2014 T20 உலகக் கிண்ணம் - இலங்கை அணி செமி பைனல் செல்ல நியூசிலாந்து அணியுடனான லீக் போட்டியில் வென்றே ஆக வேண்டும் என்கிற நிலை.
இலங்கை - நியூசிலாந்து அணிகள் இடையிலான போட்டி ஆரம்பமாகின்றது. போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி வெறும் 119 ஓட்டங்களையே பெற்றது. அப்போதைய அதிரடி வீரர்களான பிரன்டன் மெக்கலம், ரோஸ் டெய்லர், கேன் வில்லியம்சன் போன்ற வீரர்களை கொண்டிருக்கும் நியூசிலாந்து அணிக்கு இது பக்கோடா சாப்பிடுவது போன்ற ஒரு வெற்றி இலக்கு. இலங்கை அணி வெறும் 119 ஓட்டங்கள் பெற்ற உடனேயே தோல்வியை தழுவி உலகக் கிண்ணத்தை விட்டு வெளியேறும் என்றே பலரும் நினைத்தனர்.
எனினும், இந்த நினைப்புக்கள் அனைத்தினையும் தவிடுபொடியாக்கினான் ரங்கன ஹேரத், தான் வீசிய ஒவ்வொரு ஓவரிலும் விக்கெட் எடுத்த ரங்கன ஹேரத் நியூசிலாந்து அணியினை வெறும் 60 ஓட்டங்களுக்குள் மடக்க உதவினார். குறித்த போட்டியில் வெறும் 3 ஓட்டங்களை விட்டுத்தந்து ரங்கன ஹேரத் 5 விக்கெட்டுக்களை சாய்த்தது குறிப்பிடத்தக்கது. ரங்கன ஹேரத் கைப்பற்றிய இந்த விக்கெட்டுக்களாலும், தோல்வியடைய வேண்டிய குறித்த நியூசிலாந்து போட்டியில் வென்றதன் காரணமாகவே இலங்கை அணி 2014ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணம் வென்றது. எமக்கு இப்படியான ஒரு மறக்க முடியாத வெற்றியினைப் பெற்றுத் தந்த சாதனைக் கதாநாயகன் நாளை கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகின்றான். நன்றி தலைவா!

No comments:
Post a Comment