Friday, 6 October 2017

Waseemlanka.blogspot.com

மாஷா அல்லாஹ்............ அல்லாஹூ அக்பா்............ ரசியாவில் திறக்கப்பட்ட புது பள்ளிவாசல் .. தொழுகையில் கலந்து கொண்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை சுமார் ஒன்றரை லட்சம்.. ரசியாவின் தலைநகர் மாஸ்கோவின் கதீட்ரலில் நேற்று புதிதாக திறக்கப்பட்ட பள்ளிவாசலில் ஈத் தொழுகையில் சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.. சுமார் 17 கோடி டாலர் செலவில் 10 ஆண்டு கடின உழைப்பில் கட்டப்பட்ட இப்பள்ளிவாசல் ஐரோப்பாவின் மிகப்பெரிய பள்ளிவாசல்களில் ஓன்று என்பது குறிப்பிடத்தக்கது..இந்த பள்ளிவாசலின் உள்ளரங்கத்தில் சுமார் 10000 ஆயிரம் பேர் பிராத்தனை செய்யும் வண்ணம் கட்டுப்பட்டுள்ளது.. நேற்றைய பள்ளிவாசல் திறப்பு விழாவில் ரசிய அதிபர் புதின் , துருக்கி அதிபர் தய்யிப் ஏற்தொகன் உள்ளிட்ட பல நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர்.,. ரசியாவில் சுமார் இரண்டரை கோடி முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.. ரசியாவின் இரண்டாவது பெரிய மார்க்கம் இஸ்லாம் ஆகும்.. மேலும் தலைநகர் மாஸ்கோவில் மட்டும் சுமார் 20 லட்சம் முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர்.. இருந்தும் கூட அங்கு சுமார் 6 பெரிய பள்ளிவாசல்கள் மட்டுமே உள்ளது.. காரணம் கடந்த கம்யுனிச ஆட்சியாகும்.. தற்பொழுது ரசியாவில் கம்யுனிச ஆட்சி வீழ்ந்து விட்டதால் அங்கு மதங்களுக்கு விதிக்கப்பட்ட தடைகள் நீக்கப்பட்டு அங்கு மத சுதந்திரம் அளிக்கப்பட்டு வருகிறது.. இருந்தும் கூட அங்கு கிறித்துவ மதத்துக்கு மட்டுமே சுதந்திரம் கொடுக்கப்படுவதாகவும் இஸ்லாம் முந்தய கம்யுனிச ஆட்சியை போல தற்பொழுதும் நசுக்கப்படுவதாகும் குற்றசாட்டுகள் உள்ளனர். மேலும் செசன்யா பிரதேசத்தில் ரசிய அரசு நிகழ்த்தி வரும் இனப்படுகொலைகளுக்கு எதிரான கண்டன குரல்களும் முஸ்லிம் சமூகத்தில் ஓங்கி ஒலிப்பதாலும் , வருங்காலங்களில் முஸ்லிம் இளைனர்களின் மக்கள் தொகை ரசியாவில் அதிக அளவில் இருக்கும் என்ற கணக்கிடப்படுவதாலும் , ரசியாவிற்கு எதிரான தடைகளை ஐரோப்பிய நாடுகள் வலுக்கட்டாயமாக திணித்து வருவதாலும் முஸ்லிம் நாடுகளுடனான ரசியா தனது உறவை புதுப்பிக்கும் முயற்சியாக இந்நிகழ்வு பார்க்கப்படுகிறது.....

https://Waseemlanka.blogspot.com

*5 ஆம் ஆண்டுப் புலமைப் பரிசில் பரீட்சைப்  பெறுபேறுகளும்  சிறுவர்களின் மனநலமும்.*

        இம்முறை  5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் அதிக புள்ளிகளை எடுத்த சிறுவர்களைப் பாராட்டி உற்சாகப்படுத்துவதும் அவர்களை வாழ்த்துவதும்  நல்ல விடயம்.

        ஆனால் அப்பரீட்சையில் உரிய புள்ளிகளைப் பெறாத குழந்தைகளின் மனநிலைகள் பாதிக்கப்படாமல் நடந்து கொள்ள வேண்டியது  அவசியம்.

