Friday, 13 September 2019

ஒருவர் அலீ (ரழி) அவர்களிடம் கேட்டார்.....!!


ஒருவர் அலீ (ரழி) அவர்களிடம் கேட்டார்.....!! நாய் ஒரே நேரத்தில் 6, 7 குட்டிகளை ஈன்றெடுக்கின்றது ஆனால் ஆடுகளோ ஒரு நேரத்தில் 2 அல்லது 3 குட்டிகளையே ஈன்றெடுக்கின்றது. ஆயினும் எல்லா இடங்களிலும் ஆடுகளின் எண்ணிக்கை நாய்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கிறதே..? நாம் ஆடுகளை நாள்தோறும் பலியிடுகிறோம்,அறுக்கின்றோம். அப்படி இருந்தும் அவை எப்போதும் நாய்களை விட அதிகமாகவே இருக்கின்றன. ஏன்..? அலீ (ரழி) அவர்கள் பதில் கூறினார்கள்.....! இதுதான் பரக்கத் (அருள்) ஆகும். அதற்கு அவர் பரக்கத் ஆடுகளிடம் மட்டும் ஏன் இருக்கிறது..? நாய்களிடம் ஏன் இருப்பதில்லை..?? எனக் கேட்டார்...!! அலீ (ரழி) அவர்கள் கூறினார்கள்...! ஆடுகள் இரவின் முற்பகுதியிலேயே தூங்கி விடுகின்றன. மேலும் ரஹ்மத்தின் (அருளின்) வேளையாகிய ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுகின்றன. எனவே அருளைப் பெற்றுக் கொள்கின்றன. ஆனால் நாய்கள் இரவு முழுக்க குலைத்து விட்டு ஃபஜ்ர் நேரம் நெருங்கும்போது தூங்குகின்றன. எனவே அவற்றின் ரிஸ்கில் ரஹ்மத்தும் பரக்கத்தும் இருப்பதில்லை. எனவே நான் உமக்கு அறிவுரை கூறுகிறேன்...!! நீர் இரவில் சீக்கிரம் தூங்குவீராக. ஃபஜ்ரில் சீக்கிரம் எழுவீராக. இதுவே வாழ்வாதாரத்திலும் சந்ததிகளிலும் அபிவிருத்திக்கான வழிமுறையாகும்......!!

ஒரு நாட்டின் மாமன்னராக இருந்த போதிலும் கடைசிவரை குடிசையிலேயே வாழ்ந்த முஹம்மது (ﷺ) அவர்களை விடவா உங்களால் ஒரு கம்யூனிஸ்டை அடையாளம் காட்டிவிட முடியும்.


நிச்சயம் முடியாது ஒரு நாட்டின் மாமன்னராக இருந்த போதிலும் கடைசிவரை குடிசையிலேயே வாழ்ந்த முஹம்மது (ﷺ) அவர்களை விடவா உங்களால் ஒரு கம்யூனிஸ்டை அடையாளம் காட்டிவிட முடியும். அடிமையாக (கருதிய) வம்சத்திலிலிருந்து வந்த பிலால் அவர்களை முதன் முதலாக பள்ளிக்கு தொழுகைக்கு அழைப்பு கொடுக்க வைத்த உலகத்தின் வழிகாட்டி முஹம்மது (ﷺ) அவர்களை விடவா உங்களால் ஒரு சாதி மறுப்பாளரை அடையாளம் காட்டிவிட முடியும். உறவுகளிலேயே தாய்க்குதான் முதலிடம் என்பதை சுட்டிக்காட்டிய முஹம்மது (ﷺ) அவர்களை விடவா உங்களால் ஒரு பெண்ணியவாதியை அடையாளம் காட்டிவிட முடியும். வெறும் முன்னூறு பேருடன் போருக்கு சென்று யுத்தகளத்திலே வெற்றி வாகை சூடிய முஹம்மது (ﷺ) அவர்களை விடவா உங்களால் ஒரு போர்ப்படை தளபதியை அடையாளம் காட்டிவிட முடியும். உங்கள் மார்க்கம் உங்களுக்கு அவர்கள் மார்க்கம்அவர்களுக்கு என்று கூறிய முஹம்மது (ﷺ) அவர்களை விடவா உங்களால் ஒரு மதநல்லிணக்க தலைவரை அடையாளம் காட்டிவிட முடியும். என் மகளே திருடியிருந்தாளும் அவர் கையையும் வெட்டுவேன் என்று கூறிய முஹம்மது (ﷺ) அவர்களை விடவா உங்களால் ஒரு நீதியாளரை அடையாளம் காட்டிவிட முடியும். நீங்கள் எந்த விசயத்தை எடுத்தாலும் எங்களது முஹம்மது (ﷺ) அவர்களை மிஞ்சி ஒரு அடையாளம் காட்டிவிடவா முடியுமா? நிச்சயம் முடியாது. எங்கள் தலைவர் முஹம்மது நபி (ﷺ) எங்கள் வழிகாட்டி முஹம்மது நபி (ﷺ) அவர்களைத்தான் நான் நாங்கள் பின் பற்றுவோம். எங்கள் இறுதி மூச்சு இருக்கும்வரை இன் ஷா அல்லாஹ். நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. (அல்குர்ஆன்:

