Tuesday, 28 August 2018

இங்கிலாந்துந்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அனைவரும் தூய இஸ்லாத்தை ஏற்று கொண்டனர்.....


இங்கிலாந்துந்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த அனைவரும் தூய இஸ்லாத்தை ஏற்று கொண்டனர்.. இவர்களுடைய வாழ்வினை இம்மையிலும் மருமையிலும் சிறப்பாக அமையுத்து வைப்பாயாக..#ஆமீன்.

இதை படித்தால் கண் கலங்கி போவீர்கள்


இதை படித்தால் கண் கலங்கி போவீர்கள் ஒரு நாள் காலைப் பொழுது, ஒரு பெரிய மூட்டையை சுமந்து கொண்டு ஒரு வயது முதிர்ந்த மூதாட்டி மக்கா நகரின் ஓரமாக தள்ளாடித் தள்ளாடி வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே நபிகள் நாயகம் (ஸல்) வந்தார்கள். பிறருக்கு உதவும் உள்ளம் கொண்ட நாயகம் (ஸல்) அவர்கள் வழமை போல அம்மூதாட்டியை அணுகி, “தாயே..! நீங்கள் விரும்பினால் உங்கள் துணி மூட்டைகளை என்னிடம் தாருங்கள். நான் அதை உங்களுக்காக சுமந்து வருகிறேன்” என்று சொன்னார்கள். “ரொம்ப நன்றி” என்று கூறி அம்மூதாட்டி துணி மூட்டையை நபிகள் நாயகம் (ஸல்)அவர்களிடம் கொடுத்தாள். “திரு மக்காவை விட்டு எங்கே அம்மா போகிறீர்கள்..?” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். தன்னோடு உரையாடுவது முஹம்மது நபிகள் (ஸல்) அவர்கள் என்பதை அறியாத அம்மூதாட்டி “மக்கமா நகரில் முஹம்மது என்கின்ற ஒரு மனிதர் வந்துள்ளாராம். அவர் இறைவனின் இறுதித் தூதராம். முந்தைய வேதங்கள் எல்லாம் செயலிழந்து போய்விட்டதாம். அனைவரும் அவரது நேரான வழியை பின்பற்ற வேண்டும் என்கிறாராம். நான் ஒரு யஹூதிப் பெண். எனது மார்க்கத்தை நான் எப்படி விட முடியும்..? எங்களது ஜனங்கள் அவரைப் பற்றி பலதும் கூறுகிறார்கள். அவர் இருக்கும் மக்காவில் வாழ எனக்கு விருப்பமில்லை. அது தான் ஊரை விட்டே கிளம்பி விட்டேன்” என அம்மூதாட்டி கூறினார். அதைக் கேட்டு கொண்டு அமைதியாக வந்தார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். வழியெல்லாம் அம்மூதாட்டி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி குறை கூறி கொண்டு வந்தார். பொறுமையின் சிகரமான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொறுமையோடும், புன்முறுவல் பூத்தவர்களாகவும் நடந்து சென்றார்கள். அப்போது அம்மூதாட்டி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சிரிப்பில் பிரகாசத்தையும் முகத்தில் பணிவையும் அவதானித்தார். கடைசியில் அம்மூதாட்டி சொன்ன இடம் வந்தது. மூட்டையை இறக்கி அம்மூதாட்டியிடம் கொடுத்துவிட்டு “நான் போய் வருகிறேன் தாயே” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விடைபெற்றார்கள். மிகவும் மகிழ்ச்சியடைந்த அம்மூதாட்டி, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பார்த்து “இந்த சில்லறைகளை வைத்துக்கொள்ளுங்கள்” என்று கூறி சில திர்ஹம்களை நீட்டினார். அதற்கு, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “வேண்டாம் அம்மா, நான் இதனை பணத்திற்காக செய்யவில்லை” என கூறி உறுதியாக மறுத்துவிட்டார்கள். கொள்ளைக் கூட்டம் நிறைந்த இந்த ஊரில் இப்படியும் ஒரு நல்ல மனம் கொண்ட மனிதரா...? என்று வியந்த அம்மூதாட்டி “கருணை உள்ளம் படைத்தவரே, உங்கள் பெயரையாவது சொல்லி விட்டு செல்லுங்கள்” என்று கூறினார். அப்போது நற்குணத்தின் தாயகம், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் புன்முறுவல் பூத்தவர்களாக “நீங்கள் யாருடைய போதனைக்குப் பயந்து இந்த ஊரை விட்டு போகிறீர்களோ, அந்த முஹம்மது நான் தான்” என்று கூறினார்கள். அதனை கேட்ட அம்மூதாட்டி அதிசயித்து நின்றார். அவரின் கண்கள் கண்ணீரை சொரிந்தன. இவ்வளவு நற்குணம் படைத்த ஒருவரையா சரியாக புரிந்துக்கொள்ளாமல் நான் தப்பாக பேசினேன் என்று உள்ளத்தால் அழுதார். நிச்சயமாக நற்குணத்தின் சிகரமான இந்த புனிதர் வழிகெடுப்பவராக இருக்க முடியாது என்பதை உணர்ந்த அம்மூதாட்டி அடுத்த கணம் இஸ்லாத்தைத் தழுவினார். இதில் படிக்க வேண்டிய பல பாடங்கள் உள்ளன. 1. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், மூதாட்டிக்கு உதவும் போது அவளது சாதி சமயத்தைப் பார்க்கவில்லை. அங்கே மதத்தை தாண்டி மனிதாபிமானம் என்றால் என்ன என்பதை உலகிற்கு எடுத்து சொன்னார்கள். 2. தன்னை பற்றி அம்மூதாட்டி கூறிய வசை மொழிகளை பெருந்தன்மையோடு சகித்துக் கொண்டார்கள். இதில் பொறுமை, சகிப்புத்தன்மை, மற்றவரை மன்னிக்கும் மனப்பான்மை ஆகியவற்றை உலகிற்கு எடுத்து காட்டினார்கள். 3.கடைசியாக தன்னை எதிரியாக பார்த்த ஒரு பெண்ணுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருப்பி கொடுத்தது - “அன்பு”. கடைசியில் எதிரி அன்பரானார். அன்பினால்: வேதனை சுகமாகும். அன்பினால்: கசப்பு இனிமையாகும். அன்பினால்: இருள் வெளிச்சமாகும். இஸ்லாமிய அழைப்பாளன்...

