Monday, 19 November 2018


அவசியம் வாசிக்கவும்,முடிந்தால் பகிரவும் என் உள்ளம் குமுறி அழுத தருணம் நான் கடமைபுரியும் வைத்தியசாலையின் ஒரு பிரிவுதான் மனநல சிகிச்சைப்பிரிவு(தெல்லிப்பளை) கடந்த சில நாட்களாக நம் திருமலை மண்ணின் ஒருசில இளைஞர்கள் இந்தப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அது சம்பந்தமாக இதன் காரணங்களை கண்டறிய முற்பட்டபோது எனக்கு கிடைத்த தகவல்கள் என்னில் அழுகையையும்,கவலையையும் நிறைத்தது இன்னுமொரு இளைஞர் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே இந்த தருணத்தை உங்களோடு பகிர்கிறேன் இங்கு அனுமதிக்கப்பட்ட இளைஞர்கள் 20 தொடக்கம் 25 வயதிற்குட்பட்ட திருமலை மண்ணின் இளைஞர்கள் இதற்கான காரணம் போதைப்பொருள் பாவனை மட்டுமே என ஊர்ஜிதப்படுத்தப்பட்டிருந்தது இவர்கள் பாவித்த போதைப்பொருள்கள் கஞ்சா,குளிசைகள்,ஒடிக்கலோன்,ஒருவகை ஜெல் சகோதரர்களே உங்கள் சகோதரனாக உங்களிடம் நான் கேட்பது உங்களை திருந்த சொல்லும் அளவிற்கு எனக்கு தகுதி இருக்கலாம்,இல்லாமல் இருக்கலாம் ஆனால் உங்களையும்,உங்கள் குடும்பத்தையும் ஏதோ ஒரு வகையில் பாதுகாத்துக்கொள்ளுங்கள். அதே நேரம் மார்க்கம் கதைக்கவும் நான் வரவில்லை ஆனால் அதேநேரம் என் இளைஞர் செல்வங்களின் எதிர்காலமும் அவர்களின் குடும்பங்களும் எதிர்காலத்தில் கஷ்டப்படக்கூடாது என்பதற்காகவும்,இறைவனிடத்தில் என் கடமைக்காகவுமே இதனை கேட்டுக்கொள்கிறேன். சாராயத்தைவிட பல மடங்கு மிக மோசமானதே இந்த கஞ்சாவும்,குளிசைகள் பாவனையும் இதன் விளைவு குருகிய காலங்களில் உங்கள் மூளையை மந்த நிலைக்கோ,மனநோயாளிகளாகவோ மாற்றும் என்பது நிச்சயம் உங்களைப்பாதுகாத்துக்கொள்ளுங்கள். இதன் முகவர்களும்,விற்பனையாளர்களும் இதன் மூலம் உழைக்கும் பணம் உங்கள் பரம்பரையை நிச்சயம் நாசமாக்கும்,இப்படி பல இளைஞர்களை காவுகொள்ளும் ஒரு தொழில் தேவைதானா? ஒரு சகோதரனாக உங்களிடம் வேண்டுகிறேன்,உங்கள் காலில் விழுந்தேனும் உங்களை கேட்க விரும்புகிறேன் அல்லாஹ்விற்காக நீங்கள் இந்த தொழிலை விடுவது மட்டுமல்லாது இவ்வளவு காலம் செய்த தவறுகளுக்காக நீங்களே இதனை தடுக்க முன் வந்து இளைஞர்களையும் எங்கள் எதிர்கால சமுதாயத்தையும் பாதுகாப்போம்j

Saturday, 17 November 2018

இலங்கையின் செய்திகளை வேகமாக பெற இந்த பக்கத்தை லைக் செய்யுங்கள், செய்திகளை படியுங்கள் Happy brithday ROSHEN 🎂🎂🎂🎂🎂 சிறந்த நிதான துடுபாட்ட வீரர்


Happy brithday 🎂🎂🎂🎂🎂 சிறந்த நிதான துடுபாட்ட வீரர்

Share share share👉 💊 இது தான் டெங்கு காய்ச்சலோட போக்கு...