Sunday, 1 September 2019

இயற்கை பிரியர்களின் (Paradise) சுவர்க்கம்........! Reed & share


இயற்கை பிரியர்களின் (Paradise) சுவர்க்கம் என்று அழைக்கப்படும் கண்டி மாவட்டத்தின் வனப்பகுதியில் உள்ள ஒரு தனிமைப்படுத்தப்பட்ட குக்கிராமமான மீமுர கிராமம் மீமுர கிராமம் என அழைக்கப்படும் இக்கிராமம் இலங்கையின் மத்திய மாகாணத்தில் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட கிராமமாகும், இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 324 மீ உயரத்தில் அமைந்துள்ளது இது முற்றுமுழுதாக 3 மலைகளால் மறைக்கப்பட்டுள்ளது சுமார் 100 அல்லது 120 குடும்பங்களைக்கொண்ட இக்கிராமத்தின் அண்மைய சனத்தொகை கணெக்கெடுப்பின் படி சுமார் 400 பேர்களே வசித்து வருகின்றனர் இலங்கையின் பண்டைய பழக்கவழக்கங்கள், உணவு, வாழ்வாதாரங்கள், விவசாய முறைகள், விவசாய உபகரணங்கள், பல்வேறு நம்பிக்கைகள் கொண்ட இந்த கிராமத்து மக்கள் ஒரு அற்புதமான வாழ்க்கை முறையை வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள், இன்றைய நவீன உலகில் டெக்னாலஜி தவிர நம்மால் அடைய முடியாத பல சாதனைகளை இக்கிராம மக்களின் வாழ்வியலில் புரிந்து கொள்ள முடியும் இந்த கிராமம் பிரதான சாலையான நக்கல்ஸ் வனத்திலிருந்து 35 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கிராமத்திற்கு செல்லும் வழியில், இலங்கையின் கிட்டத்தட்ட அனைத்து முக்கிய காடுகளையும் காணலாம். ரம்மியமான பல காட்டு நீர்வீழ்ச்சிகளையும் பல சரிவுகள் சிகரங்களையும் கொண்ட இந்த கிராமத்திற்கு செல்லும் பாதை மிகவும் அழகாக இருக்கிறது. இயற்கையாகவே அமையப்பெற்ற குளங்கள், சாய்வான நீர்வீழ்ச்சிகள், ஏறும் மலைகள், மேடுகள் மற்றும் இயற்கையின் அழகு ஆகியவற்றால் உண்டாகும் திகில், ஆர்வம் மற்றும் மகிழ்ச்சியின் அதிசயங்களை அனுபவிக்க மிமுரா மிக பொருத்தமான இடமாகும் கிராமத்தின் கிழக்கே பிரமிட் வடிவிலான லேகலா மலை அமைந்துள்ளது; மேற்குப்பாகம் அழகிய நக்கல்ஸ் வரம்பினால் ஆதிக்கம் செலுத்துகிறது. இதன் வடக்கு எல்லையானது ‘பிடாவாலா பதானா’ என்ற புள்வெளிக்கு செல்லும் ஒரு காடுகளின் எல்லையாகும்; தெற்குப்பாகம் ஹீன் என்கின்ற நதியால் முற்றுமுழுதாக சூழப்பட்டுள்ளது. 2004 ம் ஆண்டு வரை மீமூர கிராமத்திற்கு சென்றடைய போக்குவரத்து முறையாக கால் நடைகள் மட்டுமே பயன்படுத்தப்படு வந்தன. கால்நடைகள், மந்தைகள் பொருட்கள் மற்றும் உபகரணங்கள் நிறைந்த சாக்குகளை கிராமத்திற்கு கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டன . தற்போது , முச்சக்கர வண்டிகள், ஜீப்புகள் மற்றும் சிறிய லாரிகளை அனுமதிக்க பாதைகள் சற்று அகலப்படுத்தப்படு புனரமைக்கப்பட்டுள்ளன. இந்தக்கிராமத்தின் உள்ளே Camping அல்லது Hiking செல்வதாயின் நன்கு அனுபவம் வாய்ந்த அந்த கிராமவாசிகளுடன் மட்டுமே செல்ல முடியும் இந்த கிராமத்தை சூழவுள்ள வீதிகள் மலைகள் மிகவும் பயங்கரம் வாய்ந்தவை ஆகவே உங்களது பாதுகாப்பை முன்கூட்டியே திட்டமிட்டு பயணம் செய்யுங்கள்.

