைத்து கல்வி வழிகாட்டல் சம்பந்தமான தகவல்களை தொடர்ச்சியாக பெற்றுக் கொள்ள *உங்கள் பெயர் மற்றும் ஊரைக் குறிப்பிட்டு* கீழுள்ள ஏதேனும் ஒரு இலக்கத்திற்கு *Add Maclanka* என *type* செய்து *whatsapp* ஊடாக *SMS* செய்யுங்கள். *விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ள* 077 180 2 103

முஸ்லிம்களிடம் ஆயுதங்களா..? முக்கிய தலைவர்களிடம் ஹிஸ்புல்லாஹ் விடுத்துள்ள கோரிக்கை


முஸ்லிம்களிடம் ஆயுதங்களா..? முக்கிய தலைவர்களிடம் ஹிஸ்புல்லாஹ் விடுத்துள்ள கோரிக்கை விடுதலைப் புலிகளிடம் இருந்த ஆயுதங்களை கொள்வனவு செய்து முஸ்லிம் இளைஞர்களுக்கு வழங்கியதாக தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை முற்றாக நிராகரித்த நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், இந்த விடயம் தொடர்பில் முறையான தீவிர விசாரணையொன்று மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார். இதேவேளை, இக்குற்றச்சாட்டின் பின்னணியில் தேச விரோத, இனவாத சக்திகள் செயற்படுவதாகவும் இதனால் தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோருக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இன்று வியாழக்கிழமை அனுப்பி வைத்த விசேட கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:- ‘புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி 2018.08.18ஆம் திகதி கொழும்பில் நடத்தியிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அதன் தலைவர் இன்பராசா கந்தசாமி முன்வைத்த கருத்துக்கள் எவ்வித ஆதாரமும் அற்ற, பாராதூரமான போலிக் குற்றச்சாட்டாகும். விடுதலைப் புலிகளிடம் இருந்த 5ஆயிரத்துக்கும் அதிகமான ஆயுதங்களை நானும் அமைச்சர் ரிஷாட்; பதியூதீனும் பெற்று அதனை கிழக்கு மாகாணத்திலுள்ள மூதூர், கிண்ணியா, காத்தான்குடி உள்ளிட்ட முஸ்லிம் பிரதேசங்களில் உள்ள இளைஞர்களுக்கு வழங்கியதாக தெரிவித்திருந்தார். இந்த குற்றச்சாட்டை நான் முற்றாக நிராகரிப்பதோடு, ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இவ்வாறான போலிக் குற்றச்சாட்டொன்றை முன்வைத்தமை தொடர்பில் தீர விசாரணை நடத்தப்பட வேண்டும். அத்துடன், அவ்வாறு ஆயுதங்கள் இருக்குமாயின் அது எங்குள்ளது? விற்பனை செய்யப்பட்டுள்ளதாயின் அது யாருக்கு? எப்போது? எவ்வாறு? விற்பனை செய்யப்பட்டுள்ளது போன்ற தகவல்களை வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறான போலிக் குற்றச்சாட்டுக்கள் காரணமாக சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் எழுந்துள்ள சந்தேகங்கள் எனது கௌரவத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், எனது பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இக்குற்றச்சாட்டின் பின்னணியில் தேச விரோத, இனவாத சக்திகள் செயற்படலாம். நாட்டின் அமைதியை சீர்குழைத்து சாதாரண மக்களை குழப்பி நாட்டில் மீண்டுமொரு யுத்த சூழலை ஏற்படுத்துவதே குறித்த சக்திகளின் எதிர்பார்ப்பும் - முயற்சியுமாகும். இதேவேளை, புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சி முன்வைத்த போலிக் குற்றச்சாட்டினை பெரிதுபடுத்தும் வகையில் தேசிய சுதந்திர முன்னணி, ராவன்னா பலய, தேசிய ஒறுங்கமைப்பு ஒன்றியம் மற்றும் சிங்கள ராவய போன்ற அமைப்புக்களும் - கட்சிகளும் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்புக்களினாலும் எனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே, இது சம்பந்தமாக சட்டம் ஒழுங்கு அமைச்சின் ஊடாக முறையான தீவிர விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும். அத்துடன், இவ்வாறு போலிக் குற்றச்சாட்டு முன்வைத்த தரப்பை தீர விசாரிப்பதோடு, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான இவ்வாறான பிரச்சாரங்களை செய்வதற்கு பின்னணியில் இருந்து செயற்பட்டவர்கள் யார் ? என்பது தொடர்பிலும் விசாரணை மேற்கொள்வது அத்தியவசியமாகும். இது தொடர்பில் மேற்கொள்ளும் விசாரணைக்கு எனது பூரண ஒத்துழைப்பினை வழங்குவேன் - என குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, 29 August 2018

இன்று ஆகஸ்டு 29 இருபதாம் நூற்றாண்டின் மகத்தான பாப் இசைக் கலைஞர் என்று போற்றப்படும்....


இன்று ஆகஸ்டு 29 இருபதாம் நூற்றாண்டின் மகத்தான பாப் இசைக் கலைஞர் என்று போற்றப்படும்.... #மைக்கேல் ஜோசஃப் ஜாக்ஸன் பிறந்த தினம்.... *அமெரிக்காவின் இன்டியானா மாகாணம் கேரி (Gary) என்ற இடத்தில் ஆப்பிரிக்க-அமெரிக்க தம்பதியின் எட்டாவது குழந்தையாகப் பிறந்தார் (1958). *தந்தை ஒரு இரும்பு ஆலையில் கிரேன் ஆபரேட்டராக இருந்தார். ஒரு இசைக் கலைஞரும்கூட. *தன் சகோதரர்களுடன் பாண்டு வாத்தியக் குழுவில் இசைத்து வந்தார். 6 வயதில் ஆரம்பப் பள்ளியில் நடைபெற்ற பாடல் போட்டியில் சிறுவன் முதல் பரிசு பெற்றான். *இந்த வெற்றி, இசை ஆர்வத்தை அதிகரிக்க வைத்தது. அண்ணன்மார்கள் இணைந்து ஆரம்பித்த ஜாக்ஸன்-5 இசைக் குழுவில் அங்கம் வகித்தான். *உலகளவில் பிரபலமான அப்பல்லோ தியேட்டரில் ஜாக்ஸன்-5 குழுவின் முதல் ஆல்பத்தை 1982-ல், பிரபல பாடகி டயானா ராஸ் வெளியிட்டார். இந்தச் சிறுவனுடன் இணைந்து தொடர்ந்து பாடி வந்தார். இதனால், உலகம் முழுவதும் இவனது புகழ் பரவியது. 9 வயதிலேயே நட்சத்திர அந்தஸ்து வசப்பட்டது. 24-ம் வயதில் இவர் வெளியிட்ட ‘த்ரில்லர்’ இசை ஆல்பம்தான் இன்றுவரை உலகிலேயே மிக அதிகமாக விற்பனையான இசை ஆல்பம். *இந்த வெற்றி கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம் பிடித்தது. *பல கிராமி விருதுகளையும், அமெரிக்க இசை விருதுகளையும் வென்றுள்ளார். *கிராமி வாழ்நாள் சாதனையாளர் விருதும் பெற்றுள்ளார். *இவரது ‘பிளாக் அன்ட் ஒயிட்’ என்ற வீடியோ ஒரே நேரத்தில் 27 நாடுகளில் ஒளிபரப்பப்பட்டது. *50 கோடி ரசிகர்கள் இதைக் கண்டு ரசித்தனர். *இன்றுவரை இவ்வளவு அதிகமான ரசிகர்கள் பார்த்த ஒரே நிகழ்ச்சி இதுதான். *இவருடைய மொத்த ஆல்பங்களும் இதுவரை ஏறக்குறைய 20 கோடி விற்பனையாகி உள்ளன. *த்ரில்லர், பேட், டேஞ்சரஸ், பில்லி ஜீன் ஆகிய ஆல்பங்கள் இன்றும் இளைஞர்களை மெய்மறக்க வைக்கும் இசைப் பொக்கிஷங்கள். *நெற்றியின் முன் சரிந்து விழும் முடிக்கற்றையோடு மைக்கேல் ஜாக்ஸன் மேடையில் தோன்றிய உடனேயே ரசிகர்கள் எழுப்பும் ஆரவார முழக்கம், விண்ணைப் பிளக்கும். *பாடல் எழுதி, அதற்கு இசையமைத்து, பாடலுக்கு ஏற்றாற்போல நடனம் ஆடுவது, இடையிடையே நடிப்பு என அனைத்தும் கலந்த ‘பாப்’ நடனத்தைப் படைத்த அபூர்வ இசை மேதை, இவர். *அமெரிக்காவில் மக்கள் செல்வாக்குப் பெற்ற முதல் கருப்பின இசைக் கலைஞர். இவர் படைத்த ரோபாட், மூன்வாக் போன்ற நடன வகைகள் மிகவும் பிரபலம். *இவர் குறித்த பல சர்ச்சைகள் வலம் வந்தாலும், எதுவுமே இவரது புகழை மங்கச் செய்ததில்லை. *இன்றளவும் பாப் இசையுலகின் ஈடுஇணையற்ற கலைஞராகப் போற்றப்படும் மைக்கேல் ஜாக்சன், உடல் நலம் பாதிக்கப்பட்டு 2009-ம் ஆண்டில் 50-வது வயதில் மறைந்தார்.

●இது உலமாக்களின் எச்சரிக்கை ●


*(Miu)*எனும் சுருக்க குறியீடு இலங்கையில் அமைந்துள்ள ஒரு {சியா }அமைப்புடைய பல்கலைக்கழகத்துடைய குறியீடாகும் இந்த குறியீடு இடப்பட்டு வரும் அனைத்து கல்வி சம்பந்தப்பட்ட அல்லது வேறு மார்க்க சம்பந்தப்பட்ட விடயங்கள் இன்னும் போட்டி பரிட்சைகள் அனைத்தையும் தவிரிந்து இருங்கள் ●இது உலமாக்களின் எச்சரிக்கை ●

யார் இந்த சகோதரி ,அடையாளம் காண உதவுங்கள்.அதிகம் செயர் செய்யுங்கள்


யார் இந்த சகோதரி ,அடையாளம் காண உதவுங்கள்.அதிகம் செயர் செய்யுங்கள் இன்று குருனாகல் பகுதியில் புத்திசுயாதீனமற்றவராக அலைந்த இச் சகோதரியை, முஸ்லீம் என அடையாளங்கண்ட சிங்கள சகோதரர் ஒருவர் தனது ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு குருனாகல் முஸ்லீம் பகுதியில் இறக்கிவிட்டு, அங்குள்ளவர்களிடம் "இப் பெண் பேச முடியாது குருனாகல் பஸ் நிலையம் பக்கம் அலைந்து திரிந்ததால், பாதுகாப்பு கருதி ஏற்றி வந்து தந்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். அதன் பின்னர் இப் பெண்ணை கரீம் என்ற சகோதரர் ஒருவர் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று, நீங்க யார்? எங்கிருந்து வருகிறீர்கள் என விசாரித்தபோது, #சாய்ந்தமருது, #தில்லையடி என்ற இருவார்த்தைகளை தவிர எதுவும் பேசுவதாக இல்லையாம் இப் பெண்ணிடம் பஸ்ஸில் பயணித்த டிகட் மட்டுமே இருந்ததாம். அதனையும் பதிவிறக்கம் செய்துள்ளேன். தயவுசெய்து இப் பெண்ணின் உறவினர்களிடம் இச் செய்தி சென்றடைய உதவுங்கள். சகோதரர் கரீமின் தொலைபேசி இலக்கம். Careem Kurunagala 0777157605 இப் பெண்ணை பாதுகாப்பாக முஸ்லீம் பகுதிக்குள் கொண்டு சென்று கையளித்த சிங்கள சகோதரருக்கு எனது சமூகம் சார்பாக பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். (இது 29/08/2018 இரவு 8.30 க்கு முகநூல்வாயிலாக கிடைத்த செய்தி. பிரதி செய்து பகிர்கிறேன்)

நபி (ஸல்) அவர்கள் பற்றிய சில........


