Thursday, 18 October 2018

இலங்கை வரலாற்றில் முதல் ரொக்கட் தயாரித்து சாதனை படைத்த பாடசாலை மாணவன்..!!


இலங்கை வரலாற்றில் முதல் ரொக்கட் தயாரித்து சாதனை படைத்த பாடசாலை மாணவன்..!! வரலாற்றில் முதன்முறையாக இலங்கையில் தயாரிக்கப்பட்ட ரொக்கட் விண்ணில் ஏவப்படவுள்ளது. இலங்கை பாடசாலை மாணவனினால் தயாரிக்கப்பட்டுள்ள ரொக்கட், எதிர்வரும் மாதம் கற்பிட்டியவில் இருந்து விண்ணுக்கு அனுப்பப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை காலமும் இலங்கையில் தயாரிக்கப்பட்ட ரொக்கட் ஒன்று விண்ணுக்கு ஏவப்படவில்லை. எனினும் அந்தக் குறையை மாணவன் ஒருவர் நீக்கியுள்ளார். கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் கல்வி கற்கும் கிஹான் ஹெட்டி ஆராச்சி என்ற மாணவன் ரொக்கட் தயாரித்துள்ளார். இந்த மாணவன் தயாரித்த ரொக்கட் 20 அடி உயரத்தை கொண்டுள்ளதுடன் 25 கிலோ கிராம் நிறையை கொண்டுள்ளது. மணிக்கு 750 கிலோ மீற்றர் வேகத்தில் ரொக்கட் பயணிக்கும் வகையில் இந்த ரொக்கட் தயாரிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்குள் இந்த ரொக்கட் நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில், இதனை தயாரிப்பதற்கான உதவியை தான் இணையத்தின் ஊடாக பெற்றுக் கொண்டதாக கிஹான் குறிப்பிட்டுள்ளார். ரொக்கட் ஒன்றை விண்ணுக்கு அனுபதென்றால் விமானப்படை மற்றும் இராணுவத்தினரின் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும். எனினும் இந்த மாணவனுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதி முழுமையாக கிடைத்துள்ளது. அதற்கமைய நவம்பர் மாதம் கற்பிட்டி விமானப்படை முகாமில் இருந்து இந்த ரொக்கட் விண்ணுக்கு அனுப்பப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. 25 கிலோ மீற்றர் தூரத்திற்கு இந்த ரொக்கட் அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த ரொக்கட்டினை நிர்மாணிப்பதற்கு 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கிஹான் செலவிட்டுள்ளார். அதன் முதலாவது பயணத்திற்கு 9 இலட்சம் ரூபாய் செலவாகும் எனவும், அந்த செலவினை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரொக்கட் தயாரிப்பில் இலங்கை ஈடுபட்டுள்ள அண்டை நாடுகள் உள்பட பல நாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தலாம் என துறைசார் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Wednesday, 17 October 2018