💊 இது தான் டெங்கு காய்ச்சலோட போக்கு...
💊 முதல் மூணு நாள் நல்லா உடம்பு சுடும் 💊 அடுத்த மூணு நாள் ஜில்லுனு உடம்பு குளிர்ந்திடும் ஆனா அதுக்கப்பறம் தான் பிரச்சனை ஆரம்பிக்குது பாருங்க... 💊 ரத்தக்கசிவு நடக்க ஆரம்பிக்கறதே 4,5,6 நாட்கள்ல தாங்க..காய்ச்சலோட போக்க பாருங்க.. 💊 முதல் மூன்று நாள் 103-104 டிகிரி இருக்கும் காய்ச்சல் , 4வது நாள் சட்டுனு குறையுது , ரெண்டு நாள் குறையுற காய்ச்சல் திடீர்னு 6வது நாள் 100 டிகிரி அளவுக்கு ஏறுது.. 💊 ஆக, நாம் ஜாக்கிரதையா இருக்க வேண்டியது 4,5,6 நாட்கள் தான் 💊 முதல் மூன்று நாட்கள்ல , உடல் உஷ்ணத்தால உடம்புல இருக்குற நீர் சத்து குறையுது ... நா வரண்டு போறதும் , சிறுநீர் சரியா போகாம இருக்குறது , இதெல்லாம் முதல் மூன்று நாட்கள் இருக்கும். 💊 அடுத்த மூன்று நாட்கள் தான் நமக்கு போர் காலம் ... இதுல தான் ரத்த கசிவு நடக்க வாய்ப்பு இருக்கிறது. ரத்த கசிவு வெளியே பல்லில் ஈறுகளில் இருந்து வெளியேறலாம் .. மலம் கருப்பாக வெளியேறுவது இதெல்லாம் இந்த 4,5,6 நாட்களில் தான் நடக்கும் . ரத்த டெஸ்ட் களில் முதல் மூன்று நாட்கள் எந்த பாதிப்பும் வெளியே தெரியாது ஆனால் 4 ஆம் நாளின் தொடக்கத்தில் இருந்து தட்டணுக்கள் சரிவதை கண்டுபிடிக்கலாம் , 5 ஆம் நாளும் 6 ஆம் நாளும் அதனினும் குறைந்து பிறகு மீளும் 💊 ஆகவே டெங்குவை தெரிஞ்சுக்க ஈசியான மூணு ரூல்ஸ். 💊 ரூல் நம்பர் ஒன்னு டெங்கு ஜுரம் அடிக்கிறது முதல் மூனு நாள். நாலாவது நாள் சட்டுனு குறைஞ்சுச்சுனா அலர்ட் ஆயிடணும் 💊 ரூல் நம்பர் டூ நீர் சத்துதான் டெங்குவோட டார்கெட் , சோ முடிஞ்ச அளவு தண்ணி , ஓ.ஆர்.எஸ், இளநீர், மோர்னு குடிச்சுட்டே இருக்கணும். 💊 ரூல் நம்பர் 3 இதுதான் முக்கியமான விசயம் காய்ச்சல் அடிச்சா இந்த முக்கியமான முதல் மூனு நாள கவுண்டர்ல மருந்து சாப்புட்டு வீணாக்கிட்டு, 4,5,6 ஆவது நாள் ரத்தக்கசிவு நடக்கும் போதும் கண்டுகாகாம இருந்தா, எந்த ஆஸ்பத்திரில சேந்தாலும் காப்பாத்துறது சிரமம் . 💊 இந்த மூணு ரூல்ஸயும் தெரிஞ்சிருந்தா டெங்கு போட்ற ஸ்கெட்ச்ல சிக்காம ஈசியா தப்பிச்சுறலாம்💊 பயனுள்ள தகவல். அனைவருக்கும் பகிருங்கள்.

