Wednesday, 26 December 2018

மாவனல்லை சம்பவம் தொடர்பாக............


மாவனல்லை சம்பவம் தொடர்பாக களத்தில் இருந்து கிடைத்த தகவல்களுக்கு அமைய, (7:10 pm:26/12/2018) 1.சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இப்றாஹிம் மெளலவியின் இன் புதல்வர் அல்ல. 2.கைது செய்யப்பட்டவர் பலத்த காயங்களுக்கு உட்பட்டு இப்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 3.பொலிசார் குறித்த புத்தர் சிலை உடைப்பிற்கும் முஸ்லிம்களுக்கும் தொடர்பு இல்லை என்று கூறியதாகவும் எனினும் அவதானமாக இருக்குமாறும் பள்ளிவாயல்களின் ஊடாக மக்களுக்கு அறிவிறுத்தப்பட்டுள்ளது. 4.குறித்த செயற்பாடு ஆனது ஒரு குறித்த மத இயக்கத்தினரால் செய்யப்பட்டது என்று கூறப்பட்டாலும் அதன் உண்மைத் தன்மை இதுவரை தெரியவரவில்லை. 5.பொலிஸார் மற்றும் விசேடபாதுகாப்பு படையினர் நகரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி உள்ளனர். 6.குறித்த கைதுசெய்யப்பட்டவரின் சார்வாக பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சட்டத்தரணி ஒருவர் ஆஜராக உள்ளார். 7.இதுவரை 4 பேர் காணமல் போகி உள்ளதாக ஒரு தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து அவர்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. 8.ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து மாவனல்லையில் பிக்குகள் மற்றும் உலமாக்களின் பங்குபற்றுதலின் ஊடான சந்திப்பு ஒன்று நடைப்பெற்றுள்ளது. 9.சமூக அமைப்புக்கள் சம்பவம் குறித்து அதீத கவனம் செலுத்தி வருகின்றனர். மேலும் இது குறித்த பல்வேறு வதந்திகள் பரவுவதால் ,அது குறித்து அவதானமாக நடந்து கொள்ளுங்கள்.

No comments:

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள்.

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள். பாருங்கள் பகிருங்கள்