“மகளே உனக்கு முன் நான் சொர்க்கம் போய்விடுவேன்” (கண்ணீர் மல்கச் செய்யும் உண்மை சம்பவம்)


https://youtu.be/eBGlUA0GRB8 “மகளே உனக்கு முன் நான் சொர்க்கம் போய்விடுவேன்” (கண்ணீர் மல்கச் செய்யும் உண்மை சம்பவம்) பராஆ எகிப்தை சேர்ந்த 10 வயது சிறுமி. பெற்றோர்களுடன் ஸஊதி அரேபியாவில் வசித்து வந்தாள். அவரது பெற்றோர்கள் ஒரு வைத்தியசாலையில் வேளை செய்து வந்தனர். மகிழ்ச்சி அந்தக் குடும்பத்தில் நிறைந்திருந்தது. பராஆ மிகத் திறமையான சிறுமி இந்த 10 வயதிலேயே குர்ஆனை அதன் சட்டங்களோடு மனனமிட்டிருந்தாள். அந்த மகிழ்ச்சியான குடும்பத்தில் ஒரு சோக சம்பவம். எந்த விதமான முன்னடையாளமுமின்றி தாய் நோய் வாய்ப்படுகிறார். வைத்திய பாிசோதனையில் கென்ஸர் அதன் இறுதி நிலையில் இருப்பதாக வைத்தியர்கள் தொிவித்தனர். இந்த விடயத்தை மகளிடத்தில் தொிவிக்க வேண்டாம் என தாய் கேட்டுக்கொண்டாள். இந்த இளம் வயதில் அதைத் தாங்கும் சக்தி அவளுக்கு இல்லை சொல்ல வேண்டாம் என்று வேண்டிக் கொண்டார். மகள் தினம் தோறும் வைத்தியசாலைக்குப் போய் தாயிடம் அமர்ந்து குர்ஆனை ஓதுவாள். ஒரு முறை தன் சின்ன மகளிடம் மறைமுகமாக தனது மரணத்தை சொல்லி வைக்க தாய் நினைத்தாள் - “பராஆ! உனக்கு முன் நான் சொர்க்கம் போய்விடுவேன். நீ ஓதும் குர்ஆனை தொடர்ந்து ஓது. அதுதான் உன்னை பாதுகாக்கும்ம்ம்...” என்ற கூறி வைத்தாள். முழுமையாக தாயின் நோக்கத்தைப் புாியாது விட்டாலும் சில மாற்றங்களை உணர்ந்தாள் பராஆ. ஒரு நாள் காலை வைத்தயாசலையிலிருந்து தந்தைக்கு ஓர் அழைப்பு வந்தது. செய்தி என்ன என்று முழுமையாகத் தொியாத நிலையில் பராஆவை அழைத்துக் கொண்டு வைத்தியசாலைக்குச் சென்றார் தந்தை. பராஆவிற்கு அதிர்ச்சியான செய்தி எதுவும் தொியக் கூடாது என்ற நோக்கில் “பராஆ! நீ வாகனத்திற்குள் இருந்துகொள். இதோ வருகிறேன்” என்று சொல்லிவிட்டு பதட்டத்துடன் வேகமாக வீதியைக் கடந்தார். ஆனால்.................... பராஆவின் இரு கண்களுக்கு முன்னாலேயே தந்தை வேகமாக ஒரு வாகனத்தில் மோதுண்டு