நபி ஸல் 1. நபி (ஸல்) அவர்கள் பிறப்பு : 20-04-570 திங்கட்கழமை, ரபீஉல் அவ்வல் மாதம் பிறை 12 2. பிறந்த இடம் : திரு மக்கா 3. பெற்றோர் : அப்துல்லாஹ் - அன்னை ஆமீனா 4. பாட்டானார் : அப்துல் முத்தலீப் 5. தந்தை மரணம் : நபி (ஸல்) அவர்கள் கருவில் இருக்கும் போது 6. தாயார் மரணம் : நபி (ஸல்) அவர்களின் ஆறு வயதில் 7. பாட்டனார் மரணம் : நபி (ஸல்) அவர்களின் எட்டு வயதில 8. வளர்ப்பு : பாட்டனாருக்குப் பின் பெரிய தந்தை அபூதாலிப் 9. செவிலித் தாய்மார்கள் : ஹள்ரத் துவைஃபா (ரளி) என்ற அடிமைப் பெண் பின்பு ஹள்ரத் ஹலிமா (ரளி) அவர்கள் 10. பட்டப் பெயர்கள் : அல் அமீன் (நம்பிக்கைக்கு உரியவர்), அஸ்ஸாதிக் (உண்மையானவர்) 11. முதல் வணிகம் : அன்னை கதீஜா (ரளி) அவர்களின் வணிகக் குழுவில் சேர்ந்து சிரியா தேசம் பயணம் 12. முதல் திருமணம் : அன்னை கதீஜா (ரளி) அவர்களுடன் 13. மஹர் தொகை : 500 திர்ஹங்கள் 14. திருமணத்தை நடத்தி வைத்தவர் : அபூதாலிப் அவர்கள் 15. நபி (ஸல்) அவர்கள் மனைவியர் : அன்னை கதீஜா (ரளி), அன்னை ஸவ்தா (ரளி), அன்னை ஆயிஷா (ரளி), அன்னை ஹஃப்ஸா (ரளி), அன்னை ஜைனப் பின்த் குஜாமா (ரளி), அன்னை உம்முஸல்மா (ரளி), அன்னை ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரளி), அன்னை ஜுவைரிய்யா (ரளி), அன்னை உம்மு ஹபீபா, அன்னை ஸஃபிய்யா (ரளி), அன்னை மைமூனா (ரளி), அன்னை மரியத்துல் கிப்தியா (ரளி) 16. ஆண் மக்கள் : காஸிம் (ரளி) அப்துல்லாஹ் (ரளி), இப்றாஹீம் (ரளி) இவர்கள் குழந்தைப் பருவத்திலேயே மௌத்தாகிவிட்டார்கள் 17. பெண் மக்கள் : ஜைனப் (ரளி), ருகையா (ரளி), உம்முகுல்தூம் (ரளி), ஃபாத்திமா (ரளி) 18. பேரர்கள் : அலீ (ரளி), உமாமா (ரளி), முஹ்சின் (ரளி), ஹசன் (ரளி) ஹுசைன் (ரளி) 19. ஊழியர்கள் : பிலால் (ரளி), அனஸ் (ரளி), உம்மு அய்மன் மாரியா (ரளி) 20. அடிமை : ஜைதிப்னு ஹாரிதா (ரளி) 21. பெருமானார் (ஸல்) அவர்களின் தகப்பனார் உடன் பிறந்தோர் : மொத்தம் 12 பேர். அவர்களில் இஸ்லாத்தை ஏற்றவர்கள் ஹள்ரத் ஹம்ஜா (ரளி), ஹள்ரத் அப்பாஸ் (ரளி) 22. பெருமானார் (ஸல்) அவர்களின் தாய்; உடன் பிறந்தோர் : மொத்தம் 6 பேர். அவர்களில் இஸ்லாத்தை ஏற்றவர்கள் ஹள்ரத் அம்மாரா (ரளி), ஹள்ரத் ஆத்திகா (ரளி), ஹள்ரத் ஸஃபிய்யா (ரளி) 23. நபிப் பட்டம் கிடைத்தது : 40 – ம் வயதில் (கி.பி. 610) 24. நபிப் பட்டம் கிடைத்த இடம் : ஹிரா குகை 25. முதல் வஹீ : 'இக்ரஃ பிஸ்மி' என்ற வசனம் 26. முதல் முதலாக ஈமான் கொண்டவர்கள் : பெண்களில் - ஹள்ரத் அன்னை கதீஜா (ரளி), சிறுவர்களில் - ஹள்ரத் அலீ (ரளி), ஆண்களில் ஹள்ரத் அபூபக்கர் (ரளி), அடிமைகளில் - ஹள்ரத் பிலால் (ரளி) 27. முஸ்லிம்களின் முதல் ஹிஜ்ரத் : அபிசினியாவிற்கு, நபித்துவம் 5 – ம் ஆண்டில், மன்னர் நஜ்ஜாஸி ஆட்சியில் 28. முதல் ஹிஜ்ரத் செய்தவர்கள் : நபி (ஸல்) அவர்களின் மகள் ருகையா (ரளி), மருமகன் ஹள்ரத் உஸ்மான் (ரளி) மற்றும் ஆண்கள் 11 பேர், பெண்கள் 4 பேர் 29. தாயிஃப் நகரில் தவ்ஹீத் : நபித்துவ 10 – ம் ஆண்டில், துணையாகச் சென்றவர் ஹள்ரத் ஜைது (ரளி) 30. மக்காவில் தீனழைப்பு : 13 ஆண்டுகள் 31. மதீனாவிற்கு ஹிஜ்ரத் : நபித்துவ 14 – ம் ஆண்டில் 32. உடன் சென்றவர் : ஹள்ரத் அபூபக்கர் (ரளி) 33. ஹிஜ்ரத்தின் போது மறைந்திருந்த குகை : தௌர் 34. மதீனா சேர்ந்த நாள் : ஈஸவி 25-09-622 - ல் 35. பத்ரு யுத்தம் : ஹிஜ்ரி 2, ரமளான் மாதம் 36. தொழுகைக்கு பாங்கு அறிமுகப்படுத்தப்பட்டது : ஹிஜ்ரி - 2 ல் 37. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் கஃபா கிப்லாவாக ஆக்கப்பட்டது : ஹிஜ்ரி - 2 ல 38. உஹது யுத்தம் : ஹிஜ்ரி - 3 ல் 39. அகழ் யுத்தம் : ஹிஜ்ரி - 5 ல் 40. ஹுதைபிய்யா உடன்படிக்கை : ஹிஜ்ரி - 6 ல் 41. மது ஹராமாக்கப்பட்டது : ஹிஜ்ரி - 6 ல் 42. நபி (ஸல்) அவர்களின் புனித பல் ஷஹிதான யுத்தம் : உஹது யுத்தம் 43. நபி (ஸல்) அவர்களின் காலத்து போர்களில் சில : பனூ முஸ்தலிக், ஹுனைன், தாயிப், பனூ கைனூக், பனூ நஸீர், பனூ குறைளா, கைபர், மூத்தா, தபூக் யுத்தங்கள் 44. மக்கா மீது படையெடுப்பு : ஹிஜ்ரி - 8 ல் 45. மிஃராஜ் : நபித்துவ 12 – ம் ஆண்டில, ரஜப் பிறை 27 திங்கட் கிழமை 46. தொழுகை கடமையாக்கப்பட்டது : மிஃராஜில் 47. ஹஜ் கடமை : ஹிஜ்ரி - 9 ல் 48. நபி (ஸல்) அவர்கள் ஹஜ் செய்தது : ஹிஜ்ரி – 10 49. நபி (ஸல்) அவர்களின் தலையிலும் தாடியிலும் இருந்த மொத்த நரை முடிகள் : 17 50. நபி (ஸல்) அவர்கள் செய்த இறுதிப் பிரசங்கம் : ஹஜ்ஜத்துல் விதாவில் 51. இறுதி வஹி : 110 – ம் அத்தியாயம் 52. நபி (ஸல்) அவர்கள் உலகைப் பிரிந்த நாள் : ஹிஜ்ரி 10, ரபீஉல் அவ்வல் பிறை 12, திங்கட்கிழமை 53. நபி (ஸல்) அவர்களின் புனித உடலை கழுவ நீர் எடுக்கப்பட்ட கிணறு : அரீஸ் கிணறு 54. நீராட்டியவர்கள் : ஹள்ரத் அலீ (ரளி), ஹள்ரத் அப்பாஸ் (ரளி), ஹள்ரத் பழ்ல் (ரளி), ஹள்ரத் குஸீ (ரளி), ஹள்ரத் உஸாமா (ரளி), ஹள்ரத் ஷக்ரான் (ரளி), ஹள்ரத் உஸ் இப்னு கௌல் அன்சாரி (ரளி) 55. ஜனாஸா தொழுகை : 72

ஆப்பிளால் வரும் புற்று நோய் ஒருஅதிர்ச்சி ரிப்போர்ட் !


