Sunday, 9 September 2018


முஸ்லிம்களிடம் ஆயுதம் இருப்பதாக சொல்வதை நான் நம்பவில்லை. ஆயுதக் குழுக்களாக விடுதலைப் புலிகளே இருந்துள்ளனர். அமைச்சர்: சரத் பொன்சேகா.

Friday, 31 August 2018

உங்கள் *மெளலவி நண்பர்களுக்கு* அதிகம் பகிருங்கள்


*மெளலவி சான்றிதழைப்* பெற்ற 35 வயதுக்குட்பட்ட நபரா? *நீங்கள்* *ஆம். எனில்,* ௧ல்வி அமைச்சின் கீழ் நீங்களும் ஓர் *இஸ்லாம் பாட ஆசிரியராகலாம்* *௧ல்வித் தகைமைகளாக* +O/L தமிழ் அல்லது சிங்களத்தில் *S* சித்தி +A/L பரீட்சையில் 03 பாடங்களில் *S* சித்தி முடிவுத்திகதி:- *2018-09-28* *வயது எல்லை* 21-35 *உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்* மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள *F Maclanka* (Send to) *40404* விண்ணப்பபடிவங்களை *மெக் லங்கா - கல்வி - தொழில் - வழிகாட்டல் மற்றும் ஆலோசனை சேவையினூடாக* தபாலில் பெற்றுக் கொள்ளலாம். அனைத்து கல்வி வழிகாட்டல் சம்பந்தமான தகவல்களை தொடர்ச்சியாக பெற்றுக் கொள்ள *உங்கள் பெயர் மற்றும் ஊரைக் குறிப்பிட்டு* கீழுள்ள ஏதேனும் ஒரு இலக்கத்திற்கு *Add Maclanka* என *type* செய்து *whatsapp* ஊடாக *SMS* செய்யுங்கள். *விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ள* 077 180 2 103

முஸ்லிம்களிடம் ஆயுதங்களா..? முக்கிய தலைவர்களிடம் ஹிஸ்புல்லாஹ் விடுத்துள்ள கோரிக்கை


முஸ்லிம்களிடம் ஆயுதங்களா..? முக்கிய தலைவர்களிடம் ஹிஸ்புல்லாஹ் விடுத்துள்ள கோரிக்கை விடுதலைப் புலிகளிடம் இருந்த ஆயுதங்களை கொள்வனவு செய்து முஸ்லிம் இளைஞர்களுக்கு வழங்கியதாக தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை முற்றாக நிராகரித்த நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், இந்த விடயம் தொடர்பில் முறையான தீவிர விசாரணையொன்று மேற்கொள்ளுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார். இதேவேளை, இக்குற்றச்சாட்டின் பின்னணியில் தேச விரோத, இனவாத சக்திகள் செயற்படுவதாகவும் இதனால் தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோருக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் இன்று வியாழக்கிழமை அனுப்பி வைத்த விசேட கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:- ‘புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி 2018.08.18ஆம் திகதி கொழும்பில் நடத்தியிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அதன் தலைவர் இன்பராசா கந்தசாமி முன்வைத்த கருத்துக்கள் எவ்வித ஆதாரமும் அற்ற, பாராதூரமான போலிக் குற்றச்சாட்டாகும். விடுதலைப் புலிகளிடம் இருந்த 5ஆயிரத்துக்கும் அதிகமான ஆயுதங்களை நானும் அமைச்சர் ரிஷாட்; பதியூதீனும் பெற்று அதனை கிழக்கு மாகாணத்திலுள்ள மூதூர், கிண்ணியா, காத்தான்குடி உள்ளிட்ட முஸ்லிம் பிரதேசங்களில் உள்ள இளைஞர்களுக்கு வழங்கியதாக தெரிவித்திருந்தார். இந்த குற்றச்சாட்டை நான் முற்றாக நிராகரிப்பதோடு, ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இவ்வாறான போலிக் குற்றச்சாட்டொன்றை முன்வைத்தமை தொடர்பில் தீர விசாரணை நடத்தப்பட வேண்டும். அத்துடன், அவ்வாறு ஆயுதங்கள் இருக்குமாயின் அது எங்குள்ளது? விற்பனை செய்யப்பட்டுள்ளதாயின் அது யாருக்கு? எப்போது? எவ்வாறு? விற்பனை செய்யப்பட்டுள்ளது போன்ற தகவல்களை வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறான போலிக் குற்றச்சாட்டுக்கள் காரணமாக சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியில் எழுந்துள்ள சந்தேகங்கள் எனது கௌரவத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், எனது பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இக்குற்றச்சாட்டின் பின்னணியில் தேச விரோத, இனவாத சக்திகள் செயற்படலாம். நாட்டின் அமைதியை சீர்குழைத்து சாதாரண மக்களை குழப்பி நாட்டில் மீண்டுமொரு யுத்த சூழலை ஏற்படுத்துவதே குறித்த சக்திகளின் எதிர்பார்ப்பும் - முயற்சியுமாகும். இதேவேளை, புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சி முன்வைத்த போலிக் குற்றச்சாட்டினை பெரிதுபடுத்தும் வகையில் தேசிய சுதந்திர முன்னணி, ராவன்னா பலய, தேசிய ஒறுங்கமைப்பு ஒன்றியம் மற்றும் சிங்கள ராவய போன்ற அமைப்புக்களும் - கட்சிகளும் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்புக்களினாலும் எனது நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளது. எனவே, இது சம்பந்தமாக சட்டம் ஒழுங்கு அமைச்சின் ஊடாக முறையான தீவிர விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும். அத்துடன், இவ்வாறு போலிக் குற்றச்சாட்டு முன்வைத்த தரப்பை தீர விசாரிப்பதோடு, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான இவ்வாறான பிரச்சாரங்களை செய்வதற்கு பின்னணியில் இருந்து செயற்பட்டவர்கள் யார் ? என்பது தொடர்பிலும் விசாரணை மேற்கொள்வது அத்தியவசியமாகும். இது தொடர்பில் மேற்கொள்ளும் விசாரணைக்கு எனது பூரண ஒத்துழைப்பினை வழங்குவேன் - என குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, 29 August 2018