        புலமைப் பரிசில் பரீட்சையில் தேர்ச்சி  பெற்ற சிறுவர்கள் மட்டுமே திறமையானவர்கள்; மற்றைய சிறார்கள் திறமை  குறைந்தவர்கள் என்று எண்ணுவது தவறானது. இன்று உயர் பதவிகளிலும் தொழில் துறைகளிலும்  சிறந்து விளங்கும் பலர் புலமைப் பரிசில் பரீட்சையில் தேர்ச்சி  பெற்றவர்கள் அல்லர்.

        5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை ஒரு குழந்தையின் திறமையை மதிப்பிடுவதற்கான சரியான அளவுகோலல்ல என்பதை பல கல்வியியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை தேவையற்றது என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களும் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.

        எனவே சிறுவர்களின் குழந்தைப் பருவத்தைக் கொள்ளையடித்து அவர்களை இயந்திர உலகிற்குத் தயார்படுத்தும் இப்பரீட்சை முறையினை வைத்து குழந்தைகளின் திறமையை மதிப்பிடுவது தவறு என்பதை ஒவ்வொரு பெற்றோரும் உணர வேண்டும்.

        சித்தியடையாத  பிஞ்சுக் குழந்தைகளின் உள்ளங்களில் விரக்தி எனும் நஞ்சை விதைக்காமல் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வோம். சித்தியடைந்த பிள்ளைகளை பாராட்டும் அவசரத்தில்  குறிப்பிட்ட புள்ளிகளைப் பெறத்தவறிய பிள்ளைகளுக்கு ஆறுதல் கூறி உட்சாகப் படுத்த மறக்க வேண்டாம்.

        இறைவன் ஒவ்வொரு குழந்தைக்கும் எதோ ஒரு திறமையைக் கொடுத்துள்ளான். அவர்களின் திறமைகளை இனங்கண்டு ஊக்கமளித்து உச்சகப் படுத்தினால் அவர்கள் இமாலயச் சாதனைகளை புரிவதை நீங்கள் காண்பீர்கள்.

        அதற்கு மாற்றமாக தனது குழந்தை புலமைப் பரிசில் பரீட்சையில் உரிய புள்ளிகளைப் பெறவில்லை என்பதற்காக அக்குழந்தையை தண்டித்து அல்லது கேலிசெய்து வளரும் பயிரை முளையிலேயே கிள்ளி எறியும் தவறை நாம் செய்ய வேண்டாம்.

        குழந்தைகள் மென்மையான உள்ளம் கொண்டவர்கள். அன்பையும் ஆதரவையும் உற்சாகப்படுத்தலையும் விரும்புபவர்கள். இப்பரீட்சையில் உரிய புள்ளிகள் பெறவில்லை என்பதற்காக அவர்களை ஏளனப்படுத்துவதும்,தள்ளிவைப்பதும், புறக்கணிப்பதும் அவர்களை உள ரீதியாகப் பாதிக்கச் செய்யும். அப்பாதிப்பிலிருந்து விடுபட அவர்களுக்கு நீண்ட காலம் எடுக்கும்,சிலபோது அதன் பாதிப்பு அவர்களில் தொடர்ந்தும் இருக்கக் கூடும்.

          *குழந்தைகளை ஊக்கப்படுத்துங்கள்; உற்சாகப்படுத்துங்கள்; தன்நம்பிக்கையை வளரச் செய்யுங்கள். மேற்கு நாடுகளிலும் ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளிலும் இதனையே அங்குள்ள பெற்றோர்களும் ஆசிரியர்களும் செய்கின்றனர்.*

அதன் விளைவாக ஒவ்வொரு பிரசையும் நாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்றும் திறனுடையவர்களாக உருவாக்கப்படுகின்றனர்.

