Monday, 5 November 2018

உலகின் தலைசிறந்த இடதுகை சுழல் பந்துவீச்சாளரும், 2014ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணத்தை இலங்கை வெல்ல காரணமாக இருந்தவரும் ஆன நட்சத்திர சுழல் வீரருமான ரங்கன ஹேரத் நாளைய டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச அரங்கில் இருந்து ஓய்வு பெறுகின்றார்.


2014 T20 உலகக் கிண்ணம் - இலங்கை அணி செமி பைனல் செல்ல நியூசிலாந்து அணியுடனான லீக் போட்டியில் வென்றே ஆக வேண்டும் என்கிற நிலை. இலங்கை - நியூசிலாந்து அணிகள் இடையிலான போட்டி ஆரம்பமாகின்றது. போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி வெறும் 119 ஓட்டங்களையே பெற்றது. அப்போதைய அதிரடி வீரர்களான பிரன்டன் மெக்கலம், ரோஸ் டெய்லர், கேன் வில்லியம்சன் போன்ற வீரர்களை கொண்டிருக்கும் நியூசிலாந்து அணிக்கு இது பக்கோடா சாப்பிடுவது போன்ற ஒரு வெற்றி இலக்கு. இலங்கை அணி வெறும் 119 ஓட்டங்கள் பெற்ற உடனேயே தோல்வியை தழுவி உலகக் கிண்ணத்தை விட்டு வெளியேறும் என்றே பலரும் நினைத்தனர். எனினும், இந்த நினைப்புக்கள் அனைத்தினையும் தவிடுபொடியாக்கினான் ரங்கன ஹேரத், தான் வீசிய ஒவ்வொரு ஓவரிலும் விக்கெட் எடுத்த ரங்கன ஹேரத் நியூசிலாந்து அணியினை வெறும் 60 ஓட்டங்களுக்குள் மடக்க உதவினார். குறித்த போட்டியில் வெறும் 3 ஓட்டங்களை விட்டுத்தந்து ரங்கன ஹேரத் 5 விக்கெட்டுக்களை சாய்த்தது குறிப்பிடத்தக்கது. ரங்கன ஹேரத் கைப்பற்றிய இந்த விக்கெட்டுக்களாலும், தோல்வியடைய வேண்டிய குறித்த நியூசிலாந்து போட்டியில் வென்றதன் காரணமாகவே இலங்கை அணி 2014ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணம் வென்றது. எமக்கு இப்படியான ஒரு மறக்க முடியாத வெற்றியினைப் பெற்றுத் தந்த சாதனைக் கதாநாயகன் நாளை கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகின்றான். நன்றி தலைவா!

நண்பர்கள் அனைவருக்கும் தீபவாளி வாழ்த்துக்கள்! Happy Diwali Friends!


நண்பர்கள் அனைவருக்கும் தீபவாளி வாழ்த்துக்கள்! Happy Diwali Friends!

Sunday, 4 November 2018

#தென்ஆப்ரிக்கா VS #ஆஸ்திரேலியா


#தென்ஆப்ரிக்கா VS #ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் தென்ஆப்ரிக்கா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

AR. ரஹ்மானிடம் அமெரிக்காவில் கேட்கப்பட்ட ஓரு கேள்வி !?????