ஆப்பிளால் வரும் புற்று நோய் ஒருஅதிர்ச்சி ரிப்போர்ட் ! ஆப்பிள் பழங்களில் மெழுகு பூசுவது காலம் காலமாக நடந்து வந்தாலும், இப்போதுதான் வெளிச்சத்துக்குவ ந்துள்ளது. உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கக்கூடிய மெழுகைப் பயன்படுத்தியதே இதற்குக் காரணம்.பழங்கள், காய்கறிகள் நீண்ட நாள்கள் கெடாமல் பாதுகாக்க மெழுகு பூசுவது 1920-லிருந்தே புழக்கத்தில் இருக்கிறது. உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சில வகை மெழுகுகள்தான் இதற்கு பயன்படுத்தப்பட்டு வந்தன. இவை அனைத்தும் இயற்கையாகக் கிடைக்கக் கூடியவை. இவ்வகையான மெழுகுகள் சில சாக்லேட்டுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரை நாட வேண்டிய அவசியம் இராது என்கிறது ஆங்கிலப் பழமொழி. ஒரு காலத்தில் வேண்டுமானால் இந்தப் பழமொழி உண்மையாக இருக்கலாம். ஆனால் இப்பொழுது நிலைமை வேறு.ஆப்பிள் சத்துக்கள் நிறைந்த பழமே.கொலெட்ரோலைக் குறைப்பதற்கும் சரும நோய்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கும் அது அரியபங்காற்றுகிறது. குழந்தைகளின் வளர்ச்சிக்கும் உறுதுணையான நல்ல பழம்.அதுவும் ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப் பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடுதான் சாப்பிட வேண்டும் என்று கூறுவர். ஏனெனில் பெக்டின் நம் உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவதற்கு உதவுகிறது. ஆனால் இப்பொழுது சந்தையில் விற்கப்படும் ஆப்பிளைத் தோலோடு சாப்பிடுவது சாத்தியமில்லை. நம் நாட்டில் ஆப்பிள் விளைவதில்லை. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிலி, நியூசீலாந்து, சீனா ஆகிய நாடுகளிலிருந்துரெட் டெலீசியஸ், ராயல் ஹாலா, கிராணி ஸ்மூத் ஆகிய ஆப்பிள் வகைகளை இறக்குமதி செய்கிறார்கள்.அவை நம் நாட்டை வந்தடைய சுமார் 3 மாதங்களாவது பிடிக்கும். அவற்றின் நிறம், சுவை கெடாமல் இருக்கவும் பூச்சிகள் நுழைந்துவிடாமல்தடுக்கவும், நீர்ச்சத்து வெளியேறாமல் இருக்கவும், பார்ப்பதற்குப் பசுமையாக இருக்கும் பொருட்டும் அதன் மேல் மெழுகு தடவி இறக்குமதி செய்கிறார்கள். சாதாரண பழம் 10 நாட்களில் கெட்டுப்போகும் என்றால் மெழுகு பூசப்பட்ட பழம் 6 மாதம் வரை கெடாது.ஆரம்ப காலங்களில் பீஸ் மெழுகு, கார்னோபா மெழுகு, ஷெல்லாக் மெழுகுஆகிய மூன்று வகைகளை மட்டுமே பயன்படுத்தி வந்தார்கள். அதுவும் இதனை ஒரு ஆப்பிளின் மேல் 3 மில்லிகிராம் அளவே தெளிக்க வேண்டும். "பீஸ் மெழுகு" என்பது தேனடையில் கிடைக்கும் மெழுகு. கார்னோபா, ஷெல்லாக் ஆகியவை மரங்களிலிருந்துகிடைக்கும் இயற்கை மெழுகுகள். இவற்றால் ஆபத்துக்கள் குறைவு. ஆனால் இப்பொழுது பெரும்பாலும் இரசாயன மெழுகையும் தண்ணீரில் கரையும் பேரா·பின் மெழுகையும் பயன்படுத்துகிறார்கள். நைட்ரேட் சேர்க்கப்படும் பழங்களில்"நைட்ரைஸோ மார்போலின்" என்னும் ஒரு இரசாயனம் உருவாகிறது. இது புற்றுநோய்க்கானமுக்கிய காரணி ஆகும்.நீங்கள் வாங்கிய ஆப்பிளை படத்தில் உள்ளதைப் போன்று கத்தியை வைத்துச் சுரண்டவும். அதில் மெழுகுத் துகள் வெளியேறினால் அது மெழுகு பூசப்பட்ட பழமாகும்.நீங்கள் ஆப்பிளை எப்படிக் கழுவினாலும் அதிலுள்ள மெழுகு போகாது.பழங்கள் சாதாரணமாக நான்கு வகைகளில் மெழுகு பூசப்படுகின்றன. முதலாவது முறையில் பழங்களை சூடான பாரஃபின் மெழுகில் முக்கி எடுப்பார்கள். இந்த முறையில் பழத்தில் மெழுகின் பூச்சு அதிக அளவில் காணப்படும்.இரண்டாவது முறையில் விரைந்து சுழலும் துரிகைகளின் மூலமாக பழத்தில் மெழுகு அழுத்திப் பூசப்படும்.மூன்றாவது முறை தெளிப்பு முறையாகும். இதில் உருகிய மெழுகை பழத்தின் மேல் தெளித்து தூரிகையால் தடவி, தேவையான திடத்துக்கு கொண்டு வருவார்கள். நான்காவது முறையில் பழங்களை நன்றாகக் கழுவி உலர்வதற்கு முன் குறிப்பிட்ட அடர்த்தியுள்ள மெழுகு திரவக் கலவையில் முக்கி எடுப்பர். அவற்றைப் பெட்டிகளில் அடுக்கும் முன் காயவைப்பர். பழங்கள் குளிர்பதனப் பெட்டிகளில் பாதுகாக்கப்பட்டு விமானங்களில் பயணப்படுவதால் அதிக அளவில் கரியமில வாயு காற்று மண்டலத்தில் வெளியேற்றப்படுகிறதாம். சாலை, ரயில், கப்பல் போக்குவரத்தை விட பழங்களின் விமானப்பயணத்தால் காற்று அதிக அளவில் மாசுபட்டு சுற்றுச்சூழலும்சீர்கெட்டு வருகிறதாம். ஒரு கிலோ ஆப்பிள் 6,000 மைல்களைக் கடக்கிறபோது, விமானப் பயணத்தில் 10.6 கிலோ கரியமிலவாயுவும், கப்பல் வழியாக வரும்போது 1.2 கிலோவும், ரயில் வழியாக வரும்போது 0.2 கிலோவும், சாலை வழியாக வரும்போது 2.6 கிலோ கரியமிலவாயுவை காற்று மண்டலத்தில் கக்குகிறதாம். இப்படி ஆறாயிரம் மைல்கள் கடந்து வரும் ஒரு ஆப்பிளைச் சாப்பிடுவதால் காற்றிலும் விஷத்தைக் கலக்கிறோம் அதன் மேல் பொதிந்திருக்கும் ரசாயனப் பூச்சால் வயிற்றிலும் விஷத்தைக் கலக்கிறோம்.


*ஏழு விதமான ஆச்சரியங்கள்*


*ஏழு விதமான ஆச்சரியங்கள்* 1. மரணம் என்பது நிச்சயிக்கப்பட்ட நேரத்தில் வந்தே தீரும் என்பதை அறிந்த மனிதர்கள், கவலைப்படாமல், தன் கடமைகளச் செய்யாமல் சிரித்துக் கொண்டிருப்பதும் ஆச்சரியம்... 2. ஒரு நாளில் இவ்வுலகம் அழிந்து போகும் என்பதை அறிந்த மனிதன், உலகத்தின்மீது மோகம் கொண்டிருப்பது ஆச்சரியம்... 3. எந்த ஒரு செயலும் இறைவன் விதித்தபடியே நடக்கும் என்பதை அறிந்த மனிதன், கைநழுவிச் சென்றவற்றை எண்ணி கவலைப்பட்டுக் கொண்டிருப்பது ஆச்சரியம்... 4. மறுமை வாழ்க்கைக்கான தீர்வு இவ்வுலகிலேயே இருப்பதை நம்புகின்ற மனிதன், அதனைப் பற்றி அக்கறையின்றி வாழ்ந்து கொண்டிருப்பது ஆச்சரியம்... 5. நரக நெருப்பின் வேதனை பற்றி அறிந்த மனிதன், அது பற்றி சிந்திக்காமல் தொடர்ந்தும் பாவம், தவறு செய்வது ஆச்சரியம்... 6. *இறைவன் ஒருவனே* என்று அறிந்த மனிதன், அவனைத் தவிர வேறு எவருக்கோ வணக்கத்தை நிறை வேற்றுவது ஆச்சரியம்... 7. *சுவர்க்கத்தைப் பற்றி* அறிந்த மனிதன், புண்ணியங்களை சேர்க்க மறந்து உலக செல்வங்களை சேர்த்து வைப்பதில் தமது முழு வாழ்வையும் கழிப்பது ஆச்சரியம்...! ஆச்சரியம்...! ஆச்சரியம்...! ஆச்சரியம்...!

மிகவும் கவலையான செய்தி வெட்கத்தை இல்லாமாக்கும் கல்வி


👆🌾👆🌾👆🌾👆🌾👆 மிகவும் கவலையான செய்தி வெட்கத்தை இல்லாமாக்கும் கல்வி பாடசாலையில் Bபேன்ட் வாசிப்பது ஹராம் கொழும்பில் மட்டும் சுமார் 11ஆயிரம் பேர் இஸ்லாத்தை விட்டு மதம் மாறியுள்ளார்கள் Moulavy ". Akthar Misbahi 🌈 அல்லாஹ்வின் அடிமைகள் 🌈 எம்முடன் இணைந்து கொள்ள! 0775247572 https://youtu.be/JwONiIB709s 👆👆👆👆👆👆👆👆👆

1990 October 30 அன்று விடுதலைப் புலிகளால் பலவந்தமாக வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் தான் இவர்கள்


குறிப்பு : புகைப்படம் உரியவர்களின் அனுமதியுடனே பதிவேற்றியுள்ளேன். 1990 October 30 அன்று விடுதலைப் புலிகளால் பலவந்தமாக வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் தான் இவர்கள். இவர்களின் சொந்த இடம் மரிச்சுக்கட்டி. இவர்கள் மீண்டும் 2009 யுத்தம் முடிந்த பிறகு மரிச்சுக்கட்டி வந்து குடியேறியுள்ளார்கள். இவர்கள் தான் #முதலாவதாக மரிச்சுக்கட்டி வந்து குடியேறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #இன்றுவரை இவர்களின் நிலை எவ்வாறானது என்பதை படத்தை பார்த்து விளங்கி கொள்ள முடியும். யார் இவர்களை அரவணைப்பது? யார் இவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொடுப்பது? மீள்குடியேறிய எத்தனையோ குடும்பங்கள் வாழ வழியில்லாமல் வலிகளோடு இரவும் பகலுமாக வழி தேடி அலைகிறார்கள்! அரசியல் அதிகாரம் உள்ளவர்களே! கொஞ்சம் சிந்திக்க வேண்டாமா? உங்களின் ஆதரவாளர்களையும் உறவினர்களையும் மட்டும் அரவணைக்கவா மக்கள் ஆணை தந்தார்கள்? இந்த மக்கள் வாழ்வின் துயர் துடைப்பது உங்களின் பொறுப்பு என்பதை மறந்துவிட்டீர்களா? இவை நேரடியாக சென்று பார்த்து கேட்டு அறிந்து கொண்டவை. அதிகம் இருக்கிறது ஒவ்வொன்றாக எழுதுகிறேன். மனாப் அஹமத் றிசாத் m.t.m.waseem