        எனவே இவ்விடயத்தை பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூகத்தவர்கள் கவனத்தில் எடுக்க வேண்டும்.
WWW.FACEBOOK.COM/Al.muhmin.9


Saturday, 9 September 2017

Waseemlanka.blogspot.com


முடி கண்ணாபின்னாவென கொட்டுகிறதா?… வாரம் ஒருமுறை முட்டையை இப்படி பயன்படுத்துங்க…

முடி கண்ணாபின்னாவென கொட்டுகிறதா?… வாரம் ஒருமுறை முட்டையை இப்படி பயன்படுத்துங்க…
குட்டையான கூந்தலாக இருந்தாலும் அது அடர்த்தியாக இருந்தால் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். சிலருக்கு அடர்த்தியான கூந்தல் உதிர்ந்து மெலிதாகிவிடும். சிலருக்கு இயற்கையாகவே கூந்தல் எலிவால் போல மெலிதாக இருக்கும்.

இந்த இரண்டு வகையினருமே கூந்தலை சாியாகப் பராமரித்து வந்தால் மிக அடர்த்தியான பளபளக்கும் கூந்தலைப் பெற்றுவிட முடியும். அதற்கு சில எளிய வழிமுறைகளை வீட்டிலேயே கையாளலாம்.

கூந்தலை அடர்த்தியாக வளரச் செய்வதில் முட்டைக்கு முக்கியப் பங்குண்டு. வாரத்துக்கு ஒரு முறை முட்டையை தலைக்கு உபயோகித்துப் பாருங்கள். அதனால் உண்டாகும் மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.

எண்ணெய் பசையுடைய கூந்தல், வறண்ட கூந்தல் என்ற இரண்டு வகையுண்டு. முட்டை இரண்டு வகையான கூந்தலுக்கும் ஏற்றது தான். ஆனால் அவற்றைப் பயன்படுத்தும் முறையில் தான் சிறிது வேறுபாடு உண்டு.

எண்ணெய் கூந்தலில் பயன்படுத்தும் முறை

தலையில் எண்ணெய் அதிகமாக சுரந்தால் கூந்தல் பலம் இழந்து உதிர ஆரம்பிக்கும். அதற்கு முட்டையை கீழ்கண்ட முறையில் பயன்படுத்தலாம்.

இரண்டு முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்துக் கொண்டு அதனுடன் 1 கப் ஆலிவ் ஆயிலையும் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறினையும் கலந்து தலையில் தடவ வேண்டும். அதை நன்கு ஊறவைத்து ஒரு மணி நேரம் கழித்து தலையை அலச வேண்டும். இப்படி வாரத்துக்கு ஒரு முறை செய்து வந்தாலே முடி உதிர்தல் குறைந்து கூந்தல் அடர்த்தியாக வளரும்.

வறண்ட கூந்தலில் உபயோகிக்கும் முறை

வறட்சியான கூந்தலில் மிக எளிமையாக பொடுகு உண்டாகும். அது தலையில் அரிப்பை உண்டாக்கும். அதனாலுயே அதிக முடி உதிர்தல் உண்டாகும்.

இரண்டு முட்டையின் வெள்ளைக்கருவோடு கால் கப் ஆலிவ் எண்ணெய், கால் கப் விளக்கெண்ணெய், அரை கப் தேங்காய் எண்ணெய் மற்றும் 2 ஸ்பூன் தேன் கலந்து தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.அதன்பின் சீயக்காய் அல்லது நல்ல ஹெர்பல் ஷாம்பு கொண்டு தலையை அலச வேண்டும்.
வாரம் ஒரு முறை இதைத்தொடர்ந்து செய்து வருவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.....
S H A R E 

Wednesday, 6 September 2017

Waseemlanka.blogspot.com

இலங்கையில் அதிக பெறுமதி கொண்ட வாகனங்களை வைத்திருக்கும் நபர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. நீர்கொழும்பைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகரான துனேஷ் டீ சில்வா இலங்கையிலேயே மிகவும் பெறுமதி வாய்ந்த வாகனங்களை தம் வசம் வைத்துள்ளார்.