AR. ரஹ்மானிடம் அமெரிக்காவில் கேட்கப்பட்ட ஓரு கேள்வி ! உங்கள் நாட்டீல் பிஜேபி, காங்கிரஸ் ஆட்சியில் எதை விரும்புவீர்கள் ? இல்லை இவையில்லாம் வேற யார் ஆட்சி அமைத்தால் நலமாக இருக்கும் என விரும்புகிறீர்கள் என்று கேள்வி கேட்க்கப்பட்டதற்க்கு ! ! ! A.R ரஹ்மான் கூறிய பதில்:- இந்தியாவில் யார் ஆட்சி சிறப்பானது என்று நான் கூறுவதை விட பண்டைய அரேபியாவில் கலிபா எனப்படும் உமர் அவர்களின் ஆட்சி போல் இருந்தால் நலமாக இருக்கும் என விரும்புகிறேன் ! ! சுதந்திரத்தை எழுதி கொடுத்த பின்ஆங்கிலேய அதிகாரிசுதந்திர இந்தியாவின் ஆட்சி எவ்வாறு இரூக்க ஆசைபடுகிறீர்கள் என கேட்ட போது, காந்தி அவர்கள் உடனே அழித்த பதில் : - அரேபி தேசத்தில் ஜனாதிபதி உமர் என்பவரின் ஆட்சி போல் இருக்க விரும்புகிறேன். கெஜிர்வால் டெல்லியை வெற்றி பெற்ற கையுடன் அவரிடம் நீங்கள் எவ்வாறு ஆட்சி அமைக்க விரும்புகிறீர்கள் என்று கேட்ட போது, கெஜிர்வால் அழித்த பதில் : - உமர் அவர்களுடைய ஆட்சியை போல் செயல்பட விரும்புகிறேன். இதை படித்தவுடன் உங்களில் எழும் கேள்வி யார் அந்த உமர் ? உமர் வாழ்வில் நடந்த ஓரு சம்பவத்தை இங்கு சொல்கின்றேன் , அதன் பின் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். உமர் அவர்கள் ஆட்சிகாலத்தில் பாலஸ்தின் யுதர்களிடம் இருந்து வெற்றி பெற்று மீன்டும் இஸ்லாமியர் கைவசம் வந்து விட்டது அதன் ஜனாதிபதியாக உமர் அவர்களானார். தான் செல்லாமல் தன் படைவீரர்களை வைத்து மீட்டார், அப்பொழுதைய பாலஸ்தீன வாசிகள் தங்களின் ஆட்சியாளர் உமர் அவர்களின் முகத்தை பார்க்க ஆசைபட்டு ஆர்வத்தில் கிளர்ச்சி செய்தனர். இதையறிந்த உமர் அவர்கள் தனக்கு துனையாக ஆட்சியின் பனியாளர் ஓருவரை அழைத்து கொண்டு பாலஸ்தினம் புறப்பட்டு சென்றார். சவுதி அரேபியா தேசத்தில் இருந்து தற்போதைய இஸ்ரேலுக்கு ஒரு ஒட்டகத்தில் உமர் அவர்களும் அவரின் வேலையாளில் ஓருவரையும் அழைத்து சென்றார் என்றால் எத்தனை நாட்கள் ஆகியிருக்கும் ? உமர் அவர்கள் செல்லும் வழியில் தன் பனியாளிடம் ஓரு குறிபிட்ட அளவை சொல்லி அதாவது இரண்டு கிலோமீட்டர் அளவுக்கு ஓட்டகத்தில் நான் அமர்வேன், பின் நீ இரண்டு கிலோமீட்டர் நீ அமர்ந்து வா என்று ஓப்பந்தம் செய்து கொண்டார்கள். உமர் அவர்களே ஒட்டகத்தில் முழவதுமாக அமர்ந்து வந்தாலும் யாரும் கேட்க முடியாது இருந்தும் சம உரீமையை பேணினார். அவ்வாறே மாறி மாறி சுழற்சி முறையில் பயனித்து பாலஸ்தின எல்லையை நெருங்கிவிட்டார்கள். பாலஸ்தின எல்லைக்குள் மக்கள் இரு வழி யிலும் பெருங்கூட்டமாக காத்து நின்றார்கள். அவர்களை முஸ்ஸீம் தளபதி ஓருவர் கட்டு படுத்தி உமர் வரவை எதிர் நோக்கியிருந்தார், உமர் அவர்கள் பாலஸ்தின எல்லைக்குள் நுழையும் நிலையில் உமர் அவர்களின் ஓட்டகத்தில் அமரும் தூரம் முடிந்து விட்டது, உமர் அவர்கள் ஒட்டகத்தை பனியாளிடம் தந்தார். பனியாளோ தற்போது எல்லைக்குள் நுழைய இருக்கிறோம் நீங்கள் தொடர்ந்து அமருங்கள் எனக் கூறினார். மேலும் மக்கள் கானும் போது நீங்கள் ஓட்டகத்தில் அமர்வதே சரியென்றார். ஆனால் உமர் அவர்களோ நான் இங்கு ஓட்டகத்தில் மன்னனாக அமர்வதைவிட நான் ஓப்பந்தத்தை மீறாத அடியானாக இறைவன் முன் நிற்க ஆசைபடுகிறேன். அதனால் மிகவும் களைப்பாக இருக்கும் நீ அமர்ந்து கொல் என்று பனியாள் அமர்ந்திருக்க ஓட்டகத்தை பிடித்து கொண்டுபாலஸ்தினத்தில் புகுந்தார். மக்கள் அனைவரும் பனியாளரை மன்னரென நினைத்து மகிழ்ச்சியி ஓட்டகத்தில்இருப்பவரை பார்த்து மகிழ்ச்சி கொணடார்கள். மக்கள் பனியாளரே மன்னன் என நினைக்க மற்றொரு காரணம், பனியாளின் சட்டையில் மூன்று கிளிச்சல்கள் ஒட்டகத்தை பிடித்து வந்த உமரின் ஆடையிலோ 16 கிளிச்சல்கள், அங்கே இருந்த மக்கள் யாரும் இதற்கு முன் உமர் அவர்களை பாத்ததில்லை என்பதால் பனியாளை மன்னனாக உறுதியாக்கி பார்த்தார்கள். அங்கே முஸ்ஸீம் தளபதி காலித் பின் வாலித் அவர்கள் ஒட்டகத்தில் பனியாள் அமர்ந்து உமர் நடந்து வருவதை கண்டதும் தன் உடைவாளை உருவிக் கொண்டு பனியாளை வெட்டு வதற்காக விரைந்து வந்தார். அதை கண்ட உமர் காலித் அவர்களை தடுத்து நீங்கள் வரம்பு மீற வேண்டாம். மேலும் ஒப்பந்தபடியே அவர் அமர்ந்து வருகீறார் எனக் கூறினார். அப்போது அங்கிருந்த மக்கள் உமரின் நேர்மை, தன்னடக்கம் அனைத்தையும் கண்டு இப்படி ஓருவர் ஆட்சியில் தாங்கள் குடிமக்கள் என்பதை நினைத்து பெருமைபடுகிறோம் என்றனர். தற்போதைய உலகத்தில் காரின் கதவை விரைவாக திறந்து விடவில்லை என்பதற்காக பனி நீக்கம் செய்யப் பட்டுள்ளனர். தான் ஓரு ஜனாதிபதி என்பதை நினைத்து கர்வம் கொள்ளாதவர் உமர் ரலியல்லாஹீ அன்ஹு அவர்கள்....