பைபிலின் முரண்பாடுதான் என்னை இஸ்லாத்தை படிக்கத் தூண்டியது


பைபிலின் முரண்பாடுதான் என்னை இஸ்லாத்தை படிக்கத் தூண்டியது நவீன உலகில் இஸ்லாம். யூஷா எவன்ஸ் இஸ்லாத்தை தழுவிய வரலாறு. இன்றைய உலகில் இஸ்லாத்திற்கு எதிரான வன்முறைகளுக்கும், சவால்களுக்கும் மத்தியில் நாளுக்கு நாள் மக்கள் இஸ்லாத்தின் பக்கம் கவரப்படுவதானது இஸ்லாத்தின் மேல் காழ்ப்புணர்வுடன் செயல்படக் கூடிய கயவர்களுக்கு இஸ்லாம் மீது ஒரு விதமான பயத்தை (இஸ்லாம் Fபோபியா) ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் மாத்திரம் வருடத்திற்கு சுமார் 5000ம் பேர் இஸ்லாத்தை தழுவுகின்றார்கள் என்பது வரலாறு சொல்லும் உண்மையாகும். இவ்வாறு உலகில் பல பாகங்களிலும் மாற்று மத அன்பர்கள் இஸ்லாத்தை தேடிப் படித்து அதன் மீது ஏற்படும் கவர்ச்சி காரணமாக இஸ்லாத்தை தழுவிக் கொள்கின்றார்கள். அந்த வகையில் குர்ஆனின் வார்த்தைகளினால் கவர்ந்திழுக்கப்பட்டு இஸ்லாத்தைத் தழுவிய சகோதரர் யூஷா எவன்ஸின் வரலாறு மாற்று மதத்தவர்களுக்கு மட்டுமல்ல குர்ஆன் மனிதர்களுக்கு புரியாது என்று வாதிடுவோர்களுக்கும், வெறுமனே மார்க்கம் காட்டித் தராத சடங்குகளுக்கும் சம்பிரதாயங்களுக்கும் மாத்திரம் குர்ஆனை ஓதுவோருக்கும் ஒரு விழிப்புணர்வு உண்டு பண்ணும் பாடமாய் அமைகின்றது. யூஷா எவன்ஸ் அமெரிக்காவின் தெற்கு கரோலினாவின் Gக்ரின் வில்லி பகுதியைச் சேர்ந்தவர். சிறு வயதிலேயே தாய் குடும்பத்தை விட்டுப் பிரிந்ததினால் தாத்தா, பாட்டியின் கவனிப்பில் மிகுந்த கட்டுப்பாட்டோடும், கடவுள் பக்தியுடனும் எவன்ஸ் வளர்க்கப்பட்டார். கிருத்தவத்தை விரும்பி தன்னை அதனுடனேயே இணைத்துக் கொண்ட எவன்ஸ் தனது 12- 13 வயதிலேயே தேவாலயத்தில் இளைஞர் சேவைகளுக்காக தன்னை இணைத்துக் கொண்டார். தனது 17 வயது முழுமையாக இருக்கும் நிலையில் பொப் ஜோன்ஸ் பல்கலைக் கழகத்தில் புத்தக ஆராய்ச்சியில் ஈடுபடும் 17 வயதுடைய ஒரு நண்பருடன் நட்பு வைத்திருந்தார். கிருத்துவத்தில் ஊறிப்போயிருந்த எவன்ஸ் ஒரு முறை தன் நண்பனின் ஒரே ஒரு கேள்விக்கு நிலை குலைந்து போனார். அங்கு தான் அவருடைய வாழ்க்கை திருப்பமடையத் துவங்கியது. நண்பர் – நீ பைபிலை படித்திருக்கிறாயா? எவன்ஸ் – (ஆச்சரியத்துடன்) அதைத் தானே நாம் தேவாலயத்தில் செய்து வருகின்றோம். நண்பர் – இல்லை இல்லை நீ பைபிலை முழுவதுமாக படித்துள்ளாயா? (பதிலில்லாமல் எவன்ஸ் திகைத்து நின்றார்) மீண்டும் நண்பர் – பைபிலை இறைவனின் வார்தை என்று கூறும் நாம் ஏன் இன்னும் அதனை முழுமையாகப் படிக்காமல் இருக்கின்றோம்? தன் நண்பர் கேட்ட கேள்வி எவன்ஸை மிகவும் சிந்தனைக்கு உள்ளாக்கியது. பைபிலை முழுமையாக படிக்க முழு முயற்சியில் இறங்கினார் எவன்ஸ். Genesis (The first Book Old Testament) ல் இருந்து படிக்கத் துவங்கினார். அங்கு தான் அதிர்ச்சிகளும், குழப்பங்களும் அவருக்காகவே காத்திருந்தாற் போல் இருந்தன. பைபிலை தொடந்து வாசித்த எவன்ஸ் இது வரை காலமும் நபிமார்கள் புனிதமானவர்கள், முன்மாதிரியானவர்கள் என பாதிரியார்களினால் தனக்கு போதிக்கப்பட்டதையும், பைபிலில் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஒரு குடிகாரர், லூத் அலைஹிஸ்ஸலாம், தாவுத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஆகியோர்களை மோசமானவர்கள் என்று சித்தரிக்கப்பட்டுள்ளதையும் ஒப்பிட்டுப் பார்த்து, இந் நபிமார்கள் மனிதர்களுக்கு முன்மாதிரியாக இருப்பதற்கு கொஞ்சம் கூட தகுதியற்றவர்கள் என்ற முடிவுக்கு வந்தார். Old Testament முழுதும் பல முரண்பாடுகளைக் கண்ட எவன்ஸ் தனக்கு ஏற்பட்ட குழப்பத்தை பாதிரியார்களிடம் சென்று விபரித்தார். பைபிலில் முரண்பாடுகளைக் காணும் எவருக்குமே தன் சந்தேகத்திற்கான நிவர்த்தி இதுவரைக்கும் கிடைக்கவும் இல்லை. இனிமேலும் கிடைக்கப் போவதுமில்லை. எல்லா பாதியார்களும் கூறும் பதில்தான் எவன்சுக்குகம் விடையாகக் கிடைத்தது. ‘இது நம்பிக்கை சார்ந்த விடயம் கடவுளை உள்ளுணர உணர வேண்டும். கேள்வி கேட்கக் கூடாது. மார்க்கத்திற்கு முரணான மத்ஹபு மற்றும் தரீக்காக்களில் ஊறிப் போன உலமாக்களிடத்தில் கூட ஒரு அமல் குறித்து மக்கள் மார்க்கத் தீர்ப்பு கேட்டால் கேள்வி எதுவும் கேட்கக் கூடாது என்று கூறி நழுவிச் செல்வதை நாமும் பார்க்கக் கிடைக்கின்றது. அது போல் தான் இந்தப் பாதிரியாரும் எவன்சுக்கு பதிலளித்தார். அது மட்டுமன்றி கேட்ட கேள்விக்கு பதிலளிக்கத் தெரியாமல் அந்த இடத்தை விட்டு அவர் தப்பிக்கும் வண்ணமாக ஜீஸஸ் பற்றியுள்ள New Testament படிக்கும் படி எவன்சுக்கு ஏவினார். எவன்சும் அதனைப் படிக்க ஆரம்பித்தார். மக்களால் அறியப்படாத Mathew, Mark, Luke, John ஆகியோரால் எழுதப்பட்ட New Testament ஐ கடவுளின் வார்த்தை என்று கூறுவது நியாயமா? என்பதே இவரின் குழப்பத்தின் ஆரம்பமாக இருந்தது. ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூவரில் ஒருவர் கடவுளின் மகன் என்றெல்லாம் இதுவரை அறிந்த எவன்ஸ் New Testament ல் ஈஸா (அலை) அவர்கள் தன்னை அவ்வாறு சிறப்பித்துக் கூறாததையும், பழைய ஏற்பாடு முழுதும் ஒரே ஒருவன் தான் கடவுள் என்றிருப்பதனையும் கண்டு மேலும் அவர் குழப்பம் அடைந்தார். மீண்டும் பாதிரியாரிடம் சென்று ஒட்டுமொத்த பைபிலும் முன்னுக்குப் பின் முரணாகத் தெரிகின்றது என்று எவன்ஸ் கூறிய போது குழந்தையை சமாளிப்பதைப் போல் எவன்சையும் கேள்வி எதுவும் கேட்ட’லாகாது என்று சமாளித்து விட்டார் பாதிரியார். பாதிரியார்கள் சொன்னதை மந்திரமாக ஏற்பதற்கு இனியும் தயாரில்லாத எவன்ஸ் பைபிலைப் பற்றி அறிந்த பேராசிரியர் ஒருவரிடம் தன் சந்தேகங்கள் நியாயம் தானா? என்று கேட்ட சமயத்தில் பைபில் பல காலங்களில் பலரால் மாற்றப்பட்டு வந்துள்ளது. அதனால் அது தூய்மைத் தன்மையை இழந்து விட்டது. வெறுமனே நம்பிக்கையினால் மாத்திரமே முழுமைப்படுத்தப்பட்டுள்ளது. என அப்பேராசிரியர் எவன்சுக்குக் கூறினார். அறிவைக் கொடுத்த இறைவன் அதனால் சிந்திக்கும் திறனையும் கொடுத்துள்ளான் என்பதை உணர்ந்த எவன்ஸ் பல காலங்களில் பலரால் மாற்றப்பட்ட ஒரு நூல் ஒரு போதும் கடவுளின் வார்த்தையாக இருக்காது என்பதை தீர்க்கமாக முடிவெடுத்து தாமாக விரும்பி இணைந்த கிருத்தவத்தை விட்டு வெளியேறி விட்டார். அப்போது எவன்சுக்கு வயது 17 ஐயும் தாண்டவில்லை. பைபில் கடவுளின் வார்த்தையாக இல்லாவிட்டால் எதுதான் கடவுளின் வார்த்தை? என்ற தேடலில் ஈடுபட்டார் எவன்ஸ். கேட்டதையெல்லாம் நம்பிய எவன்ஸ். இனிமேலும் கண்டதை படித்தும் ஏமாற விரும்பவில்லை. எந்த மதத்தைப் படித்தாலும், அது பைபிலைப் போல் பொய் சொல்கின்றதா? என்ற எச்சரிக்கையுடன் படித்தார். ஜுடாயிசம், இந்துஸம், Bபுத்திசம், முதற்கொண்டு பகவத் கீதை, மந்திரம் எல்லாவற்றையும் படித்த எவன்ஸ் அவற்றில் ஒன்று கூட மனித அறிவுக்கு ஒத்துவரவில்லை என்பதை அறிந்தார். ஆனால் இத்தனை மதங்களிலும் தேடலில் ஈடுபட்ட எவன்ஸ் இஸ்லாத்தைப் பற்றி மாத்திரம் அலட்டிக் கொள்ளவில்லை. காரணம் இஸ்லாம் மிகச் சிரிதாகவே அறியப்பட்ட காலம் என்பது அவரது எண்ணமாக இருந்தது. தான் இறைவனைப் பற்றி அறிய ஆவல் கொண்டும் இறைவன் தனக்கு ஒரு வழியையும் ஏற்படுத்தவில்லையே என தவறாக எண்ணி கடவுள் மீது கோபம் கொண்டார். ஈற்றில் வெறுத்துப் போய் தன் 17 வயதிலேயே மார்க்கத் தேடலுக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டார். ஒரு முறை நூலகத்தில் படித்துக் கொண்டிருந்த அவருக்கு இஸ்லாம் பற்றிய ஒரு புத்தகம் கிடைத்தது. “முஸ்லிம்கள் பாலை வனத்தில் இருக்கின்ற ஒரு பெட்டியின் உள்ளே வாழ்கின்ற அல்லாஹ் என்ற Moon God ஐ வணங்குகின்றார்கள். முஸ்லிம்கள் என்றாலே அரபியர்கள் தான். பெண்களை அடிமைப்படுத்துபவர்கள். முஸ்லிம்கள் அல்லாத யாரைக் கண்டாலும் கொலை செய்ய அவர்களுக்கு அனுமதியுண்டு. அதற்குப் பெயர் ஜிஹாத். அப்படி அவர்கள் செய்தால் அவர்களுக்கு சுவர்க்கமும், 70 கன்னிகளும் கிடைப்பார்கள்.“ என்று அதிலிருந்தது. அப்படியே அந்தப் புத்தகத்தை வைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார் எவன்ஸ். இஸ்லாத்தைப் பற்றி அறிய வந்த ஒருவனுக்கு அது பற்றிய அறிவை இறைவன் வழங்காமலா இருப்பான்? இஸ்லாத்தின் வாசத்தை நுகர்கின்றார் எவன்ஸ். ஒரு முறை எவன்சின் நண்பர் ஒருவர் சில கேள்விகளை கேட்டார். நண்பர் – இஸ்லாத்தைப் பற்றி என்ன நினைக்கின்றாய்? எவன்ஸ் – நினைப்பதற்கு என்ன உள்ளது? நான் பார்த்த மதங்களிலேயே மிகவும் மோசமானது அதுதான். நண்பர் – உனக்குத் தெரியுமா நான் ஒரு முஸ்லிம்? எவன்ஸ் – நீ ஆபிரிக்க அமெரிக்கன் அல்லவா? முஸ்லிம் என்றாலே அரபியர் தானே? (எவன்ஸ் நூலகத்தில் தான் படித்த செய்தியை மையமாக வைத்து கேட்கின்றார்) நண்பர் – நான் உனக்கு சிலரை அறிமுகப் படுத்துகின்றேன். அவர்கள் இஸ்லாத்தைப் பற்றி உனக்குக் கூறுவார்கள். என்று கூறிவிட்டு, ஜும்மாவுக்கு செல்லவிருந்த நண்பர் எவன்சையும் பள்ளிக்கு அழைத்துச் சென்றார். என்ன ஆச்சரியம். அவர் பணிவிடை செய்து வந்த தேவாலயமும், பள்ளிவாயலும் ஒரே தெருவிலேயே அமைந்திருந்தன. அங்கே ஜும்மாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. நாட்காலியில் அமர்ந்த எவன்ஸ் தனக்கு முன் பல ஆண்களும், தனக்குப் பின் பல பெண்களும் இருப்பதைக் கண்டு, ஜிஹாத் நடைபெறப் போகின்றதோ? என்று உள்ளுக்குள் பயமுற்றிருந்தார். இஸ்லாத்தை அறியாததின் காரணமாகவும், சிலர் தெரிந்தும் ஏற்றுக் கொள்ளாத பிடிவாதப் போக்கின் காரணமாகவும் இன்றும் சிலர் பள்ளிவாயல் ஜிஹாதுக்கான இடம் என்று தவறுதலாக புரிந்து பள்ளிகள் மீது தமது அடாவடித் தனங்களை அவிழ்த்து விடுகின்றார்கள் என்பது நாம் இன்று இலங்கையில் கண் முன் காணும் கசப்பான உண்மையாகும். இது போல் தான் எவன்சும் தனது தவறான எண்ணத்தின் காரணமாக இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் தவறாக நினைத்திருந்தார். அப்போது எவன்சுக்கு பள்ளியில் இமாம் ஆற்றிய ஜும்மா உரை ஆரம்பத்தில் பயத்திற்கு மேல் பயத்தை உண்டாக்கினாலும், அதே உரை தான் அவரின் உள்ளத்தை பெரிதும் ஆக்ரோஷித்தது. ஒரே ஒரு குர்ஆன் வசனமே அந்த உரையின் மையக் கருத்தாகும். ஜும்மா உரை முடிந்தவுடன் மக்கள் தொழுகைக்காக எழுந்து நின்றார்கள். இதனைக் கண்ட எவன்ஸ், யாரைத் தொழப் போகின்றீர்கள்? என்று அவர்களிடம் கேட்ட போது, உலகையும், அதிலுள்ள அனைத்தையும் படைத்தானே அவனையே! பைலிலும் இறைவன் என்று இவனையே கூறப்படுகின்றது. தொழுகை ஆரம்பித்தது, குர்ஆனின் வசனங்களினால் மனதளவில் ஈர்க்கப்பட்டார் எவன்ஸ். மற்ற மத நூல்களையெல்லாம் தெளிவாக ஆராய்ந்த எவன்ஸ், இஸ்லாத்தை மட்டும் ஒரே ஒரு புத்தகத்தை வைத்து முடிவெடுத்ததை நினைத்து வெட்க்கப்பட்டார். எவன்ஸ் அங்கிருந்த இமாமிடம் இருந்த திருமறைக் குர்ஆனின் ஆங்கில மொழி பெயர்ப்பை கேட்டுப் பெற்றுக் கொண்டார். அன்றிரவே குர்ஆனைப் படிக்கத் தொடங்கினார். அதில் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பற்றி தெளிவாக அறிந்து கொண்டதுடன், பைபிலில் மோசமாக சித்தரிக்கப்பட்ட நபிமார்கள் உண்மையில் இறையச்சத்துடன் தான் வாழ்ந்து காட்டியுள்ளார்கள். இவர்களே பின்பற்றத் தகுதியானவர்கள் குர்ஆன் தான் நேரான வழிகாட்டி என்ற தீர்க்கமான முடிவுக்கு வந்தார். மூன்று நாட்களில் குர்ஆனைப் படித்த அவர் தானும் குர்ஆனைப் பின்பற்றி நபியவர்கள் காட்டிய வழிப் பிரகாரம் இவ்வுலகில் வாழவேண்டும் என்ற என்ற எண்ணம் அவருக்குள் உத்வேகமாய்ப் பிறந்தது. குர்ஆனைப் போல் ஒரு வேதத்தைக் கொண்டுவரும்படி இறைவன் விடுக்கும் சவால்களையும், கடவுளின் விளக்கங்களையும், அறிவுப் போதனைகளையும் படித்தவுடன் அம்மாற்றத்தினால் எவன்ஸின் உள்ளமும், கண்களும் அழத் தொடங்கின. யூஷா எவன்ஸ் அடுத்த ஜும்மா நாளிலேயே புனித இஸ்லாமிய மார்க்கத்தில் நுழைந்து தன்னை ஒரு உண்மை முஸ்லிமாக மாற்றிக் கொள்கின்றார். அல்ஹம்து லில்லாஹ். ஆங்கில மொழியில் தற்காலத்தில் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்து வருபவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கதொரு பிரச்சாரகராக யுஷா எவன்ஸ் தனது பணியை முன்னெடுத்து வருகின்றார். பல்கலைக் கழகங்களில் விரும்பி அழைக்கப்படும் ஒரு பிரச்சாரகராகவும் இவர் திகழ்கின்றார். இவருடைய பிரச்சாரத்தின் காரணமாக பலர் தூய இஸ்லாத்தை நோக்கி வந்துள்ளார்கள் என்பது கவனிக்கத் தக்கதாகும். இமாம்களுக்கும், அறிஞர்களுக்கும் மாத்திரம் தான் திருமறைக் குர்ஆன் புரியும் என்று வாதிடுபவர்கள் யுஷா எவன்ஸ் போன்ற பலர் குர்ஆனைப் படித்து, புரிந்து இஸ்லாத்தில் நுழைவதை வைத்தே அனைவரும் இந்த திருமறைக் குர்ஆன் தெளிவாக விளங்கும், புரிய முடியும் என்பதை இனிமேலாவது உணர்வார்களா? அல்லாஹ் உலக மக்கள் அனைவருக்கும் அருள்புரிவானாக ... ஆமீன் Invite Everyone to ISLAM #SlavesOfAllah

எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.......... Raigam நிறுவனம் 1050 ஏக்கர் கரச்சை பிரதேசத்தை விடுவிக்க தீர்மானம். எமது நிலாவெளி இறக்ககண்டி , கும்புறுபிட்டி குச்சவெளி சிறு மீன்பிடி கைதொழிலாளர்களின் தொழிலை தடையின்றி மேற்கொள்ள திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் அவர்க முன்னால் பிரதேச சபை தலைவர் ஆதம் பாவா தௌபீக் அவர்ளின் ஒத்துழைப்புடன் எமது முயற்சியின் பலன் Raigam நிறுவனம் நீண்ட கால குத்தகைக்கு பெற்றிருந் 1050 ஏக்கர் காணியை விடுவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எமது சிறு மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தை தேடிக்கொள்ள இந்த முயசிக்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்

கலஹா வைத்தியசாலையில் குழந்தை மரணம் - உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அமைச்சர் ராஜித சேனாரத்ன பணிப்புரை. -சுகாதார அமைச்சு


கலஹா வைத்தியசாலையில் குழந்தை மரணம் - உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு அமைச்சர் ராஜித சேனாரத்ன பணிப்புரை. -சுகாதார அமைச்சு

Some Local Sinhalese and Tamil Worlds Used in the Gem Industry of Sri Lanka


Some Local Sinhalese and Tamil Worlds Used in the Gem Industry of Sri Lanka Illama: refers to gem bearing gravel while Goda illama refers to gem bearing gravel that is located just below the surface of the earth. Illam kamatha: refers to a small area reserved for placing the illama prior to washing. A steel rod is also used to determine the depth of the illama. This steel rod is called illam kura and measures approximately 4 and a half meters. Padparascha: is a Tamil word referring to the rare orange pink type of corundum (Sapphire) found only in Sri Lanka. It is called Padmaraga in Sinhalese language (Padma means lotus and Raga means color). Pushparaga refers to the yellow variety of sapphire (Yellow Sapphire). Gem quality zircons are known as Jargoon. The word Tourmaline is derived from the Tamil and Sinhalese word Toramalli. Geuda: is a translucent to opaque type of corundum. Geuda may be heat treated to improve the color and clarity. Dhum geuda refers to geuda with a smoky appearance Ottu: refers to corondum gemstones that show color patches or dots either on the surface or within it. This is often found in blue sapphires. Abundant and less expensive gemstones are known as Pajaathi gal (eg garnets and zircons). Valuable gemstones eg bluesapphires and alexandrites are known as Jathi gal (Jathi means precious and gal means stones). A feather like inclusion in a gemstone is known locally as Tharasama, while Pasanama or kowanguwa refers to the silky effect found in some rough sapphires. the silky effect gives the star or cat's eye effect in some cut stones. Dalan are small rough gemstones that are often not valuable and found during the sorting process. Degune refer to sapphires that show a mixture of two colors (Usually blue and red). Almost black colored gemstones found in the washing basket which are not suitable for gem cutting is known as Katta. Nambuwa is the material remaining in the gem basket after washing the gravel. Navaratna: refers to a piece of jewellery set with 9 types of gemstones, namely diamond or white sapphire, yellow sapphire, green tourmaline or emerald, padmaraga, ruby, chrysoberyl cat's eye, hessonite garnet (Gomedaya), blue sapphire and pearl. Panchaloha refers to five different types of precious metals (Silver, copper, gold, platinum and iron). These precious metals are mixed together as advised by astrologers and jewelry is made out of the mixed metals. Arunula is the local term that refers to a six pointed star (Asterism in gemstones). Gomedaya refers to hessonite garnet (also known as Cinnamon stoneor grossular garnet) that can be set in jewelry to protect the wearer against evil platenery forces. Zoroastrianism (Parsis) insert a cinnamon stone into the mouth of the dead before exposing the dead man in the tower. Kakanila is dark jet black blue sapphire that can be set in a ring to protect the wearer against evil platenery forces. Hanaporuwa is the term used to refer to locally made gem cuttingmachines. Kakilla and Habarala refer to leaves from two different species of plants. these leaves are shaped like an umbrella and can hold water on its surface. Mahavamsa refers to the great chronicle in which the history of Sri lanka is described from the very early times. Kotha is the gem quartz gemstone that is cut and polished and placed at the top of Buddhist pagodas. Underground tunnels in a gem mine are called Donava. The group of people involved in a mining operation are called Karuhavla, which includes the miners, finance partners, timber suppliers etc. Malava refers to kaolinized and micaceous material formed from decomposition below the illama. Kiri-mati malava is Malava rich in Kaolin. Parugala refers to unweathered bed rock found below the Malava. Patal Vadiya means a temporary dwelling near a mining site. A Mura wadiya is a temporary hut with cadjan roof used to guard the illama 24 hours a day. A Massa is a temporary shelter covered with cadjan roof and made of wooden walls. The miners usually sleep, rest and cook in the Massa. References: i) Internet Stones.COM ii) Gems of Sri Lanka (Sixth Revised Edition) by D.H. Ariyaratna FGA, DGA, FGS iii) Zoroastrianism- Wikipedia

இன்று காலை நடைபெற்ற விபத்தும் பஸ் சாரதியின் தவறும் ஒரு முஸ்லிம் சகோதரனின் விட்டுக்கொடுப்பும்...!!