விழுகிறார். அழுகையோடு பராஆ வீதிக்கு ஓடி வந்து தந்தையின் உடலைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுகிறாள். ஆம் தந்தை உயிரை இழந்தார். பராஆவை வேதனையை அதிகாிக்க இருந்த அடுத்த கவலையான செய்தியை வைத்தியர்கள் மறைத்து விட்டனர். ஆனாலும் எத்தனை நாட்கள் மறைக்கலாம் 5 நாட்களில் தாயின் உடல் மண்ணறை நோக்கி சுமந்து செல்லப்படும் செய்தியை அவளுக்குத் தொிவித்தார்கள். கதறியழுதாள் பராஆ. உறவினர்களின்றி ஸஊதியிலே தனித்துப் போன பராஆவை எகிப்தில் அவளது உறவினர்களிடம் அனுப்ப நண்பர்கள் ஆலோசித்தனர். ஆனால்... சில நாட்களில் திடீரென பராஆ நோய்வாய்ப்பட்டாள். வைத்தியாசாலைப் பாிசோதனையில் மிக மோசமான கென்ஸர் தாக்கியுள்ளது என வைத்தியர்கள் தொிவித்தார்கள்.இந்த செய்தி பராஆவுக்கு தொிய வந்ததும் புன்னகைத்தாள். “எனது தந்தையும் தாயையும் பார்க்கப் போறேன்” என்று எல்லோருக்கும் முன்னால் ஆனந்தத்துடன் கூறினாள். செய்தியறிந்த ஸஊதி தனவந்தர் ஒருவர் பராஆவை தனது முழு செலவிலும் யுகேயிற்கு அனுப்பி மருத்துவம் பார்க்க ஏற்பாடு செய்தார். ஆனால் அங்கு கொண்டு செல்லப்பட்ட பராஆவின் நோய் முற்றிக்கொண்டே வந்தது. இறுதியில் அந்த இளம் உடலின் இரு கால்களும் வெட்டப்பட்டன. சில மாதங்களில் பராஆவைஅல்லாஹ் தன் பக்கம் அழைத்துக் கொண்டான். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். ஆனாலும் ... அந்த இளம் பிஞ்சு வைத்தியசாலையில் இருந்த காலத்தில் அனைத்து மீடியாக்களும் தொடர்பு கொண்டன. அனைத்தையும் யுடியுபில் நீங்கள் காணலாம். அந்த சின்ன மகள் ஓதிய ஓதல்கள் கவிதைகள் அனைவரையும் அழ வைத்தன. ஆம் உங்களையும் அழவைக்கும் கேட்டுப்பாருங்கள். படிப்பினை பெறுவோம்..! (இது 2014ஆம் ஆண்டு வெளியான செய்தி) மீல் பரிசோதனை இதனை அனைவருக்கும் பகிர்ந்து அவர்களுடைய மண்னறைக்கு நன்மைகளை சேர்ப்போம். யா அல்லாஹ் இவர்களை கபூல் செய்து உன்னுடைய மேலான சுவர்க்கத்தை வழங்குவாயாக! https://youtu.be/eBGlUA0GRB8 (By.m.t.m.waseem)