இன்று ஆகஸ்டு 29 இருபதாம் நூற்றாண்டின் மகத்தான பாப் இசைக் கலைஞர் என்று போற்றப்படும்....


இன்று ஆகஸ்டு 29 இருபதாம் நூற்றாண்டின் மகத்தான பாப் இசைக் கலைஞர் என்று போற்றப்படும்.... #மைக்கேல் ஜோசஃப் ஜாக்ஸன் பிறந்த தினம்.... *அமெரிக்காவின் இன்டியானா மாகாணம் கேரி (Gary) என்ற இடத்தில் ஆப்பிரிக்க-அமெரிக்க தம்பதியின் எட்டாவது குழந்தையாகப் பிறந்தார் (1958). *தந்தை ஒரு இரும்பு ஆலையில் கிரேன் ஆபரேட்டராக இருந்தார். ஒரு இசைக் கலைஞரும்கூட. *தன் சகோதரர்களுடன் பாண்டு வாத்தியக் குழுவில் இசைத்து வந்தார். 6 வயதில் ஆரம்பப் பள்ளியில் நடைபெற்ற பாடல் போட்டியில் சிறுவன் முதல் பரிசு பெற்றான். *இந்த வெற்றி, இசை ஆர்வத்தை அதிகரிக்க வைத்தது. அண்ணன்மார்கள் இணைந்து ஆரம்பித்த ஜாக்ஸன்-5 இசைக் குழுவில் அங்கம் வகித்தான். *உலகளவில் பிரபலமான அப்பல்லோ தியேட்டரில் ஜாக்ஸன்-5 குழுவின் முதல் ஆல்பத்தை 1982-ல், பிரபல பாடகி டயானா ராஸ் வெளியிட்டார். இந்தச் சிறுவனுடன் இணைந்து தொடர்ந்து பாடி வந்தார். இதனால், உலகம் முழுவதும் இவனது புகழ் பரவியது. 9 வயதிலேயே நட்சத்திர அந்தஸ்து வசப்பட்டது. 24-ம் வயதில் இவர் வெளியிட்ட ‘த்ரில்லர்’ இசை ஆல்பம்தான் இன்றுவரை உலகிலேயே மிக அதிகமாக விற்பனையான இசை ஆல்பம். *இந்த வெற்றி கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம் பிடித்தது. *பல கிராமி விருதுகளையும், அமெரிக்க இசை விருதுகளையும் வென்றுள்ளார். *கிராமி வாழ்நாள் சாதனையாளர் விருதும் பெற்றுள்ளார். *இவரது ‘பிளாக் அன்ட் ஒயிட்’ என்ற வீடியோ ஒரே நேரத்தில் 27 நாடுகளில் ஒளிபரப்பப்பட்டது. *50 கோடி ரசிகர்கள் இதைக் கண்டு ரசித்தனர். *இன்றுவரை இவ்வளவு அதிகமான ரசிகர்கள் பார்த்த ஒரே நிகழ்ச்சி இதுதான். *இவருடைய மொத்த ஆல்பங்களும் இதுவரை ஏறக்குறைய 20 கோடி விற்பனையாகி உள்ளன. *த்ரில்லர், பேட், டேஞ்சரஸ், பில்லி ஜீன் ஆகிய ஆல்பங்கள் இன்றும் இளைஞர்களை மெய்மறக்க வைக்கும் இசைப் பொக்கிஷங்கள். *நெற்றியின் முன் சரிந்து விழும் முடிக்கற்றையோடு மைக்கேல் ஜாக்ஸன் மேடையில் தோன்றிய உடனேயே ரசிகர்கள் எழுப்பும் ஆரவார முழக்கம், விண்ணைப் பிளக்கும். *பாடல் எழுதி, அதற்கு இசையமைத்து, பாடலுக்கு ஏற்றாற்போல நடனம் ஆடுவது, இடையிடையே நடிப்பு என அனைத்தும் கலந்த ‘பாப்’ நடனத்தைப் படைத்த அபூர்வ இசை மேதை, இவர். *அமெரிக்காவில் மக்கள் செல்வாக்குப் பெற்ற முதல் கருப்பின இசைக் கலைஞர். இவர் படைத்த ரோபாட், மூன்வாக் போன்ற நடன வகைகள் மிகவும் பிரபலம். *இவர் குறித்த பல சர்ச்சைகள் வலம் வந்தாலும், எதுவுமே இவரது புகழை மங்கச் செய்ததில்லை. *இன்றளவும் பாப் இசையுலகின் ஈடுஇணையற்ற கலைஞராகப் போற்றப்படும் மைக்கேல் ஜாக்சன், உடல் நலம் பாதிக்கப்பட்டு 2009-ம் ஆண்டில் 50-வது வயதில் மறைந்தார்.