இன்று காலை நடைபெற்ற விபத்தும் பஸ் சாரதியின் தவறும் ஒரு முஸ்லிம் சகோதரனின் விட்டுக்கொடுப்பும்...!! வாழைச்சேனை சேர்ந்த இரு முஸ்லிம் இளைஞர்கள் மட்டக்களப்பை நோக்கி சென்றபோது பஸ் சாரதி ஒருவர் இன்னொரு பஸ்சை முந்திச் செல்லும் போது முன்னிலையில் இருந்த மோட்டார் வாகனத்தை தட்டிச் சென்றார். இந்த பஸ் சாரதி ஒரு தமிழ் இளைஞர் ஆவார். படுகாயம் அடைந்த முஸ்லிம் இளைஞர்கள் இருவரும் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சாரதி கைது செய்யப்பட்டார். இதன்போது மோட்டார் சைக்கிள் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட செலவு வரும் என்பதையும் பொலிஸார் தெரிவித்தனர். தமிழ் இளைஞர் சாரதி தனது தவறை ஒப்புக்கொண்டு முஸ்லிம் இளைஞரிடம் என்னால் 5000 ரூபாய் மாத்திரமே தர முடியும் எனவும் தான் கடும் கஷ்டத்தில் இருப்பதாகவும் வேண்டிக்கொண்டார். 50 ஆயிரம் செலவையாவது கொடுக்க வேண்டும் எனவும் இல்லையேல் 14 நாட்கள் சிறைச்சாலை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்துக்கு சென்று முழுமையாக செய்து கொடுக்கவேண்டும் என்றும் பொலிஸார் தெரிவித்தபோது....!! மோட்டார் வாகன முஸ்லிம் வாலிபர் மன்னிப்புக் கொடுத்து எனக்கு எதுவும் வேண்டாம் எனவும் தானே முன்னின்று போலீஸ் நிலையத்துக்கு சென்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யோடு கலந்துரையாடி பஸ் சாரதியின் பஸ்சையும் வெளியில் எடுத்துக் கொடுத்தது உதவினார். இதுதான் இன்றைய தமிழ் முஸ்லிம்களின் ஒற்றுமையாகும் இந்த ஒற்றுமையை குலைக்கும் விதமாக இணையதளங்களில் எழுதுவோருக்கு இது சமர்ப்பணம்...!! அல்ஹம்துலில்லாஹ்

சிறிலங்கா கடற்படையின் கையில், அமெரிக்க போர்க்கப்பல்.


சிறிலங்கா கடற்படையின் கையில், அமெரிக்க போர்க்கப்பல். அமெரிக்க கடலோரக் காவல்படையின் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்ட யுஎஸ்சிஜி ஷேர்மன் என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல் நேற்று முன்தினம் சிறிலங்கா கடற்படையிடம் அதிகாரபூர்வமாக கையளிக்கப்பட்டது. ஹவாயில் உள்ள ஹொனொலுலு துறைமுகத்தில் நடந்த நிகழ்வில் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க, இந்தக் கப்பலைப் பொறுப்பேற்றார். 115 மீற்றர் நீளம் கொண்ட இந்தக் கப்பல் சிறிலங்கா கடற்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டு, ஆழ்கடல் கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளது. இந்தக் கப்பலை அமெரிக்க கடலோரக் காவல்படையின் கையகப்படுத்தல் தலைமை அதிகாரியும், உதவித் தளபதியுமான றியர் அட்மிரல் ஹேகொக் அதிகாரபூர்வமாக தமது அணியில் இருந்து நீக்கினார். அதையடுத்து, இந்தக் கப்பலின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள சிறிலங்கா கடற்படையின் கப்டன் அனுர தென்னக்கோனிடம் அதனை ஒப்படைத்தார். இந்த நிகழ்வில், அமெரிக்காவின் பசுபிக் கப்பல்படையின் கடல் நடவடிக்கை பணிப்பாளர் றியர் அட்மிரல் மார்க் டல்டன், யுஎஸ்சிஜி ஷேர்மன் கப்பலின் முன்னாள் கட்டளை அதிகாரி கப்டன் வில்லியம்ஸ், ஹொனொலுலு தளத்தின் கட்டளை அதிகாரி கப்டன் ரஸ்முசென், உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர். சிறிலங்கா கடற்படையினால் பொறுப்பேற்கப்பட்டுள்ள யுஎஸ்சிஜி ஷேர்மன் கப்பல், பசுபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் வழியாக பயணத்தை ஆரம்பிக்க முன்னர், அந்தக் கப்பலில் 40 நாட்கள் சிறிலங்கா கடற்படையினர் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளனர். M.waseem.t.m

ஞானசாரரை பிக்­கு­வாகக் கரு­த­மு­டி­யாது, பொதுபல சேனாவின் பாதை தவறானது - முன்னாள் தலைவர்


ஞானசாரரை பிக்­கு­வாகக் கரு­த­மு­டி­யாது, பொதுபல சேனாவின் பாதை தவறானது - முன்னாள் தலைவர் பௌத்த போத­னை­களில் ஈடு­படும் பிக்­கு­மார்­க­ளுக்கு போதிய பயிற்­சிகள் வழங்­கப்­பட வேண்டும். எத்­த­கைய பயிற்சித் தெளி­வு­க­ளு­மின்றி போத­னைகள் புரியும் போதே குள­று­ப­டி­களும் பிரச்­சி­னை­களும் எழு­கின்­றன. ஏழு, எட்டு வரு­டங்கள் சமயப் படிப்பு பெற்ற பின்­னரே பள்­ளி­வா­சல்­களில் சமயத் தலை­வர்கள் அமர்த்­தப்­ப­டு­கி­றார்கள். இதே முறைமை எங்கள் மத்­தியில் இல்லை. இதனை நாமும் கொண்டு வர வேண்டும் என்று தெஹி­வளை, நெதி­மாலை கலா­சார மத்­திய நிலைய அதி­பதி கிரம விம­ல­ஜோதி தேரர் தெரி­வித்­துள்ளார். பொது­பல சேனா அமைப்பின் ஆரம்பத் தலை­வ­ரா­க­வி­ருந்து கருத்து வேற்­று­மையால் அதி­லி­ருந்து விலகி தற்­போது சுய­மாக இயங்கி வரும் கிரம விம­ல­ஜோதி தேரரை ராவய சிங்­கள ஊடகம் பேட்டி கண்டு வின­விய போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்ளார். அவர் தொடர்ந்தும் கூறி­ய­தா­வது, என்னால் ஏதும் தவ­றுகள் வெளிப்­பட்டு விடுமோ என்ற பீதி­யிலே நான் இப்­போது பௌத்த போத­னை­களில் ஈடு­ப­டு­வ­தில்லை. வாய்க்கு வந்­த­வா­றெல்லாம் போதனை செய்ய முடி­யாது. திரி­பி­டயை (பௌத்த கிரந்தம்) சரி­யாகப் புரிந்து கொள்­ளாது புத்­த­பெ­ருமான் அப்­படிச் சொல்­லி­யி­ருப்பார் இப்­படி சொல்­லி­யி­ருப்பார் என்று விளக்கம் கொடுப்­பது தவறு. ஞான­சார தேரரை பிர­தான பிக்­குத்­த­லை­வ­ராக ஏற்றுக் கொள்­வோரும் எங்கள் மத்­தியில் காணப்­ப­டு­கி­றார்­களே! இது குறித்து நீங்கள் என்ன கரு­து­கி­றீர்கள் என்று ஊட­க­வி­ய­லாளர் எழுப்­பிய கேள்­விக்கு தேரர் பதி­ல­ளிக்­கையில்; அவரை பிர­தம பிக்­கு­வாகக் கரு­த­மு­டி­யாது. ஒரு சில சந்­தர்ப்­பங்­களில் ஏதும் பிரச்­சி­னைக்கு இவர் முகம் கொடுத்துப் பேசும்­போது எமது இளைய பிக்­கு­மார்கள், இவர் தான் நாட்­டுக்­காக கலா­சா­ரத்தைப் பாது­காக்கும் தலைவர் என்று எடை­போட்டுக் கொள்­கி­றார்கள். இவர் குறித்து மேலி­டங்­க­ளி­லி­ருந்து பேசா­தி­ருப்­பதால் தான் இளையோர் மத்­தியில் இப்­படி தவ­றாக எடை போடப்­பட்­டுள்­ளது. அவ்­வ­ளவு தான் ஞான­சார தேர­ருக்கு பொது­பல சேனாவை முன்­னெ­டுத்­த­வர்கள் தானே இத்­த­கைய மதிப்பைக் கொடுத்து கொண்­டி­ருக்­கி­றார்கள் அல்­லவா? என்று எழு­ப்­பப்பட்ட வினா­வுக்கு அளிக்­கப்­பட்ட பதிலில், நானும் அந்த அமைப்பில் இருந்தேன். அவர்கள் பய­ணிக்கும் பாதை தவறு என்­பதை உணர்ந்து கொண்­ட­போது நான் அதி­லி­ருந்து ஒதுங்­கிக்­கொண்டேன். ஒரு சிலரால் பிக்­குமார் தூண்­டப்­பட்­டார்கள் என்­பது தெரி­ய­வில்லை. ஆனால் நான் இப்­போது அதில் ஈடு­ப­டு­வ­தில்லை. எமக்­கென்று பிர­தான அமைப்­பொன்று இருக்­கையில் சிறு­சிறு அமைப்­புக்கள் அவ­சி­யப்­ப­டாது. பிக்­குகள் நாட்டின் சட்­டத்­திற்­குட்­ப­டா­த­வர்­களா? என்று வின­வப்­பட்­ட­போது, இல்லை, இல்லை நாட்டின் அரச சட்­டத்­திற்கு கீழ்­ப­டியும் படியே புத்­த­பெ­ருமான் போதனை செய்­துள்ளார். பிக்­குகள் தமது கௌர­வங்­களைப் பேணி நடந்தால் அரச சட்­டத்­திற்கு மேலேதான் அவர்கள் இருப்­பார்கள். இதனை விடுத்து சட்­டத்தை மீறு­வதில் தான் பிரச்­சி­னையே எழு­கி­றது. பௌத்த கலா­சார பணி­களில் எப்­போது ஈடு­பாடு காட்ட ஆரம்­பித்­தீர்கள்? 1975 ஆம் ஆண்­டி­லி­ருந்து நான் வெளி­நாட்­டிலே தான் இருந்து வந்தேன். அப்­போது நான் எதிர்­பார்க்­கா­த­வாறு பணம் என்னை வந்­த­டைந்­தது. 1989 ஆம் ஆண்­டாகும் போது 75 கோடி ரூபா அளவில் என் கையி­ருப்பில் இருந்­தது. அப்­ப­ணத்­துடன் நான் நாடு திரும்பி மற்­று­மொரு பிக்­கு­வையும் இணைத்துக் கொண்டு தெஹி­வளை, நெதி­மா­லையில் வெளி­நாட்­ட­வர்­க­ளுக்­கான தியான நிலையம் ஒன்றை நிறு­வினேன். பௌத்தம் தொடர்­பான ஆங்­கில நூல் எதுவும் எமது நாட்டில் இல்­லாத நிலையில் மலே­ஷியா, இந்­தியா நாடு­க­ளுக்குச் சென்று அங்­கி­ருந்து சில பௌத்த நூல்­களை எடுத்து வந்து இங்கு வைத்தோம். பின்னர் 92 ஆம் ஆண்டில் பஸ் வண்டியொன்றை அமர்த்தி நடமாடும் பௌத்த நூலக சேவையொன்றை ஆரம்பித்து வந்தேன். தொடர்ந்து 93 ஆம் ஆண்டு முதல் பொது நூலகத்திலும் கலாபவன நிலையத்திலும் பௌத்த கலாசார கண்காட்சிகளை என்னிடமிருந்து பணத்தை செலவு செய்து நடத்தி வந்தே என் பணி தொடர்கிறது என்றார். JM

சற்றுமுன் ரெதிதென்னை, ஜெயந்தியாவ குளத்தில் தோனியில் சென்ற மூன்று மாணவர்களில் தோணி கவிழ்ந்ததால் நீரில் மூழ்கி இருவர் மரணம்.