Friday, 16 August 2019

இஸ்லாத்தை குழிதோண்டி புதைக்க நினைக்கும் நாடுகளின் வரிசையிலிருக்கின்ற முதன்மையான ஒரு நாட்டில் அல்லாஹ்வின் மார்க்கம் வாழ்வதைப் பாருங்கள்.


இஸ்லாத்தை குழிதோண்டி புதைக்க நினைக்கும் நாடுகளின் வரிசையிலிருக்கின்ற முதன்மையான ஒரு நாட்டில் அல்லாஹ்வின் மார்க்கம் வாழ்வதைப் பாருங்கள். சுமார் 8 வருடங்களின் பின்னர் அமெரிக்காவின் தலைநகர் நியூயார்க்கில், நியூ ஜேர்சி மற்றும் "மைட்லேண்ட்" ஸ்டேடியத்தில் முதன் முதலாக இடம்பெற்ற ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜு பெருநாள் தொழுகையின் காட்சிகள்தான் இவை. அல்லாஹு அக்பர் (அவர்கள்) அல்லாஹ்வின் ஒளியைத் (இஸ்லாத்தை) தமது வாய்களால் ஊதி அணைக்கப் பார்க்கிறார்கள். (தன்னை) மறுப்போர் வெறுத்த போதிலும் கூட அல்லாஹ் தனது ஒளியை பூரணப்படுத்தாமல் விட மாட்டான். (அல்குர்ஆன் 9:32) *********************************************** இது போன்ற மேலும் பல சிறந்த பதிவுகளை தொடர்ந்தும் வாசித்து பயன்பெற நீங்கள் விரும்பினால் அல்லது உங்கள் நண்பர்களும் இப்பதிவினை வாசித்து பயன்பெற வேண்டும் என நீங்கள் விரும்பினால், இப்பதிவினை Share 🔄 செய்வதோடு, கீழே உள்ள லின்கை அழுத்தி அதனூடாக சென்று எமது பக்கத்தை பார்வையிட்டு Comments/ Review🔯 செய்யுங்கள். உங்கள் Email ID யை Submit செய்து புதிய தகவல்கள் மற்றும் செய்திகளையும் உடனுக்குடனே பெற்றிடுங்கள். நன்றி. M.T.M.WASEEM. லின்க் 👇

