Saturday, 20 July 2019

கினிகத்தேன நகரில்


கினிகத்தேன நகரில் மண்சரிவில் சிக்கிய வர்த்தகர் ஒருவர் உயிரிழப்பு, பத்துக்கு மேற்பட்ட கடைகள் சரிவு. -பொலிஸ்

Monday, 15 July 2019

இஸ்லாத்தை விட்டு விட்டு தங்கள் காரியங்களில் மேற்கத்திய கலாசாரத்தை அனுவனுவாக பின் தொடர்வோர் பலர் நம்மில் இருக்க..


இஸ்லாத்தை விட்டு விட்டு தங்கள் காரியங்களில் மேற்கத்திய கலாசாரத்தை அனுவனுவாக பின் தொடர்வோர் பலர் நம்மில் இருக்க.. மேற்கத்திய மண்ணின் வெற்றிக்காக விளையாடிய போதும் இஸ்லாமிய வரம்புகளை மீறாது இஸ்லாமியன் என்ற அடையாளத்தை தனித்துவமாக காட்டிய வீரர்களே இவர்கள்.. நிர்பந்தம் என்ற பெயரில் அடுத்தவர்களை திருப்திபடுத்த இஸ்லாமிய பெயரில் தடைகளை மீறி செயல்படுவோருக்கு இவர்களில் சிறந்த முன்னுதாரணம் உண்டு #முயீன்_அலி #ஆதில்_ரஷீத் இன்திகாப் உமரீ

Saturday, 6 July 2019

வளைந்த கால்கள்


வளைந்த கால்கள் “டொக்டர், புள்ளட கால் உள்நோக்கி வளைஞ்சி” “எத்தனை வயது” “இப்பதான் ஒரு வயது” “எத்தனை வயதுல நடக்க தொடங்கின?” “10மாசத்திலயே நடக்க தொடங்கிட்டாரு” “கொஞ்ச நாள் பார்ப்பம்” ............................................. எங்களுடைய உடல் எடையானது கால்களினூடாக பூமிக்கு சீராக கடத்தப்பட, கால்கள் நேராக இருப்பது அவசியமாகும். குழந்தை பிறக்கும் போது, இரண்டு கால்களும் முழங்காலில் சிறிது உள்நோக்கி வளைந்து இருக்கும். இது 2 வயதளவில் நேராக மாறும். இரண்டரை வயதளவில் சிறிது வெளிநோக்கி வளையும். 4-6 வயதளவில் கால் நேராக மாறும். சில குழந்தைகளில் முழங்காலுக்கு கீழே உள்ள கால் மிக அதிகமாக உள்நோக்கி வளைந்து காணப்படும் (infantile Blount’s disease). இது எதனால் வருகிறது என கண்டறியப்படாத போதும், மிக இளவயதில் நடக்க ஆரம்பிக்கும் குழந்தைகளில் அதிகம் வருவதாக அறியப்பட்டுள்ளது ( வோக்கரில் பிள்ளைகளை போடுவதை தவிர்ப்பது நல்லது). மிகப் பெரும்பாலானோருக்கு இது தானாகவே 3-4 வயதுகளில் சரியாகும். இதன் அளவைப் பொறுத்து சில குழந்தைகளுக்கு சில braceகள் அணியவேண்டியேற்படும். மிகச் சில குழந்தைகளுக்கு சிறிய சத்திரசிகிச்சை மேற்கொள்ளவேண்டியேற்படும். பதின்மவயதினர் சிலருக்கும் இதேவிதமான வளைவு ஏற்படலாம் ( Adolescent blount disease). இவர்களில் அதிகமானோருக்கு சத்திரசிகிச்சை அவசியமாகும். Dr Ahamed Nihaj MBBS, MD- Orthopaedics

Friday, 5 July 2019

ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.


உலக கிண்ண போட்டிகளின் பின்னர் இலங்கையில் ஒரு போட்டியிலாவது விளையாடிவிட்டு ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின் டராம் நகரில் வைத்து எமது ஊடகவியலாளரிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்...