இப்படிக்கு தந்தை இரு பிள்ளைகளையுடைய 23 வயதுடைய இளம் தாயொருவர் தனக்குத் தெரிந்த ஒரு வயது முதிர்ந்த சகோதரியோடு இன்று எமது கல்லூரிற்கு தனது ஆவணங்களை எடுத்துக் கொண்டு தொழில் தேடி வந்தார். திடீரென நேர்முகத் தேர்வுகளைப் பொதுவாக நாம் வைப்பதில்லை. இருப்பினும் அவரது நிலமைகளை கருத்திற் கொண்டு என்னிடம் பேச அனுமதிக்கப்பட்டார். இன்ட வியூவில் அவருக்குரிய தகைமை இருக்கவில்லை என்பதை நான் உணர்ந்தேன். அத்தோடு அந்த இளம் தாய் களைத்துப் போயிருந்ததை அவதானித்தேன். வாழ்வில் போராட்டங்களில் சிக்கி தவிக்கும் ஒருவராக இருக்க வேண்டுமென எண்ணி, நேர காலம் பாக்காது கவுன்ஸிலர் பாத்திரம் ஏற்று, அவரோடு உரையாடத் தொடங்கினேன். நான் ஊகித்த பிரச்சினை அவரிடம். இருந்தது. உயர் தரத்தில் ஒரு வருடம் படித்துக் கொண்டிருந்த போதே அவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. திருமணம் முடித்த நாளிலிருந்து பிரச்சினைக்கு முகம் கொடுத்து வந்துள்ளார். இரு சகோதரியோடுள்ள ஒரு மணமகனையே இவருக்கு மணம் முடித்தது வைக்கப்பட்டிருந்தது. மாப்பிளையின் தாய் கஷ்டப்பட்டு வளர்த்த ஒரே மகன் தங்களை மறந்து மனைவியின் பக்கம் சாய்ந்திடுவார் என்ற பயத்தில் அவரது மனைவியை நெருங்க விடாமல், பேச விடாமல் தடுத்துள்ளார். இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி, மனச் சோர்வுக்கு ஒரு மாதம் மருந்து குடித்து ஓரளவு தேறியுள்ளார். விவாகரத்துக்குப் போய் காதி நீதிமன்றத்தில் சமாதானம் ஆகி, மீண்டும் சேர்ந்துள்ளார். மீண்டும் நண்பர்களோடு சேர்ந்து கூத்தடிப்பதோடு, சம்பளத்தை வீண்விரயம் செய்து, குடும்பத்தை பார்க்காது விட்டதோடு மட்டுமல்ல தொடர்பே இல்லாமலும் அவரது கணவன் தற்போது போய்விட்டார். எனவே, இந்த இளம் தாய் கையறு நிலைக்கு ஆளாகி விட்டார். முதல் பிள்ளை தந்தையின் ஏக்கத்தில் உழல்வதாலும் இவர் பெற்றோரில் தங்கி வாழ நேரிட்டதாலும் தொழில் செய்யும் நிலைக்கு தனது ஆறு மாத இரண்டாவது குழந்தையோடு தள்ளப்பட்டதாலும் வாழ்க்கையில் விரக்தி நிலைக்கு பலவந்தமாக உட்படுத்தப்பட் டதாலும் மேலும் மனச்சோர்வு நிலை அவரிடம் அதிகரிக்க ஏதுவானது. எதிர்காலம் பற்றிய கேள்விக் குறிகளோடு அங்குமிங்கும் அவர் அலைந்து தொழில் தேடுகிறார். கற்கின்ற வயதில் திருமணம் முடித்து கொடுத்ததால் தகைமைகளை பெற்றுக் கொள்ள முடியவில்லை என்றும் அவர் கவலைப்பட்டார். இவ்வாறான நிலைக்கு தறுதலையான கணவனே மூல காரணம். இதற்கு நியாயம் பெற்றுக் கொடுக்க ஊர்களில் எந்த சபைகளும் இல்லை. பள்ளிகளும் இல்லை. இலகுவாக விவாகரத்து இலாபமாக கிடைக்கச் செய்யப்படுவதே தீர்வாக பொதுவாக அமைந்து விடுகின்றது. ஆண்களாலே பொதுவாக அநீதம் இழைக்கப்படும் இந்த அவல நிலை சமூகத்தில் தொடர்ந்த வண்ணமே உள்ளது. இந்த அறப் போரில் ஈடுபட பாரிய வேலைத் திட்டம் ஒன்று ஊர் தழுவிய மட்டத்தில் நியாயமான முறையில் ஏற்படுத்தப்படாத வரை குறிப்பாக பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் தொடர்ந்த வண்ணமே இருக்கும். தகவள் எம். ரிஸான் ஸெய்ன்.

~*அல்லாஹ்வுக்காக இதை படிக்கவும்*~


~*அல்லாஹ்வுக்காக இதை படிக்கவும்*~ ஹிங்குள்ள பகுதியை வசிப்பிடமாக கொண்ட Shalik என்ற சிறுவன் 3மாடி கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து தட்போது மாவனல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளார். தூய்மையான உள்ளங்களே!கன்டிப்பாக நீங்கள் இதை share செய்வீர்கள் என நம்புகிறேன்.இந்த சிறுவனுக்கு குணமடைய வேண்டும் என்று அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்.நீங்கள் யாருக்காக மன்றாடி துஆ செய்கிறீறோ மலக்குமார் உங்களுக்காக துஆ செய்வார்கள்.இதை பொய் என்று நினைக்காமல் எனது அன்புள்ளம் கொண்ட சகோதர சகோதரிகளே நீங்கள் இதனை பகிர்ந்து அவருக்காக பிரார்த்தியுங்கள். அல்லாஹ் உங்களை பாவங்களில் இருந்து தள்ளிவைப்பான்.