நாகரிகங்கள் .... READ & SHARE YOUR FRIENDS


** அடுத்தவர் பணத்தை முடிந்தவரை ரொட்டேட் பண்ணாதீர் .. (பண்ணவும் நினைக்காதீர் ) ** முடிந்தவரை அடுத்தவரின் கார் மற்றும் டூ வீலர் கடன் கேக்காதீர் ... ** கடன்வாங்கி சென்ற வாகனத்தில் முடிந்த வரை எரிபொருள் நிரப்பி கொடுங்கள் ... ** பொதுவாக செலவு செய்யும் இடத்தில் முன்கூட்டியே சந்தேகம் இருந்தால் கேட்டு விடுஙகள் .. செலவு செய்தபின் tally சாப்ட்வேர் மாதிரி கேள்வி கேக்காதீர்கள் ... ** பெருமைக்கு எருமை மெய்க்காதீர் ** ஒருவரோ , பலரோ உறங்கிக் கொண்டிருக்கும் அறையில் நுழையும் போது டமால் டுமீல் தட் புட் தடால் பணால் என்று சத்தம் போடாதீர்கள் ... வியாக்ர பாதர் , தேனீ உட்காராத பூக்களைக் கண்டுபிடிக்க புலிப்பாதம் வேண்டிக் கொண்டாராம் ... அப்படி நீங்களும் புலி/பூனைப் பாதத்துடன் நடந்து சென்று காரியத்தை முடித்துக் கொள்ளுங்கள் ... ** பொது இடங்களில் நிற்கும் போது யாருடைய வழியையேனும் அடைத்துக் கொண்டு நிற்கிறீர்களா என்று உறுதி செய்து கொள்ளுங்கள் .... ரயிலில் பஸ்ஸில் தேவை இல்லாமல் எழுந்து நிற்காதீர்கள் ... த்ரீ சீட்டர் சீட்களில் உங்கள் இடத்தை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள் ... பைகளை சீட்டில் வைக்காதீர்கள் ... ரயிலில் இரவுப் பயணத்தில் ஏதேனும் காரணத்துக்காக லைட்டைப் போட்டால் மீண்டும் அணைக்க மறக்காதீர்கள் ... ** நண்பர்கள் / உறவினர்கள் வீடுகளுக்கு செல்லும்போது அவற்றின் அமைப்பைக் குறை சொல்லாதீர்கள். (பாத்ரூம் இங்கே இருந்திருக்கலாம்!) அமைப்பை மாற்ற யோசனை சொல்லாதீர்கள் ... (இந்த பிரிட்ஜை இங்கே வெச்சுக்கலாமே! - ( none of your business !). அவர்கள் படுக்கையறைக்கு செல்லாதீர்கள் ... அவர்கள் போனைக் கேட்காதீர்கள் ... அவர்கள் வைஃபை பாஸ்வேர்ட் கேட்காதீர்கள் ... ** கடனைத் திருப்பிக் கேட்கும் முன்னர் அதற்கு ஒரு குறிப்பிட்ட குறைந்தபட்ச நாட்கள் காத்திருங்கள் ... ** ஒருவர் கைபேசி அழைப்பை எடுக்கவில்லை என்றால் தொடர்ந்து விடாமல் மீண்டும் மீண்டும் அழைக்க வேண்டாம் ... அது கொஞ்சம் சைக்கோத் தனம் . அவர்களையும் தேவையில்லாமல் பயமுறுத்தும் ... ** ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கிறீர்கள், அவரை விட வயதிலோ, அந்தஸ்திலோ , பதவியிலோ, முக்கியத்துவத்திலோ உயர்ந்த ஒருவர் உங்களை அழைக்கிறார். பலர் அந்த முதல் நபரை அப்படியே அம்போ என்று விட்டுவிட்டு பரபரப்புடன் இரண்டாம் நபரிடம் ஓடி விடுவார்கள். அவரிடம் குறைந்தபட்சம் 'ஒரு நிமிடம் , போய் வந்து விடுகிறேன் ' என்று சொல்லிச் செல்லவும் ... ** பரபரப்பான சாலைகளில் குழந்தைகளை / குடும்பத்தை போட்டோ எடுக்காதீர்கள் ... கேமாராவுக்கும் போட்டோ எடுக்கப்படுபவருக்கும் இடையே நடக்க நிறைய பேர் தயங்கித் தயங்கி நின்றிருப்பார்கள் ... ** பொதுக் கழிப்பிடங்களை உபயோகித்த பின் நிறைய தண்ணீர் ஊற்றிவிட்டு வாருங்கள் ... ** பஸ்ஸிலும், ரயிலிலும், லிப்டிலும் முதலில் உள்ளே இருப்பவர்கள் இறங்கிய பின் தான் நீங்கள் ஏற வேண்டும் ... ** பொது இடங்களில் பேசும் போது கத்திப் பேசாதீர்கள் ... மொபைல் கால் வந்தால் தனியாகப் போய் ஓரிடத்தில் பேசி விட்டு