குழந்தைக்கு உடல் நலக்குறைவால் ரூட்டை மாற்றிய சவுதி விமானி. ...


குழந்தைக்கு உடல் நலக்குறைவால் ரூட்டை மாற்றிய சவுதி விமானி. ... கேரள மாநிலத்தின் கொச்சி நகரில் இருந்து சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தை நோக்கி தனது பயணத்தை தொடங்கியது சவுதி அரேபியாவின் விமான நிறுவனத்துக்கு சொந்தமான 747 என்ற எண் கொண்டது சவுதி விமானம். இதில் ஆறு மாதங்கள் மட்டுமே நிறைவு பெற்ற கேரளாவை சார்ந்த பச்சிளம் குழந்தையும் ஒன்று பயணித்தது. பயணத்தின் இடையே அந்த குழந்தை மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டது. இது விமானிக்கு தெறியபடுத்தவே தனது விமனத்தின் பயணபாதையை உடனடியாக மாற்றி விமானத்தை அவர் மஸ்கட் விமான நிலையத்தில் உடனடியாக தரை இறக்கி அந்த பச்சிளம் குழந்தையின் உயிரை அல்லாஹ்வின் உதவையை கொண்டு காப்பாற்றினார். மஸ்கட்டில் அந்த குழந்தைக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்யபட்டது. இப்போது அந்த குழந்தை சீரான நிலைக்கு வந்த பிறகு விமானம் மறுபடியும் ரியாத்தை நோக்கி பயணித்தது. சவுதி விமானியின் இந்த மனிதநேய பணி அனைத்து பயணிகளின் ஆதரவையும் பெற்றது.