குவைத்திலுள்ள #Shaimaa என்ற சகோதரி உலகிலுள்ள அனைவரையும் #பிராத்தனை வேண்டியுள்ளார்:


#குவைத்திலுள்ள #Shaimaa என்ற சகோதரி உலகிலுள்ள அனைவரையும் #பிராத்தனை வேண்டியுள்ளார்: அவர் #புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார்.😭😥ஆனாலும் அவர் அனைத்தையும் தாங்கி சிரித்த முகத்துடன் தன் நம்பிக்கையுடன் காணப்படுகிறார்.👏👍 எதையும் தாங்கும் தைரியத்தையே இது காட்டுகிறது.💪 இவர் விரைவில் குணமடைய எல்லோரும் துஆ பிரார்த்தனை செய்வோம்,ஆமீன் 🤲 🤲 🤲

உலகக் கிண்ணக் கரம் போட்டி, சம்பியன் ஆகியது இலங்கை - 2 முஸ்லிம் வீரர்களும் பங்களிப்பு இந்திய கரம் அணியைத் தோல்வியடையச் செய்து ஆண்களுக்கான உலகக் கிண்ணக் கரம் போட்டித் தொடரில் சம்பியன் கிண்ணத்தை இலங்கை அணி வென்றுள்ளது. நேற்று முன்தினம் தென்கொரியாவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணியை 2 -1 என்ற செட் கணக்கில் இலங்கை அணி வெற்றி பெற்றது. சமில் குரேயின் தலைமையில் நிசாந்த பெர்னாந்து, மொஹமட் சஷீட், உதேஷ் சஷிக ஆகியோர் இலங்கை அணி சார்பாக இத்தொடரில் பங்குபற்றினர். இத் தொடரின் மகளிர் பிரிவில் இலங்கை கரம் அணி இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டது. யஷிகா ராகுபெத்தவின் தலைமையிலான இலங்கை அணி இறுதிப் போட்டயில் இந்திய அணியிடம் 3--–0 என்ற செட் கணக்கில் தோல்வியுற்றது. ஜோசப் ரொஷிடா, வலனி லியனகே, மதுஷா ராமநாயக்க இலங்கை சார்பாக இத் தொடரில் பங்குபற்றினர். இந்த போட்டிகளுக்கான இலங்கை அணியில் பிரபல தேசிய தரத்துடன் கூடிய வீர, வீராங்களைகள் இடம்பெற்றனர். அணியில் இடம்பெறும் 8 பேரில் 6 பேர் சிரேஷ்ட வீரர்களாவர், அவர்கள் சர்வதேச அனுபவம் உள்ளவர்களாவர். ஆண்கள் அணியின் சமில் தர்ஷன குரே (தலைவர்) (செலான் வங்கி) நிஷாந்த பெர்னாண்டோ (இலங்கை கடற்படை), சஹீட் ஹில்மி (ரோயல் கல்லூரி) உதேஷ் சந்திமா பெரேரா (இலங்கை விமானப்படை) ஆகியோர் இடம்பெற்றனர் பெண்கள் அணியில் யஷிகா ராஹுபுத்த (தலைவலி) (இலங்கை கடற்படை) சலனி லக்மாலி லியனகே (இலங்கை இராணுவம்) ஆகியோர் இடம்பெற்றனர். மொஹமட் ஷெரிப்தீன் மற்றும் மதுவந்தி குணதாச ஆகிய இருவரும் மாற்று வீர, வீராங்கனையாக பெயரிடப்பட்டனர். இலங்கை கரம் சம்மேளனத்தின் தலைவர் பராக்கிரம பஸ்நாயக்க மற்றும் சம்மேளனத்தின் பிரதித் தலைவர் பிரின்ட்லி விக்கிரமசிங்க ஆகியோர் இந்த சுற்றுலாவுக்கான அதிகாரிகளாக சென்றனர். 2012 இல் உலக கரம் சம்பினாக வெற்றி பெற்ற நிஷாந்த பெர்னாண்டோ மற்றும் 2014 மாலைதீவிலும் 2016 இல் பிரிட்டனிலும் இரு தடவைகள் ஸ்வின் லீக் சம்பியனாகத் தெரிவான சமில் தர்ஷன குரே ஆகியோர் முன்னைய வருடங்களின் சர்வதேச கரம் பொட்டிகளில் விளையாடி இலங்கைக்கு பெருமை பெற்றுக் கொடுத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை,இந்தியா ,பாகிஸ்தான் ,மாலைதீவு,கொரியா, ஜப்பான்,அமெரிக்கா மற்றும் இற்கிலாந்து ,பிரான்ஸ் ,ஜேர்மன் ஆகிய நாடுகள் அடங்கலாக 21 நாடுகள் பங்கேற்றன.

கலஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கைக்குழந்தையொன்று வைத்திகளின் பொடுபோக்காள் மரணம்,பொது மக்கள் ஆவேசம்

கலஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கைக்குழந்தையொன்று மரணித்ததை அடுத்து அங்கு கூடிய ஊர் மக்களால் வைத்தியசாலையருகில் பதற்ற நிலை உருவாகியுள்ளது. மூன்றரை வயது குழந்தையொன்றுக்கு சிகிச்சையளிப்பதில் ஏற்பட்ட தாமதமே மரணத்துக்குக் காரணம் என கூடியிருந்தோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். சுமார் 700 பேர் வரை அங்கு கூடியிருந்த நிலையில் பொலிசார் தலையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. The Health, Nutrition and Indigenous Medicine Minister Dr. Rajitha Senaratne has ordered the Director General of Health Services, Dr. Anil Jasinghe to conduct a proper investigation into an incident at Galaha rural hospital in Gampola where a woman was scolded and assaulted by an attendant. According to media reports, the woman, who has taken her four-year-old sick child to the Galaha rural hospital seeking medicine for child’s illness, was scolded by the female doctor for not taking off shoes before entering the consultation room. The doctor has asked an attendant to throw the mother and the child out and the attendant has physically assaulted the mother. The victimized woman has been admitted to the Kandy General Hospital for treatment. The Incident has happened on 16th July. The Health Minister has ordered the Director General of Health Services to conduct an inquiry and submit a report within two weeks. The Minister has given instructions to take appropriate disciplinary action against the female doctor and the attendant if there was any wrongdoing. It has been reported that the Galaha police are conducting investigations into the alleged assault. අද පෙරවරුවේ ගලහ රෝහලේ පුතිකාර ලබා ගැනීමට රැගෙන ගිය කුඩා දරැවෙකු රෝහලේදී මිය යෑම නිසා කෝපයට ජනතාව රේහලට අලාභ හානි කර ඇති අතර වෛද්‍යවරුන් ගේ නොසැලකිලිමත් කමින් එම කුඩා දරැවා මිය ගොස් ඇති බව වාර්තා වෙි !

Monday, 27 August 2018

BUY YOUR OWN TENSUN ORIGINAL TREVEL POWER ADAPTER.....4 in 1 Check this out: Tensun Travel Adapter, International Power Adapter for European Product... buy link https://www.amazon.com/dp/B071FSX1JT/ref=cm_sw_r_wa_awdb_t1_.wgHBb522YYR6

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள்.

மரணித்த ஒரு மனிதரை இஸ்லாமிய முறைப்படி கபனிட்டு அடக்கம் செய்யும் முறைகள். பாருங்கள் பகிருங்கள்