வாழ்க்கை வாழ்வதற்கே.........!!!!!


மைக்கேல் ஜாக்சன் 150 ஆண்டுகள் வாழ விரும்பினார். தன் வீட்டில் 12 மருத்துவர்களை நியமித்தார், அவர் தினமும் முடி முதல் கால் நகங்கள் வரை பரிசோதிப்பார். உண்பதற்கு முன்பு அவரது உணவு எப்போதும் ஆய்வகத்தில் சோதிக்கப்பட்டது. அவரது தினசரி உடற்பயிற்சி மற்றும் உடற்பயிற்சியைக் கவனிக்க மேலும் 15 பேர் நியமிக்கப்பட்டனர். அவரது படுக்கையில் ஆக்ஸிஜன் அளவைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் இருந்தது. உறுப்பு தானம் செய்ய நன்கொடையாளர்கள் தயாராக இருந்தனர்.. இதனால் அவருக்கு தேவைப்படும்போது உடனடியாக தங்கள் உறுப்பை தானம் செய்யலாம். இந்த நன்கொடையாளர்களின் பராமரிப்பையும் அவர் கவனித்துக்கொண்டார். அவர் 150 ஆண்டுகள் வாழ வேண்டும் என்ற கனவுடன் தொடர்ந்தார். ஐயோ..! அவன் தோற்றான்...!!! 25 ஜூன் 2009 அன்று, தனது 50 வயதில், அவரது இதயம் செயல்படுவதை நிறுத்தியது. அந்த 12 மருத்துவர்களின் நிலையான முயற்சி பலனளிக்கவில்லை. கூட, லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கலிபோர்னியாவைச் சேர்ந்த மருத்துவர்களின் ஒருங்கிணைந்த முயற்சியால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. கடந்த 25 ஆண்டுகளாக மருத்துவர்களின் ஆலோசனையின்றி ஒருபோதும் ஒரு படி கூட முன்னேறாத நபர், 150 ஆண்டுகள் வாழ வேண்டும் என்ற அவரது கனவை நிறைவேற்ற முடியவில்லை. ஜாக்சனின் இறுதி பயணத்தை 2.5 மில்லியன் மக்கள் நேரடியாகப் பார்த்தார்கள், இது இன்றுவரை மிக நீண்ட நேர ஒளிபரப்பு. அவர் இறந்த நாளில், அதாவது. 25 ஜூன் '09 பிற்பகல் 3.15 மணிக்கு, விக்கிபீடியா, ட்விட்டர், AOL இன் உடனடி தூதர் வேலை செய்வதை நிறுத்தினார். கூகூளில் மைக்கேல் ஜாக்சனை மில்லியன் கணக்கான மக்கள் ஒன்றாகத் தேடினர். ஜாக்சன் மரணத்தை சவால் விட்டு ஜெயிக்க முயன்றார். ஆனால் மரணமோ அவருக்கு சவால் விட்டது. இந்த பொருள் முதல்வாத உலகிலுள்ள பொருள்சார் வாழ்க்கை ஒரு சாதாரண மரணத்திற்கு பதிலாக பொருள்முதல் மரணத்தைத் தழுவுகிறது. இதுவே வாழ்க்கை விதி. இப்போது சிந்திக்கலாம். அலங்கரிப்பாளர்கள், வடிவமைப்பாளர்கள் பில்டர்கள் அல்லது பொறியாளர்களுக்காக