Saturday, 3 November 2018

முஹம்மது (ஸல்) அவர்கள்..


முஹம்மது (ஸல்) அவர்கள் தன்னுடைய வாழ்நாளின் வரலாற்று முக்கியத்துவம் என்ன என்பதை முற்றிலுமாக உணர்ந்தவர்கள். தன்னுடைய கடைசி இருபத்து மூன்று ஆண்டு காலத்தின் ஒவ்வொரு துளியிலும் மனித சமூகத்தின் உயர்வுக்காக உழைத்தவர்கள். அதன் ஒவ்வொரு இழையிலும் சமுதாயத்திற்கான செய்திகளை விட்டுச் சென்றவர்கள். இறுதியாக என்னை பின்பற்றினால் நிச்சயமாக நீங்கள் வெற்றிய்டைவீர்கள் என்று தைரியமாக்ச் சொன்னவர்கள். அவர்களைப் போல இந்த உலகிற்கு தன்னைப் பற்றிய தகவல்களை விட்டுச்சென்றர்வர்கள் யாருமில்லை. அவர்கள் சுய வரலாறு எழுதவில்லை. அவர்களது வரலாறு சுயமாகவே எழுந்து நிற்கிறது. அவர்களது காலத்தில் திருக்குர்ஆன் எழுதிப் பாதுக்காக்கப் பட்டு வந்த்து. அதில் தன்னுடைய வார்த்தைகள் கலந்து விடக்கூடாது என்பதற்காக “என்னுடைய வார்த்தைகளை எழுதி வைக்க வேண்டாம்” என்று அவர்கள் உத்தரவிட்டார்கள். அவருகளுடை வார்த்தைகளோ வரலாற்றுக் சொல்லப்பட்ட உத்தரவுகளாக பன்னூறு தலைமுறைகளைத் தாண்டியும் புது மெருகு குலையாமல் அப்படியே பாதுகாப்பாக இருக்கின்றன. அவரகளது நிழற்படம் எதுவும் இல்லை. கற்பனையாகக் கூட அவருகளுடைய தோற்றம் உருவகப்படுத்தப் படுத்தப்ப்டவில்லை. சாக்ரடீஸுக்கும் பிளாட்டோவுகும் வள்ளுவருக்கும் இளங்கோவுக்கும் புத்தருக்கும் ஏசுவுக்கும் கூட உருவங்கள் கற்பிக்கப் பட்டுவிட்டன. மூலவர்கள் இனி எழுந்து வந்தால் கூட இந்த முகமூடிகளைத் தான் அணிந்து கொள்ள வேண்டும் என்னும் அளவு அந்தப் போலி முகங்கள் மக்கள் மனதில் படிந்துவிட்டன. உலகின் மிக அதிக செல்வாக்கு கொண்ட முஹம்மது (ஸல்) என்றஅந்த பிரம்மாண்ட்த் தலைவரை அடையாளப்படுத்த ஒரு நிழற்படமோ, சித்திரமோ, இல்லை. உலகின் மாபெரிய அதிசயம் இது. ஒவியர்களோ சித்திரக்காரர்களோ அவர்கள் காலத்தில் இல்லாமலில்லை. சித்திரங்களும் ஓவியங்களும்தான் முந்தைய இறை ஒழுக்கமுள்ள சமுதாயத்தை சீரழித்தன என்பதை உறுதியாக அவர்கள் உணர்ந்தார்கள். சித்திரங்களையும் சிலைகளையும் கண்டு அகமழிந்து போகிற மக்கள் அதைப் பிடித்துக் கொண்டு சிந்தனைகளையும் சித்தாந்தங்களையும் கைநழுவ விட்டுவதை தெளிவாக அறிந்தார்கள். அந்த விபத்து இறுதித்தூதை சுமந்து செல்லும் சமுதாயத்தில் நிகழ்ந்து விடக்கூடாது என்பதில் மிகவும் எச்சரிக்கையாக இருந்தார்கள். அதனால சித்திரங்களை அவர்கள் எதிர்த்தார்கள். உலகின் இறுதித் துளிவரைக்கும் தனது கருத்துக்கள் பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட வேண்டும் என விரும்பி அதற்கான ஏற்பாடுகளை செய்த அவரகளது காலம் கடந்து செல்லும் ஒரு இலட்சியப் பயணத்திகு தனது சித்திரம் தேவை என்று கருதவில்லை. சிந்தனையும் வழிகாட்டுதலும் மட்டுமே போதும் என்று நினைத்தார்கள் அவரகளது தோழர்கள் அவரது உண்மையான அடையாளத்தை உன்னதமாக பாதுகாத்தார்கள். அவர்களை அடையாளப்படுத்த எந்தப் வரைபடமும் தேவையில்லை எனும் அளவு அவர்களைப் பற்றி அணுவிலும் அணுவான தகவல்களை அவரகளது தோழர்கள் சேகரித்துப் பராமரித்துப் பாதுகாத்துப் பரவச்செய்தனர். உலகின் எந்த அதி நவீனக் காமிராவும் இவ்வளவு துல்லியமாக ஒரு மனிதரை படம் பிடிக்க முடியாது.