அவர் வைத்திருக்கும் வாகனங்களின் பெறுமதி இலங்கை மதிப்பில் 100 கோடி ரூபாவிற்கு மேல் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
நீர்கொழும்பு Awenra கார்டன், ஹிக்கடுவ Awenra பீச், வென்னப்புவ Awenra ஹொட்டல் என்பவற்றின் உரிமையாளரே இவராவார் . உலகில் காணப்படும் அதிநவீன வாகனங்களுடன் ஒப்பிடக்கூடிய பல வாகனங்கள் அவரிடம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் அவரிடம் உள்ள வாகனங்கள் போல இலங்கையில் எந்தவொரு வர்த்தகரிடமும் வாகனங்கள் இல்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.
தனது தந்தையின் வாகனங்களை ஓட்டி அதிசொகுசு வாழ்க்கை வாழும் அவரது மூத்த மகனான ஷகித் டீ சில்வா, அண்மைக்காலமாக இணைய வலைத்தளங்களில் மிகவும் பிரபலமடைந்து வருபவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Waseemlanka.blogspot.com

Sir S.jayabalan

தமிழ் மக்கள் மீதிருந்த கோபம், முஸ்லிம்கள் மீது திரும்பியுள்ளது - ஜெயபாலன்
சிங்களத்தில்: ரேகா நிலுக் ஷி ஹேரத்
தமிழில்: ஏ.எல்.எம்.சத்தார்.
வ.ஐ.ச. ஜெயபாலன் சர்வதேச தமிழ் சமூகத்தினரால் நன்கு மதிக்கப்படு­பவர். கவிஞர், நாவலாசிரியர், அர­சியல் செயற்பாட்டாளர், அரசியல் ஆலோசகர் என்றெல்லாம் அறியப்பட்­டவர். அண்மையில் சினிமா நட்சத்திர­மாகவும் தம்மை அடையாளப்படுத்­தியுள்ளார். சர்வதேச சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இவர் ஓர் இலங்கையர் என்­பதும் குறிப்பிடத்தக்கது. யாழ் குடா நாட்டின் உடுவில் பிரதே­சத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர், யாழ். பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க கௌரவ தலைவராகவும் விளங்­கியுள்ளார். இலங்கையில் யுத்த சூழ்நிலையின் போது, புலம் பெயர்ந்து, நோர்வே நாட்டின் பிர­ஜாவுரிமைப் பெற்று அங்கும் இந்­தியாவிலுமாக வாழ்ந்து வரு­கிறார். சிங்கள மக்கள் இவரை ஒரு தேசியவாதியாகக் கருதி வருகின்­றனர். தமிழ் பகுதிகளில் சிறுபான்­மையினராக வாழும் சிங்கள, முஸ்­லிம்களுக்கெதிராக அன்று புலி­களால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்­கைகளைக் கண்டித்து இவர் குரல் கொடுத்தமையாலே சிங்கள மக்­களின் அபிமானத்திற்குரியவராக விளங்குகிறார்.
இவருடன் ராவய வார இதழ் மேற்­கொண்ட நேர்காணலின் தமி­ழாக்கத்தின் சில பகுதிகள் இங்கு தரப்படுகிறது.
கே:முஸ்லிம்கள் மீதான எதிர்ப்பு குறித்து நீங்கள் என்ன நினைக்கி­றீர்கள்?
நான் முஸ்லிம் சமூகம் சார்பாக பேசிவருவது குறித்து முஸ்லிம் சகோதரர்கள் நன்கறிவார்கள். வட புலத்திலிருந்து அன்று முஸ்லிம்­களை வெளியேற்றுவதற்கு பிரபா­கரன் தீர்மானம் எடுத்தபோது, அதற்கு நான் கடும் எதிர்ப்பை வெளியிட்டி­ருந்தேன். நான் முஸ்லிம் மக்களுக்­காக கவிதைகள் கூட வடித்திருக்­கிறேன். இதேநேரம் நான் சிங்கள மக்­களிடம் முஸ்லிம்கள் உங்களுடன் ஒன்­றுபட்டு செயலாற்றியதொரு சமூக­மல்லவா? என்று கேட்க விரும்பு­கிறேன். வரலாற்று நெடுகிலும் இடம்பெற்ற இனப்பூசல்களின் போது, முஸ்லிம்கள் சிங்களவர்களுடன் தான் இருந்தார்கள். அதனால் சிங்களவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக செயல்ப­டுவதற்கு எந்த வகையிலும் நியாய­மில்லை. எனவே எந்தப் பிரச்சினை­யானாலும் சரி சிங்களவர்கள் முஸ்­லிம்களுடன் பேசித் தீர்த்துக் கொள்­வதே சரியான வழியாகும்.