நாம் சம்பாதிக்கிறோமா..? விலையுயர்ந்த வீடு, கார், ஆடம்பரமான திருமணத்தைக் காண்பிப்பதன் மூலம் நாம் யாரைக் கவர விரும்புகிறோம்...? இரண்டு நாட்களுக்கு முன்பு நீங்கள் கலந்து கொண்ட திருமண வரவேற்பில் உண்ட உணவுப் பொருட்கள் உங்களுக்கு நினைவிருக்கிறதா..? நாம் ஏன் வாழ்க்கையில் ஒரு மிருகத்தைப் போல வேலை செய்கிறோம்..? எத்தனை தலைமுறைகளை நாம் காப்பாற்ற விரும்புகிறோம்..? நம்மில் பெரும்பாலோருக்கு ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் உள்ளனர். நமக்கு எவ்வளவு தேவை, அவர்களுக்கு எவ்வளவு வேண்டும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா..? நம் பிள்ளைகள் அதிகம் சம்பாதிக்க முடியாது என்று நாம் கருதுகிறோமா..? எனில் அவர்களுக்காக கூடுதல் கூடுதல் சேமிக்க வேண்டியது அவசியம்..!!??? வாரத்தில் உங்கள் குடும்பத்தினருடனோ அல்லது நண்பர்களுடனோ சிறிது நேரம் செலவிடுகிறீர்களா..? நீங்கள் சம்பாதித்ததில் 5% நீங்களே செலவிடுகிறீர்களா..? நாம் சம்பாதித்தவற்றோடு வாழ்க்கையில் ஏன் மகிழ்ச்சியைக் காணவில்லை? நீங்கள் ஆழமாக சிந்தித்தால், உங்கள் இதயம் வேலை செய்யத் தவறிவிடும். அவ்வாறு இருந்தால் மனசஞ்சலம், அதிக கொழுப்பு, தூக்கமின்மை போன்றவற்றால் பாதிக்கப்படுவீர்கள். முடிவு: உங்களுக்காக நீங்கள் சிறிது நேரம் செலவிடுங்கள். நம்மிடம் எந்தவொரு சொத்தும் இல்லை.. சில ஆவணங்களில் மட்டுமே நம் பெயர் #தற்காலிகமாக எழுதப்பட்டுள்ளது. #இது_என்னுடைய_சொத்து என்று நாம் கூறும்போது, ​​கடவுள் நம் மீது ஒரு வக்கிர புன்னகையை வீசி விட்டு கடந்து செல்கிறார். ஒரு நபர் தனது கார் அல்லது உடையைப் பார்க்கும்போது ஒரு தோற்றத்தை உருவாக்க வேண்டாம். சிறந்த கணிதவியலாளர்களும் விஞ்ஞானிகளும் பயணத்திற்கு சைக்கிள் அல்லது ஸ்கூட்டரைப் பயன்படுத்தினர். #பணக்காரனாக_இருப்பது_பாவம்_அல்ல, #ஆனால்_பணத்தால்_மட்டுமே #பணக்காரனாக_இருப்பது_பாவம். வாழ்க்கையை கட்டுப்படுத்துங்கள், இல்லையெனில் வாழ்க்கை உங்களை கட்டுப்படுத்தும். வாழ்க்கையின் முடிவில் உண்மையில் முக்கியமான விஷயங்கள் மனநிறைவு, திருப்தி மற்றும் அமைதி. துரதிர்ஷ்டவசமாக, இவற்றை வாங்க முடியாது.