அவமானங்களை இவ்வளவு அழகாய் எதிர்கொள்ள முடியுமா? அமெரிக்க பாராளுமன்றத்தில், அதிபர் ஆப்ரஹாம் லிங்கன் உரைநிகழ்த்தும்போது, அவரை மட்டம்தட்டும் நோக்கில் எதிர் தரப்பு பிரமுகர் ஒருவர் எழுந்து, ஆப்ரஹாம் ... ...உங்கள் தந்தை தைத்துக்கொடுத்த செருப்பு இன்னும் என் காலை அலங்கரித்துக்கொண்டு இருக்கிறது என்றாராம் ....அதற்கு ஆப்ரஹாம் லிங்கன் சொன்னாராம், " நண்பரே என் தந்தை இறந்து பலவருடங்கள் ஆகிவிட்டது, இருப்பினும் அவர் தைத்து கொடுத்த செருப்பு உங்களின் காலை இன்னும் அலங்கரித்துக்கொண்டு இருக்கிறதென்றால், அது அந்த அளவுக்கு நேர்த்தியாக தைக்கப்பட்டுள்ளது இருப்பினும் அவர் தைத்த இடத்தில் ஏதேனும் பழுது எர்ப்பட்டிருந்தால் அதை என்னிடம் கொடுங்கள் நான் அதை உங்களுக்கு சரி செய்து தருகிறேன் எனக்கு செருப்பு தைக்கவும் தெரியும் ..... நாட்டை ஆளவும் தெரியும் என்று பதிலுரைத்தாராம் ... ... !!! தன்னம்பிக்கை விடாமுயற்சி இவைகளில் இருந்து பெற்ற ஏழ்மையின் அனுபவ அறிவுக்கு நிகராக வேறெதுவும் போட்டியிட முடியாது பதவியில் இருக்கும் போதும் அவமான படுத்திய நபர் மீது கோபம் கொள்ளாமல், தன் அதிகாரத்தையும் காட்டாமல் புத்திசாலி தனமாக பணிவோடு பதில் அளித்தே அவமான படுத்தியவரின் மூக்கை உடைத்திருக்கிறார் லிங்கன். இந்த பக்குவமான மனதாலும் விடாமுயற்சியாலும் தான் பல தோல்விகளுக்குப் பின்னர் அமெரிக்காவின் ஜனாதிபதியாகி அடிமைத்தனத்திற்கு எதிராக குரல் கொடுத்தார்.. இன்றும் பல உயிர்களின் நினைவுகளில் லிங்கன்

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள்.

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள். பாருங்கள் பகிருங்கள்