கே: சிங்களத் தலைவர்கள் இப்போது செய்ய வேண்டியதென்ன?
இன்றுள்ள பரம்பரையில் தமிழ், சிங்­களம், முஸ்லிம் மக்களுக்குள்ள பிரச்­சினைகளுக்குத் தீர்வு காணக்கூ­டிய இறுதியான ஒரே சந்தர்ப்பம் புதிய அரசியல் யாப்பேயாகும். அர­சியல் மறுசீரமைப்பொன்று உரு­வாக்கம் பெறும் பட்சத்தில் தமிழ் புலம் பெயர்ந்த சமூகமும், சர்வதேச தமிழ் மக்களும் இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பக் கூடிய அர்ப்பணிப்புச் செய்வார்கள். சென்னை இலங்கைக்கு பரந்தளவிலான சந்தை வசதியொன்றை உருவாக்கிக் கொடுக்கும். அப்போதுதான் நாம் யுத்தத்தை வென்றெடுத்தோம் என்று சிங்கள மக்களால் மார்பு தட்டிக்கொள்ள முடியும். இந்தப் பொருளாதார விருத்தி உண்மையிலேயே சமாதான காலத்தில் முன்னெடுக்கப்பட்டதொன்றாகும். இலங்கையின் ஏராளமான உற்பத்திப் பொருட்கள் சர்வதேசமெங்கும் சந்தைப்படுத்தப்பட்டன.
டெல்மா தேயிலை உட்பட பெயர்போன வர்த்தக நுகர்வுப் பொருட்கள் பெருமளவில் வெளிநாடுகளில் விற்பனையான காலமும் அதுவே. யுத்தம் மோசமான கட்டத்தையடைந்தபோது, தமிழ் செயற்பாட்டாளர்கள் சர்வதேச சந்தையில் இலங்கையின் உற்பத்திகளைப் பகிஷ்கரித்தனர். கடைகளில் இலங்கையின் உற்பத்திப் பொருட்கள் விற்பனை செய்வதையும் தடுத்தனர். ஒரு சில கடைகளில் காணப்பட்ட இலங்கைப் பொருட்களை அழித்து நாசம் செய்தனர்.
அடுத்து சிங்களவர்களின் தேசாபிமானத்தை நான் வரவேற்கிறேன். அவ்வாறு நடந்து கொள்வதில் தவறில்லை. அடுத்து பெரும்பான்மையினர் என்ற வகையில் சிங்களவர்களுக்கு வெற்றி கிடைக்க வேண்டும். அதற்கவர்கள் செய்ய வேண்டியதென்ன? உலகமயமாக்கலை வெற்றி கொள்வதிலேயே உண்மையான வெற்றி தங்கியிருக்கிறது. இப்போது அவர்களின் இனப்பற்றிலே பிரச்சினையொன்றிருக்கிறது. அவர்கள் உலகமயமாக்கலைப் புரிந்து கொள்ள வேண்டும்.
முந்திக்கொண்டு போகும் ஓர் இனமாக மாறக்கூடாது. அத்துடன் தமது யுத்த வெற்றியில் சிறைக் கைதிகளாக சிங்களவர்கள் ஆளாவதும் நல்லதல்ல. எமது சந்ததிகளான தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் சமஷ்டி முறையொன்று குறித்து கலந்துரையாடுவதற்குத் தயாராகவுள்ளனர். தவறும் பட்சத்தில் அடுத்துவரக்கூடிய சந்தயினர் சர்வதேச சமூகத்துடனோ அல்லது இந்தியாவுடனோ இணைந்து சமஷ்டி முறையொன்றை ஏற்படுத்தும் கலந்துரையாடலுக்கு தயாராவது தவிர்க்க முடியாது   போகும்.

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள்.

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள். பாருங்கள் பகிருங்கள்