வாருங்கள் ... டாக்சிதான் ஏறிவிட்டோமே என்று டாக்சியில் கத்திப் பேசாதீர்கள் ... அது ஓட்டுனரை தொந்தரவு செய்யும். ஹெட்செட்டில் பாட்டு கேட்டுக்கொண்டே சத்தமாகப் பேசவோ , பாடவோ, டான்ஸ் ஆடவோ வேண்டாம் ... ** நீங்கள் ஓட்டுனராகவோ , அல்லது சேவை வழங்குநராகவோ (எலக்ட்ரீசியன், பிளம்பர் , பெயிண்டர் etc ) இருந்தால் கஸ்டமரின் personal விஷயங்களை/தகவல்களைக் கேட்காதீர்கள் ... உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் ... ** சூப்பர் மார்க்கெட்டில் உங்களுக்குப் பின்னே கியூ நிற்கிறது. அப்போது பில் போடுபவரிடம் தேவையில்லாத தகவல்களைக் கேட்டுக்கொண்டு இருக்காதீர்கள். (இந்த ஸ்கீம் பத்தி டீட்டெயில்ட்டா சொல்றீங்களா?). அதே போல இருங்க , ப்ரெஷ் வாங்க மறந்துட்டேன் என்று ஓடாதீர்கள். consider others ! ** ஒருவர் உங்களுக்கு treat தரும் போது இதுதான் சாக்கு என்று விலையுயர்ந்த அயிட்டங்களை ஆர்டர் செய்யாதீர்கள் ... ** ஒருவர் வீட்டுக்குப் போகும் முன்னர் பல மணிநேரங்களுக்கு முன்னரே தகவல் சொல்லுங்கள் ... no surprises ! நீங்கள் சர்ப்ரைஸ் விசிட் என்று நினைத்துக் கொண்டு போவது அவர்களை எரிச்சல் படுத்தும் ... ** நீங்கள் guest ஆக ஒரு உறவினர் வீட்டுக்கு சென்றால் உங்களுக்குத் தேவையான மாத்திரை மருந்துகளைக் கொண்டு செல்லுங்கள் ... அங்கே போய் ராத்திரி 9 மணிக்கு 'ரகு , எனக்கு இந்த மாத்திரை வாங்கி வந்திடறியா ' என்று கடுப்பேற்றாதீர்கள் ... ** முதல் சந்திப்பிலேயே ஒருவரைப் பற்றிய opinion களைத் தவிருங்கள் ... 'நீங்க ரொம்ப shy டைப்பா? ' .வந்ததில் இருந்து பத்து வார்த்தை கூட பேசி இருக்க மாட்டீங்க ... ** நீங்கள் சந்திக்கும் நபரைப்பற்றி அதிகம் கேளுங்கள் /பேசுங்கள். உங்களைப் பற்றி அல்ல. (நான் எப்படின்னா, நான் இப்படித்தான், எனக்கு இது பிடிக்காது, ஒருநாள் நான்...etc ) ** யாராக இருந்தாலும் ஒருவர் வாசலை விட்டு நகர்ந்த அடுத்த மைக்ரோ வினாடி கதவை அடைக்காதீர்கள் ... அவர்கள் கொஞ்ச தூரம் போகும் வரை காத்திருங்கள் ... ** வயது, சம்பளம் , விவாகரத்து காரணம், இவைகளைக் கேட்காதீர்கள் ... தம்பதிகளிடம் எப்போது குழந்தை என்று கேட்காதீர்கள் ... ** உங்களை விட வயதில் சிறியவர்களிடம் உரையாடும்போது அட்வைஸ் செய்யாதீர்கள் ... (no one likes advices.) ** வீட்டில் உறவினர்கள் வருகிறார்கள் என்றால் அவர்களுக்கு அன்றாடம் தேவையானவற்றை வாங்கி வையுங்கள் ... அவர்களை பாத்ரூம் சென்று என்றோ தீர்ந்து போன பேஸ்டை பிதுக்க வைக்காதீர்கள். ** புதுமனைப் புகுவிழாவின் போது வீடு வாங்கியவரை முந்திரிக் கொட்டை போல 'ஸ்கொயர் பீட் எத்தனை ?' என்று கேட்காதீர்கள் ... 'எங்க ஏரியாவில் கம்மி ரேட் ' என்றெல்லாம் சொல்லாதீர்கள் ... 'வீடு நல்லா இருக்கு , கங்கிராட்ஸ் ' என்று முதலில் சொல்லுங்கள் ... ** உங்கள் பிள்ளைகளின் நண்பர்கள் வீட்டுக்கு வந்தால் அவர்களை பேச விடுங்கள் ... நடுநாயகமாக உட்கார்ந்து கொண்டிருக்காதீர்கள் .... ( allow them freedom !) அதே போல இளைஞர்களின் விஷயத்தில் தலையிடாமல் ஒதுங்குங்கள் ... 