இலங்கை அரசாங்க வேலைவாய்ப்பு


🔘இலங்கை அரசாங்க வேலைவாய்ப்பு 🔘 வனசீவராசிகள் பாதுக்காப்பு தினைக்களம் 🔘 க.பொ.த சாதாரன தரத்தில் 6 பாடங்களில் சித்தி போதுமானது 🔘 கீழ்வரும் வெற்றிடங்களை நிரப்புவதற்க்கு நாடு முழுவதும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன அதன் விபரங்களும் கல்வி தகமைகளும் ✔️1. பங்களா பொறுப்பாளர் -க.பொ.த சாதாரன தரத்தில் 6 பாடங்களில் சித்தி -சம்பள அளவுதிட்டம் :-Rs 38,450/= ✔️2. இயந்திர இயக்குனர் -க.பொ.த சாதாரன தரத்தில் 6 பாடங்களில் சித்தி -சம்பள அளவுதிட்டம் :-Rs 38,450/= ✔️3.உதவி பங்களா பொறுப்பாளர் -க.பொ.த சாதாரன தரத்தில் 6 பாடங்களில் சித்தி -சம்பள அளவுதிட்டம் :-Rs 36,410/= ✔️4.வெளிக்கள உதவியாளர் -க.பொ.த சாதாரன தரத்தில் 6 பாடங்களில் சித்தி -சம்பள அளவுதிட்டம் :-Rs 36,410/= ✔️படகு செலுத்துனர் க.பொ.த சாதாரன தரத்தில் 6 பாடங்களில் சித்தி -சம்பள அளவுதிட்டம் :-Rs 38,450/= 🔘விண்ணப்ப முடிவு திகதி:-30.10.2018 🔘இந்த வேலையினது விபரங்கள் மற்றும் விண்ணப்படிவம் தேவையெனின் நீங்கள் #DWC இன் இணையதலத்தில் Search பன்னுங்கள்
🔘நண்பர்களே முடியுமானால் உங்கள் நண்பர்களுக்கு #share பண்ணுங்கள் ஏனையோருக்கு உதவியா இருக்கும்

Monday, 8 October 2018

வரலாற்றில் ஓர் வாழ்க்கை தத்துவம்


வரலாற்றில் ஓர் வாழ்க்கை தத்துவம் 🚢🚢🚢🚢🚢🚢🚢🚢🚢🚢🚢🚢🚢🚢🚢🚢🚢 #டைட்டானிக் கப்பல் மூழ்கிய போது அதனருகில் மூன்று கப்பல்கள் இருந்தனவாம். அதில் ஒரு கப்பலின் பெயர் சாம்சன். அது டைட்டானிக் மூழ்கிக் கொண்டிருந்த இடத்திலிருந்து 7 கி.மீ தொலைவில் இருந்ததாம். டைட்டானிக் அனுப்பிய “காப்பாற்றுங்கள்: என்கிற சமிக்ஞை காட்டும் வெள்ளை விளக்கொளியைப் பார்த்தனர். ஆனால் அதில் இருந்தவர்கள், சீல் எனும் கடல் விலங்கைத் திருட வந்தவர்கள். அதனால் காப்பாற்றப்போய் மாட்டிக் கொண்டால் என்னாவது, நமக்கேன் வம்பு என்று எண்ணி டைட்டானிக்கின் எதிர்த்திசையில் விரைந்து விட்டனர். நம்மில் பலர், நமது பாவச்செயல்களில் மட்டுமே கவனம் செலுத்தி அடுத்தவரின் துன்பங்களைப் பற்றித் துளியும் கவலை படாமல் இருப்போம். இந்த சாம்சன் கப்பல் போல. #அடுத்து கலிஃபோர்னியன் என்ற கப்பல், டைட்டானிக் கப்பலிற்கு 14 கி.மீ தொலைவில் இருந்தது. அக்கப்பலின் கேப்டனும் டைட்டானிக் அனுப்பிய ஆபத்து சமிக்ஞைகளைப் பார்த்தார். ஆனால் அவர்களின் கப்பலைச் சுற்றியும் பனிப்பாறைகள் இருந்தன. இருட்டாகவும், மோசமான சூழலும் இருந்ததால், திரும்பவும் கரைக்கே போய், காலையில் புறப்படலாம் என முடிவெடுத்தனர் மாலுமிகள். உதவி கோரிய கப்பலுக்கு ஒன்றும் ஆயிருக்காது என்று அவர்களே, அவர்களுக்குக் கூறித்தேற்றிக் கொண்டனர். இக்கப்பலைப் போன்றவர்கள் நம்மிடையே இருக்கும்,”நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. சூழல், சரியில்லை, நிலைமை சரியானதும் பார்த்துக்கொள்ளலாம்’ என்று எண்ணுபவர்கள். #மூன்றாவது கப்பல் கர்ப்பாதியா. அது, டைட்டானிக் கிலிருந்து 58 கி.மீ தொலைவில் தெற்கு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தது. அப்போது கப்பலின் கேப்டனுக்கு டைட்டானிக் அனுப்பிய ஆபத்து சமிக்ஞை ரேடியோ மூலம் கேட்டது. அவர் உடனே, மண்டியிட்டு இறைவனிடம் 'எனக்கு வழிகாட்டு' எனப் பிரார்த்தனை செய்து, கப்பலைத்திருப்பி, டைட்டானிக்கை நோக்கி, ஆபத்தான பனிப்பாறைகளிடையே செலுத்தினார். இந்தக் கப்பல்தான் டைட்டானிக்கில் சிக்கியிருந்த 705 பேரைக் காப்பாற்றியது. தடைகளும்,எதிர்ப்புகளும்,ஆபத்துகளும், பொறுப்பைத்தட்டிக் கழித்திட காரணங்களும் நிச்சயம் குறுக்கிடும், ஆனால் அவற்றை மீறிச் செல்பவர்கள் மட்டுமே உலகில் உள்ள மக்களின் இதயங்களில் நாயகர்களாக வாழ்வார்கள்.