Wednesday, 7 November 2018

மஹிந்த ராஜபக்சவுக்கு நாம் ஆதரவு என்று வரும் செய்திகளை நான் நிராகரிக்கின்றேன்.


மஹிந்த ராஜபக்சவுக்கு நாம் ஆதரவு என்று வரும் செய்திகளை நான் நிராகரிக்கின்றேன். நானும் எனது கட்சியும், புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் பிரதமருக்கு ஆதரவு என்று வரும் செய்திகளை நான் மறுக்க விரும்புகின்றேன் . பாராளுமன்ற பெரும்பான்மையை புதிய பிரதமர் நிரூபிக்கும்வரை, இந்த பதவி நியமனமானது பாராளுமன்ற ஜனநாயக விழுமியங்களுக்கு முரணானது என்பதே எங்களது தற்போதைய நிலைப்பாடு. #ரஊப்_ஹக்கீம்

Monday, 5 November 2018

உலகின் தலைசிறந்த இடதுகை சுழல் பந்துவீச்சாளரும், 2014ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணத்தை இலங்கை வெல்ல காரணமாக இருந்தவரும் ஆன நட்சத்திர சுழல் வீரருமான ரங்கன ஹேரத் நாளைய டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச அரங்கில் இருந்து ஓய்வு பெறுகின்றார்.


2014 T20 உலகக் கிண்ணம் - இலங்கை அணி செமி பைனல் செல்ல நியூசிலாந்து அணியுடனான லீக் போட்டியில் வென்றே ஆக வேண்டும் என்கிற நிலை. இலங்கை - நியூசிலாந்து அணிகள் இடையிலான போட்டி ஆரம்பமாகின்றது. போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி வெறும் 119 ஓட்டங்களையே பெற்றது. அப்போதைய அதிரடி வீரர்களான பிரன்டன் மெக்கலம், ரோஸ் டெய்லர், கேன் வில்லியம்சன் போன்ற வீரர்களை கொண்டிருக்கும் நியூசிலாந்து அணிக்கு இது பக்கோடா சாப்பிடுவது போன்ற ஒரு வெற்றி இலக்கு. இலங்கை அணி வெறும் 119 ஓட்டங்கள் பெற்ற உடனேயே தோல்வியை தழுவி உலகக் கிண்ணத்தை விட்டு வெளியேறும் என்றே பலரும் நினைத்தனர். எனினும், இந்த நினைப்புக்கள் அனைத்தினையும் தவிடுபொடியாக்கினான் ரங்கன ஹேரத், தான் வீசிய ஒவ்வொரு ஓவரிலும் விக்கெட் எடுத்த ரங்கன ஹேரத் நியூசிலாந்து அணியினை வெறும் 60 ஓட்டங்களுக்குள் மடக்க உதவினார். குறித்த போட்டியில் வெறும் 3 ஓட்டங்களை விட்டுத்தந்து ரங்கன ஹேரத் 5 விக்கெட்டுக்களை சாய்த்தது குறிப்பிடத்தக்கது. ரங்கன ஹேரத் கைப்பற்றிய இந்த விக்கெட்டுக்களாலும், தோல்வியடைய வேண்டிய குறித்த நியூசிலாந்து போட்டியில் வென்றதன் காரணமாகவே இலங்கை அணி 2014ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணம் வென்றது. எமக்கு இப்படியான ஒரு மறக்க முடியாத வெற்றியினைப் பெற்றுத் தந்த சாதனைக் கதாநாயகன் நாளை கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகின்றான். நன்றி தலைவா!

நண்பர்கள் அனைவருக்கும் தீபவாளி வாழ்த்துக்கள்! Happy Diwali Friends!


நண்பர்கள் அனைவருக்கும் தீபவாளி வாழ்த்துக்கள்! Happy Diwali Friends!

Sunday, 4 November 2018

#தென்ஆப்ரிக்கா VS #ஆஸ்திரேலியா


#தென்ஆப்ரிக்கா VS #ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் தென்ஆப்ரிக்கா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள்.

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள். பாருங்கள் பகிருங்கள்