70 வயதானாலும் ஜோவியலாகப் பேசுகிறேன் பேர்வழி என்று 'என்னடா அஷோக் ,நேத்து ராத்திரி அஜால்ஸ் குஜால்ஸ் தானா ?' என்றெல்லாம் கேட்காதீர்கள் ... ** ஒருவர் உங்களிடம் அன்பளிப்பை கிஃப்ட் ரேப் செய்து கொடுத்தால் 'பிரிக்கலாமா?' என்று கேட்டுவிட்டுப் பிரியுங்கள் . 'ஓ , சாண்டிவிட்ச் மேக்கரா, ஏற்கனவே என் கிட்ட இருக்கே' என்றெல்லாம் சொல்லாதீர்கள். accept it . ** பழைய நண்பர்கள் சந்திப்பில் உங்களைப் பற்றி/உங்கள் குழந்தைகள் பற்றி உயர்வாகவோ தாழ்வாகவோ பேசிக் கொள்ளாதீர்கள் ... உங்கள் designationஐ கேட்டால் மட்டும் குறிப்பிடுங்கள் ... ** ஒருவருடைய மதம்/இனம்/ஜாதி பற்றி கேட்கவோ பேசவோ செய்யாதீர்கள் ... ** உறவினர்களுக்கு சமைக்கும் முன் இந்த அய்ட்டம் உங்களுக்குப் பிடிக்குமா என்று கேட்டு விட்டு சமையுங்கள் ... ** ராத்திரி 8 மணிக்கு மேல் ஒருவருடைய வீட்டுக்கு செல்ல வேண்டாம் ... 9 மணிக்கு மேல் போன் செய்ய வேண்டாம் ... (unless they are your spouse / lovers ) நீங்கள் guest ஆக சென்றிருந்தால் காலை சீக்கிரம் எழுந்து கொள்ளுங்கள் ... 10 மணிவரை குறட்டை விட்டுத் தூங்க வேண்டாம் ... ** வெளியில் போகையில் சில்லறை கொண்டு செல்லுங்கள் ... 100 ரூபாய் பில்லுக்கு 2000 ரூபாய் நீட்டி சர்ப்ரைஸ் தராதீர்கள் ... அதே போல முதலிலேயே ரூபாயை எடுத்து பாக்கெட்டில் போட்டுக் கொள்ளுங்கள் ... சிலர் அவர்கள் முறை வந்த பின்பு தான் நிதானமாக ஹேண்ட் பேக்கை அகழ்வாராய்ச்சி செய்வார்கள் ... ** ஒருவரை 3 வினாடிகளுக்கு மேல் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பது offensive . (அந்த ஒருவர் உங்கள் காதலியாகவோ காதலனாகவோ இல்லாத பட்சத்தில்!). அதேபோல் ஒருவர் சமையல் செய்யும் போதோ, கோலம் போடும் போதோ , வரையும் போதோ பின்னால் நின்று கொண்டு உற்றுப் பார்த்துக்கொண்டே இருக்காதீர்கள் ... ** கைக்குழந்தைகளை தியேட்டர்-களுக்குக் கூட்டிப் போகாதீர்கள் ... ** பாடல்களை எப்போதும் இயர் போனிலேயே கேளுங்கள். சைனா செட்டை இயக்கி மற்றவர்களை கதிகலங்க வைக்காதீர்கள் ... ** ஒருவரின் உடல் அமைப்பைப் பற்றி comment செய்யாதீர்கள் ... ( என்ன சார்? தொப்பை பெருசாயிருச்சு போல ) ** டாய்லெட் யூரினலில் ஏற்கனவே ஒருவர் இருந்தால் அவர் பக்கத்தில் இருக்கும் யூரினலைத் தவிருங்கள் ... ** Service industry யில் இருப்பவர்கள் எல்லாரிடமும் அப்படித்தான் பேசுவார்கள். அதை சிக்னல் என்று எடுத்துக்கொண்டு வழியாதீர்கள் ... ** மற்றவரின் taste /preference களைக் குறை சொல்லாதீர்கள் ... ( இந்த புக்கெல்லாம் எப்படித்தான் படிக்கிறீர்களோ / இந்தப் பாட்டெல்லாம் எப்படி கேட்கறீங்களோ!) ** ஒருவர் போட்டோ பார்க்க போனை உங்களிடம் நீட்டினால், அந்த போட்டோவை மட்டும் பாருங்கள். ** அளவுக்கதிகமான பெர்ப்யூம் போட்டுகொண்டு போய் எல்லாருக்கும் தலைவலி வரவழைக்காதீர்கள் ... ** முகநூலில் நட்பு கிடைத்தவுடன் அவர் அனுமதி கேட்காமல் video Chat அல்லது அழைப்பு விடுக்காதீர்கள் ... ** குழந்தை இன்னும் இல்லை என்றால் அத்துடன் விட்டு விடுங்கள் ... ஏன் என்று என்று கேட்டு அவர்கள் மனதை காயப்படுத்தாதீர்கள் #நாகரிகங்கள் .... குறை/ நிறை அனைவரிடமும் உண்டு ... நம்மிடம் இருக்கும் தவறுகளை சரி செய்ய முயற்சி செய்வோம் ... -------------------------------------- M.T.M.WASEEM