●இது உலமாக்களின் எச்சரிக்கை ●


*(Miu)*எனும் சுருக்க குறியீடு இலங்கையில் அமைந்துள்ள ஒரு {சியா }அமைப்புடைய பல்கலைக்கழகத்துடைய குறியீடாகும் இந்த குறியீடு இடப்பட்டு வரும் அனைத்து கல்வி சம்பந்தப்பட்ட அல்லது வேறு மார்க்க சம்பந்தப்பட்ட விடயங்கள் இன்னும் போட்டி பரிட்சைகள் அனைத்தையும் தவிரிந்து இருங்கள் ●இது உலமாக்களின் எச்சரிக்கை ●

யார் இந்த சகோதரி ,அடையாளம் காண உதவுங்கள்.அதிகம் செயர் செய்யுங்கள்


யார் இந்த சகோதரி ,அடையாளம் காண உதவுங்கள்.அதிகம் செயர் செய்யுங்கள் இன்று குருனாகல் பகுதியில் புத்திசுயாதீனமற்றவராக அலைந்த இச் சகோதரியை, முஸ்லீம் என அடையாளங்கண்ட சிங்கள சகோதரர் ஒருவர் தனது ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு குருனாகல் முஸ்லீம் பகுதியில் இறக்கிவிட்டு, அங்குள்ளவர்களிடம் "இப் பெண் பேச முடியாது குருனாகல் பஸ் நிலையம் பக்கம் அலைந்து திரிந்ததால், பாதுகாப்பு கருதி ஏற்றி வந்து தந்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டு சென்றிருக்கிறார். அதன் பின்னர் இப் பெண்ணை கரீம் என்ற சகோதரர் ஒருவர் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று, நீங்க யார்? எங்கிருந்து வருகிறீர்கள் என விசாரித்தபோது, #சாய்ந்தமருது, #தில்லையடி என்ற இருவார்த்தைகளை தவிர எதுவும் பேசுவதாக இல்லையாம் இப் பெண்ணிடம் பஸ்ஸில் பயணித்த டிகட் மட்டுமே இருந்ததாம். அதனையும் பதிவிறக்கம் செய்துள்ளேன். தயவுசெய்து இப் பெண்ணின் உறவினர்களிடம் இச் செய்தி சென்றடைய உதவுங்கள். சகோதரர் கரீமின் தொலைபேசி இலக்கம். Careem Kurunagala 0777157605 இப் பெண்ணை பாதுகாப்பாக முஸ்லீம் பகுதிக்குள் கொண்டு சென்று கையளித்த சிங்கள சகோதரருக்கு எனது சமூகம் சார்பாக பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். (இது 29/08/2018 இரவு 8.30 க்கு முகநூல்வாயிலாக கிடைத்த செய்தி. பிரதி செய்து பகிர்கிறேன்)

நபி (ஸல்) அவர்கள் பற்றிய சில........