Saturday, 6 October 2018

ஸ்ரீ லங்கன் விமான சேவை உலகில் சிறந்த விமான சேவையாக தெரிவு


ஸ்ரீ லங்கன் விமான சேவை உலகில் சிறந்த விமான சேவையாக தெரிவு, அமெரிக்கா-2 ம் இடம், ஜப்பான்-3 ம் இடம். கடந்த செப்டம்பர் மாதத்தில் உரிய நேரத்துக்கு அதிகமான விமான சேவைகளை முன்னெடுத்த சிறந்த விமான சேவை நிறுவனமாக ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. flightstats.com நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்தில் மாத்திரம் 91.37 வீதமான பயணங்களை உரிய நேரத்துக்கு செலுத்தியுள்ளதாக பதிவாகியுள்ளது. ஐரோப்பா, அமெரிக்கா, ஆசியா, மத்திய கிழக்கு போன்ற உலகிலுள்ள முக்கியமான சிறந்த விமான சேவை நிறுவனங்கள் இந்த ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்காவின் விமான சேவை நிறுவனமான டெல்டா விமான சேவை நிறுவனம் இந்த ஆய்வின்படி இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. ஜப்பான் விமான சேவை நிறுவனமான ஏ.எல்.ஏ. விமான சேவை நிறுவனம் 3 ஆம் இடத்துக்கு தெரிவாகியுள்ளது.

#Halal_என்பது_என்ன? சிலர் நினைக்கிறார்கள் ஹலால் என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டுமே சொந்தமென்று, அப்படி அல்ல அதன் அர்த்தம் என்னவென்று தெரிந்தால் மாற்று மத சகோதரர்களும் ஹலாலை தேடி தான் செல்வார்கள். ஒரு மாற்று மத சகோதரரின் பதிவு 👌 தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்! அறியாதவர்கள் அறிந்துக் கொள்ளுங்கள்! புரியாதவர்கள புரிந்துக் கொள்ளுங்கள்! இஸ்லாம் கூறுகின்ற முறையில் (ஹலால்) உயிரினங்களை அறுக்கும்போது அவற்றுக்கு எந்த வேதனையும் தெரியாது என்று சோதனை மூலம் தெரிய வந்துள்ளது. குரல்வளை மிக விரைவாக அறுக்கப்படுவதால் மூளையுடன் உள்ள தொடர்பு அறுந்து போகின்றது. இதனால் அப்பிராணிகளால் வலியை உணர முடியாது. இரத்தத்தை வெளியேற்றுவதற்காக உடல் துடிக்கிறது; வேதனையால் அல்ல என்பதை சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இஸ்லாமிய ஹலால் முறையில் விலங்குகள் அறுக்கப்பட்டபோது, முதல் மூன்று வினாடிகளுக்கு E.E.Gயில் எந்த மாற்றமும் தென்படவில்லை. அறுக்கப்படுவதற்கு முன்னிருந்த நிலையிலேயே அது தொடர்ந்து நீடித்தது. விலங்குகள் அறுக்கப்படும்போது அவை வலியினால் துன்பப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது.

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள்.

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள். பாருங்கள் பகிருங்கள்