#BREAKING #NEWS சற்றுமுன் ரெதிதென்னை, ஜெயந்தியாவ குளத்தில் தோனியில் சென்ற மூன்று மாணவர்களில் தோணி கவிழ்ந்ததால் நீரில் மூழ்கி இருவர் மரணம். ஒருவர் ஆபத்தான நிலையில் வாழைச்சேனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஏறாவூர் மத்ரசாவில் கல்விபயிலும் மாணவர்கள் என தகவல். மத்ரஸா விடுமுறை காலமென்பதால் நண்பர்களுடன் சென்றவேளை சம்பவம் நடைபெற்றுள்ளதாக தகவல். .மரணமடைந்தவர்கள் ஏறாவூர் ஸக்காத் கிராமத்தை சேர்ந்த முகம்மது அனஸ் முகம்மது ஷாக்கீர்,மற்றவர் மீராகேணி அசனார் முகம்மது சாதீக் த் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருவரும் மர்கஸ் மத்ரஸாவின் இறுதி ஆண்டு மாணவர்களாம்.

Tuesday, 28 August 2018

இங்கிலாந்துந்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அனைவரும் தூய இஸ்லாத்தை ஏற்று கொண்டனர்.....


இங்கிலாந்துந்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அனைவரும் தூய இஸ்லாத்தை ஏற்று கொண்டனர்.. இவர்களுடைய வாழ்வினை இம்மையிலும் மருமையிலும் சிறப்பாக அமையுத்து வைப்பாயாக..#ஆமீன்.

இதை படித்தால் கண் கலங்கி போவீர்கள்


இதை படித்தால் கண் கலங்கி போவீர்கள் ஒரு நாள் காலைப் பொழுது, ஒரு பெரிய மூட்டையை சுமந்து கொண்டு ஒரு வயது முதிர்ந்த மூதாட்டி மக்கா நகரின் ஓரமாக தள்ளாடித் தள்ளாடி வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே நபிகள் நாயகம் (ஸல்) வந்தார்கள். பிறருக்கு உதவும் உள்ளம் கொண்ட நாயகம் (ஸல்) அவர்கள் வழமை போல அம்மூதாட்டியை அணுகி, “தாயே..! நீங்கள் விரும்பினால் உங்கள் துணி மூட்டைகளை என்னிடம் தாருங்கள். நான் அதை உங்களுக்காக சுமந்து வருகிறேன்” என்று சொன்னார்கள். “ரொம்ப நன்றி” என்று கூறி அம்மூதாட்டி துணி மூட்டையை நபிகள் நாயகம் (ஸல்)அவர்களிடம் கொடுத்தாள். “திரு மக்காவை விட்டு எங்கே அம்மா போகிறீர்கள்..?” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். தன்னோடு உரையாடுவது முஹம்மது நபிகள் (ஸல்) அவர்கள் என்பதை அறியாத அம்மூதாட்டி “மக்கமா நகரில் முஹம்மது என்கின்ற ஒரு மனிதர் வந்துள்ளாராம். அவர் இறைவனின் இறுதித் தூதராம். முந்தைய வேதங்கள் எல்லாம் செயலிழந்து போய்விட்டதாம். அனைவரும் அவரது நேரான வழியை பின்பற்ற வேண்டும் என்கிறாராம். நான் ஒரு யஹூதிப் பெண். எனது மார்க்கத்தை நான் எப்படி விட முடியும்..? எங்களது ஜனங்கள் அவரைப் பற்றி பலதும் கூறுகிறார்கள். அவர் இருக்கும் மக்காவில் வாழ எனக்கு விருப்பமில்லை. அது தான் ஊரை விட்டே கிளம்பி விட்டேன்” என அம்மூதாட்டி கூறினார். அதைக் கேட்டு கொண்டு அமைதியாக வந்தார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். வழியெல்லாம் அம்மூதாட்டி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி குறை கூறி கொண்டு வந்தார். பொறுமையின் சிகரமான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொறுமையோடும், புன்முறுவல் பூத்தவர்களாகவும் நடந்து சென்றார்கள். அப்போது அம்மூதாட்டி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சிரிப்பில் பிரகாசத்தையும் முகத்தில் பணிவையும் அவதானித்தார். கடைசியில் அம்மூதாட்டி சொன்ன இடம் வந்தது. மூட்டையை இறக்கி அம்மூதாட்டியிடம் கொடுத்துவிட்டு “நான் போய் வருகிறேன் தாயே” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விடைபெற்றார்கள். மிகவும் மகிழ்ச்சியடைந்த அம்மூதாட்டி, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பார்த்து “இந்த சில்லறைகளை வைத்துக்கொள்ளுங்கள்” என்று கூறி சில திர்ஹம்களை நீட்டினார். அதற்கு, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “வேண்டாம் அம்மா, நான் இதனை பணத்திற்காக செய்யவில்லை” என கூறி உறுதியாக மறுத்துவிட்டார்கள். கொள்ளைக் கூட்டம் நிறைந்த இந்த ஊரில் இப்படியும் ஒரு நல்ல மனம் கொண்ட மனிதரா...? என்று வியந்த அம்மூதாட்டி “கருணை உள்ளம் படைத்தவரே, உங்கள் பெயரையாவது சொல்லி விட்டு செல்லுங்கள்” என்று கூறினார். அப்போது நற்குணத்தின் தாயகம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் புன்முறுவல் பூத்தவர்களாக “நீங்கள் யாருடைய போதனைக்குப் பயந்து இந்த ஊரை விட்டு போகிறீர்களோ, அந்த முஹம்மது நான் தான்” என்று கூறினார்கள். அதனை கேட்ட அம்மூதாட்டி அதிசயித்து நின்றார். அவரின் கண்கள் கண்ணீரை சொரிந்தன. இவ்வளவு நற்குணம் படைத்த ஒருவரையா சரியாக புரிந்துக்கொள்ளாமல் நான் தப்பாக பேசினேன் என்று உள்ளத்தால் அழுதார். நிச்சயமாக நற்குணத்தின் சிகரமான இந்த புனிதர் வழிகெடுப்பவராக இருக்க முடியாது என்பதை உணர்ந்த அம்மூதாட்டி அடுத்த கணம் இஸ்லாத்தைத் தழுவினார். இதில் படிக்க வேண்டிய பல பாடங்கள் உள்ளன. 1. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், மூதாட்டிக்கு உதவும் போது அவளது சாதி சமயத்தைப் பார்க்கவில்லை. அங்கே மதத்தை தாண்டி மனிதாபிமானம் என்றால் என்ன என்பதை உலகிற்கு எடுத்து சொன்னார்கள். 2. தன்னை பற்றி அம்மூதாட்டி கூறிய வசை மொழிகளை பெருந்தன்மையோடு சகித்துக் கொண்டார்கள். இதில் பொறுமை, சகிப்புத்தன்மை, மற்றவரை மன்னிக்கும் மனப்பான்மை ஆகியவற்றை உலகிற்கு எடுத்து காட்டினார்கள். 3.கடைசியாக தன்னை எதிரியாக பார்த்த ஒரு பெண்ணுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருப்பி கொடுத்தது - “அன்பு”. கடைசியில் எதிரி அன்பரானார். அன்பினால்: வேதனை சுகமாகும். அன்பினால்: கசப்பு இனிமையாகும். அன்பினால்: இருள் வெளிச்சமாகும். இஸ்லாமிய அழைப்பாளன்...

“மகளே உனக்கு முன் நான் சொர்க்கம் போய்விடுவேன்” (கண்ணீர் மல்கச் செய்யும் உண்மை சம்பவம்)