நபி ஸல் 1. நபி (ஸல்) அவர்கள் பிறப்பு : 20-04-570 திங்கட்கழமை, ரபீஉல் அவ்வல் மாதம் பிறை 12 2. பிறந்த இடம் : திரு மக்கா 3. பெற்றோர் : அப்துல்லாஹ் - அன்னை ஆமீனா 4. பாட்டானார் : அப்துல் முத்தலீப் 5. தந்தை மரணம் : நபி (ஸல்) அவர்கள் கருவில் இருக்கும் போது 6. தாயார் மரணம் : நபி (ஸல்) அவர்களின் ஆறு வயதில் 7. பாட்டனார் மரணம் : நபி (ஸல்) அவர்களின் எட்டு வயதில 8. வளர்ப்பு : பாட்டனாருக்குப் பின் பெரிய தந்தை அபூதாலிப் 9. செவிலித் தாய்மார்கள் : ஹள்ரத் துவைஃபா (ரளி) என்ற அடிமைப் பெண் பின்பு ஹள்ரத் ஹலிமா (ரளி) அவர்கள் 10. பட்டப் பெயர்கள் : அல் அமீன் (நம்பிக்கைக்கு உரியவர்), அஸ்ஸாதிக் (உண்மையானவர்) 11. முதல் வணிகம் : அன்னை கதீஜா (ரளி) அவர்களின் வணிகக் குழுவில் சேர்ந்து சிரியா தேசம் பயணம் 12. முதல் திருமணம் : அன்னை கதீஜா (ரளி) அவர்களுடன் 13. மஹர் தொகை : 500 திர்ஹங்கள் 14. திருமணத்தை நடத்தி வைத்தவர் : அபூதாலிப் அவர்கள் 15. நபி (ஸல்) அவர்கள் மனைவியர் : அன்னை கதீஜா (ரளி), அன்னை ஸவ்தா (ரளி), அன்னை ஆயிஷா (ரளி), அன்னை ஹஃப்ஸா (ரளி), அன்னை ஜைனப் பின்த் குஜாமா (ரளி), அன்னை உம்முஸல்மா (ரளி), அன்னை ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரளி), அன்னை ஜுவைரிய்யா (ரளி), அன்னை உம்மு ஹபீபா, அன்னை ஸஃபிய்யா (ரளி), அன்னை மைமூனா (ரளி), அன்னை மரியத்துல் கிப்தியா (ரளி) 16. ஆண் மக்கள் : காஸிம் (ரளி) அப்துல்லாஹ் (ரளி), இப்றாஹீம் (ரளி) இவர்கள் குழந்தைப் பருவத்திலேயே மௌத்தாகிவிட்டார்கள் 17. பெண் மக்கள் : ஜைனப் (ரளி), ருகையா (ரளி), உம்முகுல்தூம் (ரளி), ஃபாத்திமா (ரளி) 18. பேரர்கள் : அலீ (ரளி), உமாமா (ரளி), முஹ்சின் (ரளி), ஹசன் (ரளி) ஹுசைன் (ரளி) 19. ஊழியர்கள் : பிலால் (ரளி), அனஸ் (ரளி), உம்மு அய்மன் மாரியா (ரளி) 20. அடிமை : ஜைதிப்னு ஹாரிதா (ரளி) 21. பெருமானார் (ஸல்) அவர்களின் தகப்பனார் உடன் பிறந்தோர் : மொத்தம் 12 பேர். அவர்களில் இஸ்லாத்தை ஏற்றவர்கள் ஹள்ரத் ஹம்ஜா (ரளி), ஹள்ரத் அப்பாஸ் (ரளி) 22. பெருமானார் (ஸல்) அவர்களின் தாய்; உடன் பிறந்தோர் : மொத்தம் 6 பேர். அவர்களில் இஸ்லாத்தை ஏற்றவர்கள் ஹள்ரத் அம்மாரா (ரளி), ஹள்ரத் ஆத்திகா (ரளி), ஹள்ரத் ஸஃபிய்யா (ரளி) 23. நபிப் பட்டம் கிடைத்தது : 40 – ம் வயதில் (கி.பி. 