அன்றும் இன்றும் ll


அன்றும் இன்றும் ll
பேராதனை பலகலைகழகத்தில் மலையில் உயரமான இடத்தில் ஒரு பள்ளிவாயல் கட்டப்பட்டு இருக்கு நான் உள்ளே போய் பார்க்கும் ஆசையில் ஒரு முறை ஏறினேன் 1970 களில் எனக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது சில வரூடம்களின் பின் கலாநிதி பதியுதீன் 1977 தேர்தல் தோல்வி யடைந்து அரசும் மாறி. ஜேஆர் இலங்கையில் வரலாறு படைத்த ஶ்ரீ கங்கா சுதந்திரக்கட்சி எட்டு ஆசனத்துடன் ஶ்ரீமாவோ அம்மையார் தோல்வி அடைய, 12 ஆசனம் பெற்ற தமிழர்களின் கட்சிக்கு அண்ணன் அமிர்தலிங்கம் அவர்களுக்கு எதிர்கட்சித்தலைவர் பதவியும் போன பின்னர் கலாநிதி பதி அவர்கள் தனது கம்பளை வீட்டில் ஓய்வாக இருந்தார். அப்போது கம்பளை ஸாஹிராவில் என்று உறவுக்காற ஒரே குடும்ப மூன்று பிள்ளைகள் படித்து வந்தார்கள் 1977 தேர்தலில் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக ஸாஹிரா போகும் போதெல்லாம் கலாநிதி அவர்களை சந்திக்கத்தவறுவது இல்லை. ஒரு நாள் நேரடியாக கேட்டேன் பேராதனை பல்கலைக்கழகத்தில் அந்த மலை உச்சியில் போய் பள்ளிவாயல் கட்டி உள்ளீர்கள் இதில் யாராவது போய் தொழ ஏலுமா? என்று உடனே சொன்னார் சற்று பக்கத்தில் இருக்கும் ஸாஹிரா பாடசாலைக்குப்போய் உயரே பார்த்து விட்டு வாருங்கள் நான் பதில் சொல்கின்றேன் என்றார், அங்கும் அதே போல் ஒரு பள்ளிவாயல் மலை உச்சியில் கட்டப்பட்டு இருந்தது. திரும்பி வந்ததும் சொன்னார் இந்த கண்டி மாநகரம் எங்கு பார்த்தாலும் மலைஉச்சியில் அவர்களது கோபுரம் உண்டு முஸ்லிம்களும் இந்த நாட்டிற்கு வந்தேறு குடிகள் அல்ல தொன்று தொட்ட வரலாறு உண்டு அதனால் நமது வரலாறை அங்கு புரிய வைத்துள்ளேன் அரச செலவில் கட்டி காட்சிக்கு வைத்துள்ளேன். இந்த வேலையை என்னைத்தவிர வேறு யாரும் செய்திருக்க முடியாது இனி அது அரச சொத்து யாரும் அதை ஒன்றும் செய்ய முடியாது என்றார், ஜே ஆர் ஜயவர்த்தன கொண்டுவர இருக்கும் புதிய அரசியல் அமைப்பு இந்த நாட்டை படு குளியில் தள்ளிவிடும் உலகில் இதுவரை யாரும் கொண்டிருக்காத அதிகாரத்தை வைத்திருக்கும்தலைக்கனம் அவரிடம் உண்டு என்றார். அது மட்டுமல்ல 1977 தேர்தல் முடிவு வரத்தொடங்கியதும் நள்ளிரவில் நான் தோல்வி அடைய வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திக்கொண்டு இருந்தேன் இந்த 8 ஆசனத்துடன் 9 ஆக நானும் வந்து இருந்தால் என்னை படாத பாடு படுத்தி விடுவார்கள் என்றார். அன்று கலாநிதி பதியுதீன் செய்ததை இன்று யாராலும் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத நிலையில் இன்று நமது அரசியல் வாதிகள் மட்டு மல்ல இனவெறியும் தலை விரித்து தாண்டவம் ஆடுகிறது அல்லவா? Courtesy: Seyed Ahmed

999 அடி நீள பேப்பரில் குர்ஆனை கைகளால் 62 நாட்களுக்குள் எழுதி உலக சாதனைப்படைத்துள்ளார்


999 அடி நீள பேப்பரில் குர்ஆனை கைகளால் 62 நாட்களுக்குள் எழுதி உலக சாதனைப்படைத்துள்ளார் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கோட்டெடி நிர்மலா தேஜஸ்ரீ என்ற 21 வயது பெண்.! 999 அடி நீள பேப்பரில் குர்ஆனை கைகளால் 62 நாட்களுக்குள் எழுதி உலக சாதனைப்படைத்துள்ளார் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கோட்டெடி நிர்மலா தேஜஸ்ரீ என்ற 21 வயது பெண். அரபு மொழியில் அழகாக calligraphy பேனாவில் பச்சை மற்றும் கருப்பு மையினால் இவர் 2007 ஆம் ஆண்டு எழுதியதை கடந்த 2014 ஜனவரி மாதம் உலக சாதனையாக அங்கிகரித்துள்ளது! யாஅல்லாஹ் இப்பெண்மணிக்கு ஹிதாயத் கிடைக்க அருள் புரிவாயாக.

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள்.

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள். பாருங்கள் பகிருங்கள்