https://youtu.be/eBGlUA0GRB8 “மகளே உனக்கு முன் நான் சொர்க்கம் போய்விடுவேன்” (கண்ணீர் மல்கச் செய்யும் உண்மை சம்பவம்) பராஆ எகிப்தை சேர்ந்த 10 வயது சிறுமி. பெற்றோர்களுடன் ஸஊதி அரேபியாவில் வசித்து வந்தாள். அவரது பெற்றோர்கள் ஒரு வைத்தியசாலையில் வேளை செய்து வந்தனர். மகிழ்ச்சி அந்தக் குடும்பத்தில் நிறைந்திருந்தது. பராஆ மிகத் திறமையான சிறுமி இந்த 10 வயதிலேயே குர்ஆனை அதன் சட்டங்களோடு மனனமிட்டிருந்தாள். அந்த மகிழ்ச்சியான குடும்பத்தில் ஒரு சோக சம்பவம். எந்த விதமான முன்னடையாளமுமின்றி தாய் நோய் வாய்ப்படுகிறார். வைத்திய பாிசோதனையில் கென்ஸர் அதன் இறுதி நிலையில் இருப்பதாக வைத்தியர்கள் தொிவித்தனர். இந்த விடயத்தை மகளிடத்தில் தொிவிக்க வேண்டாம் என தாய் கேட்டுக்கொண்டாள். இந்த இளம் வயதில் அதைத் தாங்கும் சக்தி அவளுக்கு இல்லை சொல்ல வேண்டாம் என்று வேண்டிக் கொண்டார். மகள் தினம் தோறும் வைத்தியசாலைக்குப் போய் தாயிடம் அமர்ந்து குர்ஆனை ஓதுவாள். ஒரு முறை தன் சின்ன மகளிடம் மறைமுகமாக தனது மரணத்தை சொல்லி வைக்க தாய் நினைத்தாள் - “பராஆ! உனக்கு முன் நான் சொர்க்கம் போய்விடுவேன். நீ ஓதும் குர்ஆனை தொடர்ந்து ஓது. அதுதான் உன்னை பாதுகாக்கும்ம்ம்...” என்ற கூறி வைத்தாள். முழுமையாக தாயின் நோக்கத்தைப் புாியாது விட்டாலும் சில மாற்றங்களை உணர்ந்தாள் பராஆ. ஒரு நாள் காலை வைத்தயாசலையிலிருந்து தந்தைக்கு ஓர் அழைப்பு வந்தது. செய்தி என்ன என்று முழுமையாகத் தொியாத நிலையில் பராஆவை அழைத்துக் கொண்டு வைத்தியசாலைக்குச் சென்றார் தந்தை. பராஆவிற்கு அதிர்ச்சியான செய்தி எதுவும் தொியக் கூடாது என்ற நோக்கில் “பராஆ! நீ வாகனத்திற்குள் இருந்துகொள். இதோ வருகிறேன்” என்று சொல்லிவிட்டு பதட்டத்துடன் வேகமாக வீதியைக் கடந்தார். ஆனால்.................... பராஆவின் இரு கண்களுக்கு முன்னாலேயே தந்தை வேகமாக ஒரு வாகனத்தில் மோதுண்டு விழுகிறார். அழுகையோடு பராஆ வீதிக்கு ஓடி வந்து தந்தையின் உடலைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுகிறாள். ஆம் தந்தை உயிரை இழந்தார். பராஆவை வேதனையை அதிகாிக்க இருந்த அடுத்த கவலையான செய்தியை வைத்தியர்கள் மறைத்து விட்டனர். ஆனாலும் எத்தனை நாட்கள் மறைக்கலாம் 5 நாட்களில் தாயின் உடல் மண்ணறை நோக்கி சுமந்து செல்லப்படும் செய்தியை அவளுக்குத் தொிவித்தார்கள். கதறியழுதாள் பராஆ. உறவினர்களின்றி ஸஊதியிலே தனித்துப் போன பராஆவை எகிப்தில் அவளது உறவினர்களிடம் அனுப்ப நண்பர்கள் ஆலோசித்தனர். ஆனால்... சில நாட்களில் திடீரென பராஆ நோய்வாய்ப்பட்டாள். வைத்தியாசாலைப் பாிசோதனையில் மிக மோசமான கென்ஸர் தாக்கியுள்ளது என வைத்தியர்கள் தொிவித்தார்கள்.இந்த செய்தி பராஆவுக்கு தொிய வந்ததும் புன்னகைத்தாள். “எனது தந்தையும் தாயையும் பார்க்கப் போறேன்” என்று எல்லோருக்கும் முன்னால் ஆனந்தத்துடன் கூறினாள். செய்தியறிந்த ஸஊதி தனவந்தர் ஒருவர் பராஆவை தனது முழு செலவிலும் யுகேயிற்கு அனுப்பி மருத்துவம் பார்க்க ஏற்பாடு செய்தார். ஆனால் அங்கு கொண்டு செல்லப்பட்ட பராஆவின் நோய் முற்றிக்கொண்டே வந்தது. இறுதியில் அந்த இளம் உடலின் இரு கால்களும் வெட்டப்பட்டன. சில மாதங்களில் பராஆவைஅல்லாஹ் தன் பக்கம் அழைத்துக் கொண்டான். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். ஆனாலும் ... அந்த இளம் பிஞ்சு வைத்தியசாலையில் இருந்த காலத்தில் அனைத்து மீடியாக்களும் தொடர்பு கொண்டன. அனைத்தையும் யுடியுபில் நீங்கள் காணலாம். அந்த சின்ன மகள் ஓதிய ஓதல்கள் கவிதைகள் அனைவரையும் அழ வைத்தன. ஆம் உங்களையும் அழவைக்கும் கேட்டுப்பாருங்கள். படிப்பினை பெறுவோம்..! (இது 2014ஆம் ஆண்டு வெளியான செய்தி) மீல் பரிசோதனை இதனை அனைவருக்கும் பகிர்ந்து அவர்களுடைய மண்னறைக்கு நன்மைகளை சேர்ப்போம். யா அல்லாஹ் இவர்களை கபூல் செய்து உன்னுடைய மேலான சுவர்க்கத்தை வழங்குவாயாக! https://youtu.be/eBGlUA0GRB8 (By.m.t.m.waseem)

குவைத்திலுள்ள #Shaimaa என்ற சகோதரி உலகிலுள்ள அனைவரையும் #பிராத்தனை வேண்டியுள்ளார்:


#குவைத்திலுள்ள #Shaimaa என்ற சகோதரி உலகிலுள்ள அனைவரையும் #பிராத்தனை வேண்டியுள்ளார்: அவர் #புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார்.😭😥ஆனாலும் அவர் அனைத்தையும் தாங்கி சிரித்த முகத்துடன் தன் நம்பிக்கையுடன் காணப்படுகிறார்.👏👍 எதையும் தாங்கும் தைரியத்தையே இது காட்டுகிறது.💪 இவர் விரைவில் குணமடைய எல்லோரும் துஆ பிரார்த்தனை செய்வோம்,ஆமீன் 🤲 🤲 🤲

உலகக் கிண்ணக் கரம் போட்டி, சம்பியன் ஆகியது இலங்கை - 2 முஸ்லிம் வீரர்களும் பங்களிப்பு இந்திய கரம் அணியைத் தோல்வியடையச் செய்து ஆண்களுக்கான உலகக் கிண்ணக் கரம் போட்டித் தொடரில் சம்பியன் கிண்ணத்தை இலங்கை அணி வென்றுள்ளது. நேற்று முன்தினம் தென்கொரியாவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணியை 2 -1 என்ற செட் கணக்கில் இலங்கை அணி வெற்றி பெற்றது. சமில் குரேயின் தலைமையில் நிசாந்த பெர்னாந்து, மொஹமட் சஷீட், உதேஷ் சஷிக ஆகியோர் இலங்கை அணி சார்பாக இத்தொடரில் பங்குபற்றினர். இத் தொடரின் மகளிர் பிரிவில் இலங்கை கரம் அணி இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டது. யஷிகா ராகுபெத்தவின் தலைமையிலான இலங்கை அணி இறுதிப் போட்டயில் இந்திய அணியிடம் 3--–0 என்ற செட் கணக்கில் தோல்வியுற்றது. ஜோசப் ரொஷிடா, வலனி லியனகே, மதுஷா ராமநாயக்க இலங்கை சார்பாக இத் தொடரில் பங்குபற்றினர். இந்த போட்டிகளுக்கான இலங்கை அணியில் பிரபல தேசிய தரத்துடன் கூடிய வீர, வீராங்களைகள் இடம்பெற்றனர். அணியில் இடம்பெறும் 8 பேரில் 6 பேர் சிரேஷ்ட வீரர்களாவர், அவர்கள் சர்வதேச அனுபவம் உள்ளவர்களாவர். ஆண்கள் அணியின் சமில் தர்ஷன குரே (தலைவர்) (செலான் வங்கி) நிஷாந்த பெர்னாண்டோ (இலங்கை கடற்படை), சஹீட் ஹில்மி (ரோயல் கல்லூரி) உதேஷ் சந்திமா பெரேரா (இலங்கை விமானப்படை) ஆகியோர் இடம்பெற்றனர் பெண்கள் அணியில் யஷிகா ராஹுபுத்த (தலைவலி) (இலங்கை கடற்படை) சலனி லக்மாலி லியனகே (இலங்கை இராணுவம்) ஆகியோர் இடம்பெற்றனர். மொஹமட் ஷெரிப்தீன் மற்றும் மதுவந்தி குணதாச ஆகிய இருவரும் மாற்று வீர, வீராங்கனையாக பெயரிடப்பட்டனர். இலங்கை கரம் சம்மேளனத்தின் தலைவர் பராக்கிரம பஸ்நாயக்க மற்றும் சம்மேளனத்தின் பிரதித் தலைவர் பிரின்ட்லி விக்கிரமசிங்க ஆகியோர் இந்த சுற்றுலாவுக்கான அதிகாரிகளாக சென்றனர். 2012 இல் உலக கரம் சம்பினாக வெற்றி பெற்ற நிஷாந்த பெர்னாண்டோ மற்றும் 2014 மாலைதீவிலும் 2016 இல் பிரிட்டனிலும் இரு தடவைகள் ஸ்வின் லீக் சம்பியனாகத் தெரிவான சமில் தர்ஷன குரே ஆகியோர் முன்னைய வருடங்களின் சர்வதேச கரம் பொட்டிகளில் விளையாடி இலங்கைக்கு பெருமை பெற்றுக் கொடுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை,இந்தியா ,பாகிஸ்தான் ,மாலைதீவு,கொரியா, ஜப்பான்,அமெரிக்கா மற்றும் இற்கிலாந்து ,பிரான்ஸ் ,ஜேர்மன் ஆகிய நாடுகள் அடங்கலாக 21 நாடுகள் பங்கேற்றன.

கலஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கைக்குழந்தையொன்று வைத்திகளின் பொடுபோக்காள் மரணம்,பொது மக்கள் ஆவேசம்

கலஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கைக்குழந்தையொன்று மரணித்ததை அடுத்து அங்கு கூடிய ஊர் மக்களால் வைத்தியசாலையருகில் பதற்ற நிலை உருவாகியுள்ளது. மூன்றரை வயது குழந்தையொன்றுக்கு சிகிச்சையளிப்பதில் ஏற்பட்ட தாமதமே மரணத்துக்குக் காரணம் என கூடியிருந்தோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். சுமார் 700 பேர் வரை அங்கு கூடியிருந்த நிலையில் பொலிசார் தலையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. The Health, Nutrition and Indigenous Medicine Minister Dr. Rajitha Senaratne has ordered the Director General of Health Services, Dr. Anil Jasinghe to conduct a proper investigation into an incident at Galaha rural hospital in Gampola where a woman was scolded and assaulted by an attendant. According to media reports, the woman, who has taken her four-year-old sick child to the Galaha rural hospital seeking medicine for child’s illness, was scolded by the female doctor for not taking off shoes before entering the consultation room. The doctor has asked an attendant to throw the mother and the child out and the attendant has physically assaulted the mother. The victimized woman has been admitted to the Kandy General Hospital for treatment. The Incident has happened on 16th July. The Health Minister has ordered the Director General of Health Services to conduct an inquiry and submit a report within two weeks. The Minister has given instructions to take appropriate disciplinary action against the female doctor and the attendant if there was any wrongdoing. It has been reported that the Galaha police are conducting investigations into the alleged assault. අද පෙරවරුවේ ගලහ රෝහලේ පුතිකාර ලබා ගැනීමට රැගෙන ගිය කුඩා දරැවෙකු රෝහලේදී මිය යෑම නිසා කෝපයට ජනතාව රේහලට අලාභ හානි කර ඇති අතර වෛද්‍යවරුන් ගේ නොසැලකිලිමත් කමින් එම කුඩා දරැවා මිය ගොස් ඇති බව වාර්තා වෙි !

Monday, 27 August 2018

BUY YOUR OWN TENSUN ORIGINAL TREVEL POWER ADAPTER.....4 in 1 Check this out: Tensun Travel Adapter, International Power Adapter for European Product... buy link https://www.amazon.com/dp/B071FSX1JT/ref=cm_sw_r_wa_awdb_t1_.wgHBb522YYR6

Monday, 20 August 2018

http://3e10fgr62zfz9r0kiz6ckr0xdi.hop.clickbank.net/?tid=WASEEM1991 Buy your product👆👆👆👆👆 Click hire your affiliate link 50% discount

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள்.

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள். பாருங்கள் பகிருங்கள்