610) 24. நபிப் பட்டம் கிடைத்த இடம் : ஹிரா குகை 25. முதல் வஹீ : 'இக்ரஃ பிஸ்மி' என்ற வசனம் 26. முதல் முதலாக ஈமான் கொண்டவர்கள் : பெண்களில் - ஹள்ரத் அன்னை கதீஜா (ரளி), சிறுவர்களில் - ஹள்ரத் அலீ (ரளி), ஆண்களில் ஹள்ரத் அபூபக்கர் (ரளி), அடிமைகளில் - ஹள்ரத் பிலால் (ரளி) 27. முஸ்லிம்களின் முதல் ஹிஜ்ரத் : அபிசினியாவிற்கு, நபித்துவம் 5 – ம் ஆண்டில், மன்னர் நஜ்ஜாஸி ஆட்சியில் 28. முதல் ஹிஜ்ரத் செய்தவர்கள் : நபி (ஸல்) அவர்களின் மகள் ருகையா (ரளி), மருமகன் ஹள்ரத் உஸ்மான் (ரளி) மற்றும் ஆண்கள் 11 பேர், பெண்கள் 4 பேர் 29. தாயிஃப் நகரில் தவ்ஹீத் : நபித்துவ 10 – ம் ஆண்டில், துணையாகச் சென்றவர் ஹள்ரத் ஜைது (ரளி) 30. மக்காவில் தீனழைப்பு : 13 ஆண்டுகள் 31. மதீனாவிற்கு ஹிஜ்ரத் : நபித்துவ 14 – ம் ஆண்டில் 32. உடன் சென்றவர் : ஹள்ரத் அபூபக்கர் (ரளி) 33. ஹிஜ்ரத்தின் போது மறைந்திருந்த குகை : தௌர் 34. மதீனா சேர்ந்த நாள் : ஈஸவி 25-09-622 - ல் 35. பத்ரு யுத்தம் : ஹிஜ்ரி 2, ரமளான் மாதம் 36. தொழுகைக்கு பாங்கு அறிமுகப்படுத்தப்பட்டது : ஹிஜ்ரி - 2 ல் 37. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் கஃபா கிப்லாவாக ஆக்கப்பட்டது : ஹிஜ்ரி - 2 ல 38. உஹது யுத்தம் : ஹிஜ்ரி - 3 ல் 39. அகழ் யுத்தம் : ஹிஜ்ரி - 5 ல் 40. ஹுதைபிய்யா உடன்படிக்கை : ஹிஜ்ரி - 6 ல் 41. மது ஹராமாக்கப்பட்டது : ஹிஜ்ரி - 6 ல் 42. நபி (ஸல்) அவர்களின் புனித பல் ஷஹிதான யுத்தம் : உஹது யுத்தம் 43. நபி (ஸல்) அவர்களின் காலத்து போர்களில் சில : பனூ முஸ்தலிக், ஹுனைன், தாயிப், பனூ கைனூக், பனூ நஸீர், பனூ குறைளா, கைபர், மூத்தா, தபூக் யுத்தங்கள் 44. மக்கா மீது படையெடுப்பு : ஹிஜ்ரி - 8 ல் 45. மிஃராஜ் : நபித்துவ 12 – ம் ஆண்டில, ரஜப் பிறை 27 திங்கட் கிழமை 46. தொழுகை கடமையாக்கப்பட்டது : மிஃராஜில் 47. ஹஜ் கடமை : ஹிஜ்ரி - 9 ல் 48. நபி (ஸல்) அவர்கள் ஹஜ் செய்தது : ஹிஜ்ரி – 10 49. நபி (ஸல்) அவர்களின் தலையிலும் தாடியிலும் இருந்த மொத்த நரை முடிகள் : 17 50. நபி (ஸல்) அவர்கள் செய்த இறுதிப் பிரசங்கம் : ஹஜ்ஜத்துல் விதாவில் 51. இறுதி வஹி : 110 – ம் அத்தியாயம் 52. நபி (ஸல்) அவர்கள் உலகைப் பிரிந்த நாள் : ஹிஜ்ரி 10, ரபீஉல் அவ்வல் பிறை 12, திங்கட்கிழமை 53. நபி (ஸல்) அவர்களின் புனித உடலை கழுவ நீர் எடுக்கப்பட்ட கிணறு : அரீஸ் கிணறு 54. நீராட்டியவர்கள் : ஹள்ரத் அலீ (ரளி), ஹள்ரத் அப்பாஸ் (ரளி), ஹள்ரத் பழ்ல் (ரளி), ஹள்ரத் குஸீ (ரளி), ஹள்ரத் உஸாமா (ரளி), ஹள்ரத் ஷக்ரான் (ரளி), ஹள்ரத் உஸ் இப்னு கௌல் அன்சாரி (ரளி) 55. ஜனாஸா தொழுகை : 72

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள்.

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள். பாருங்கள் பகிருங்கள்