அறிவியல்_உலகில்_முஸ்லிம்களின்_பங்கு


#அறிவியல்_உலகில்_முஸ்லிம்களின்_பங்கு - மிஸ்துரா லாவல்-அரோவோனா Misitura Lawal-Arowona காசநோயை எதிர்த்துப் போராடும் உலோகக் காசநோய் எதிர்ப்பு மருந்தை உருவாக்கியுள்ளார். - நைஜீரிய விஞ்ஞானி இந்தியாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் இந்த மருந்தை உருவாக்கியுள்ளார். - மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சோதனைகள் அவற்றின் செயல்திறனை உறுதிப்படுத்தியதாக கூறப்படுகிறது மற்றொரு நைஜீரியர் மருத்துவத் துறையில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். Misitura Lawal-Arowona ஆப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் காசநோயைக் குறைக்க உதவும் ஒரு தீர்வை வழங்கியுள்ளார். இந்தியாவின் பரோடா மகாராஜா சயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் அறிவியல் பீடத்தில் கூட்டு திட்டத்திற்கு உட்பட்ட மிஸ்துரா(Misitura Lawal-Arowona ), உலோகத்தால் இயக்கப்பட்ட காசநோய் எதிர்ப்பு (காசநோய்) மருந்தை வெற்றிகரமாக கொண்டு வந்ததாக சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது. கோபால்ட், தாமிரம், துத்தநாகம் மற்றும் இரும்பு போன்ற பல்வேறு உலோக வழித்தோன்றல்களைப் பயன்படுத்தி உலோக மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, சிப்ரோஃப்ளோக்சசின் எச்.சி.எல், ஆஃப்லோக்சசின், பைராசினமைடு மற்றும் மோக்ஸிஃப்ளோக்சசின் எச்.சி.எல் போன்ற மருந்துகள் அவரால் உருவாக்க முடிந்தது. m.t.m.waseem

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள்.

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள். பாருங்கள் பகிருங்கள்